Wednesday 31 July 2019

IOT Questions and Answers – Proximity Sensor

1. Which sensor can detect nearby objects?
a) Proximity sensor
b) Humidity sensor
c) Touch sensor
d) Pressure sensor
Answer: a
Explanation: A proximity sensor is a sensor able to detect the presence of nearby objects without any physical contact. A proximity sensor often emits an electromagnetic field or a beam of electromagnetic radiation, and looks for a change in the return signal.

2. The monitoring of machines, gears and objects are achieved by which sensor?
a) Humidity sensor
b) Proximity sensor
c) Touch sensor
d) Pressure sensor

Answer: b
Explanation: The monitoring of machines, gears and objects are achieved precisely by the IOT(INTERNET OF THINGS) wireless proximity sensors. They use in industries ranging from robotics to machine tools, from measuring instruments to assembly lines, from food sector to chemical industry, etc.

3. Which proximity sensor detects metal objects?
a) Capacitive Proximity Sensor
b) Magnetic Proximity Sensor
c) Ultrasonic Proximity Sensor
d) Inductive Proximity Sensor

Answer: d
Explanation: Different proximity sensor targets demand different sensors. The different types of proximity sensors are: Inductive, Capacitive, Ultrasonic, Photoelectric, Magnetic, etc.

4. Which proximity sensor indicates level?
a) Inductive Proximity Sensor
b) Capacitive Proximity Sensor
c) Magnetic Proximity Sensor
d) Ultrasonic Proximity Sensor

Answer: a
Explanation: Capacitive Proximity Sensor indicates level and the fill amount present in containers, behind covering. They are used to track all objects including non-metallic ones.

5. Which proximity sensors are used in automotive?
a) Inductive Proximity Sensor
b) Capacitive Proximity Sensor
c) Magnetic Proximity Sensor
d) Ultrasonic Proximity Sensor

Answer: d
Explanation: They are widely used in automotive such as parking sensors. Ultrasonic Proximity Sensors are used in automotive.

6. Which proximity sensor detects positioning of an object?
a) Inductive Proximity Sensor
b) Capacitive Proximity Sensor
c) Optical Proximity Sensor
d) Magnetic Proximity Sensor

Answer: c
Explanation: They recognize, for non-contact and precisely, the positioning of the object.

7. Are proximity sensors used in retail settings?
a) True
b) False

Answer: a
Explanation: A retailer can use a customer’s proximity to a product to send deals and coupons directly to their smart phone.

8. VCNL4100CT allows the proximity detection up to________
a) 2 meter
b) 1 meters
c) 0.5 meters
d) 1.5 meters

Answer: b
Explanation: VCNL4100CT expand the range of applications by introducing a high-power IR emitter that allows proximity detection up to one meter.

9. Which protocol is used by proximity sensor?
a) I2C
b) SPI
c) UART/USART
d) CAN

Answer: a
Explanation: Microcontroller communication is via standard I2C, where the host can set measurement parameters and request results. If desired, programmable threshold allow the VCNL4100 to interrupt the host once threshold values are crossed, thereby minimizing device polling.

10. Does proximity sensor have a temperature sensor in it?
a) True
b) False
Answer: a
Explanation: A buit-in temperature sensor is used by the signal processing circuitry to provide stable outputs across the temperature range -40 oC to +85oC.

11. Which device generates output signal when metal objects are either inside or entering into sensing area.
a) Capacitive Proximity
b) Magnetic Proximity
c) Inductive proximity
d) Parallel Proximity

Answer: a
Explanation: Device which generates output signal electrical signal when metal objects are either inside or entering into its sensing area from an direction.

12. ________ detects metals but along with it can also detect resins, liquids.
a) Inductive proximity
b) Capacitive Proximity
c) Magnetic Proximity
d) Parallel Proximity

Answer: b
Explanation: Capacitive Proximity can also detect metals but along with it can also detect resins, liquids, powders, etc. This sensor working can vary accordingly covering material, cable longness, noise sensitivity.
advertisement

13. _________ sensors have no electrical noise effect and it can work DC.
a) Inductive proximity
b) Capacitive Proximity
c) Magnetic Proximity
d) Parallel Proximity

Answer: c
Explanation: Magnetic proximity sensors have no electrical noise effect and it can work on DC, AC, AC/DC.

14. What is the sensing range for magnetic proximity sensors?
a) 120mm
b) 90mm
c) 150mm
d) 100mm

Answer: a
Explanation: Magnetic proximity sensors have no electrical noise effect and it can work on DC, AC, AC/DC. These types of sensors have highest sensing range upto 120mm.

15. What is the sensing range for capacitive proximity sensors?
a) 150mm
b) 25mm
c) 120mm
d) 100mm

Answer: c
Explanation: Capacitive Proximity can also detect metals but along with it can also detect resins, liquids, powders, etc. This sensor working can vary accordingly covering material, cable longness, noise sensitivity.Its maximum range of sensing is 25mm.

Differences between in vitro, in vivo, and in silico studies

There are three broad categories of experiments: in vitro studies, in vivo studies, and in silico studies. Each study type has conveniences and liabilities. Understanding the liabilities of study types offers insight into the validity of researchers' conclusions.

In vitro studies

In vitro (Latin for within the glass) refers to the technique of performing a given procedure in a controlled environment outside of a living organism. Many experiments in cellular biology are conducted outside of organisms or cells. One of the abiding weaknesses of in vitro experiments is that they fail to replicate the precise cellular conditions of an organism, particularly a microbe. To cite one example among many, the lysates or extracts from culture-grown spirochetes do not reflect antigens expressed in the mammalian Borrelia:

Because of this, in vitro studies may lead to results that do not correspond to the circumstances occuring around a living organism.

Until the last several years, efforts to detect and identify microorganisms in the human body have depended almost exclusively on in vitro studies. As a result, many researchers began to assume that chronic diseases were not caused by microbes. The net effect of all this was that the understanding of pathogens in disease was driven by the study of well-known, easy-to-culture microbes–which, as it turns out, represent the vast minority of bacteria in the human body. By one estimate, 99.6% of the species in the human microbiota have not or cannot be characterized through in vitro techniques.2)

Another example of a shortcoming of in vitro studies relates to concentrations of molecules, especially as they compete for nuclear receptors. For example, the vitamin D metabolite, 1,25-D, exerts its effects at 30 picograms per milliliter, or 0.000000000003 grams per milliliter.

In vivo studies

In vivo (Latin for “within the living”) refers to experimentation using a whole, living organism as opposed to a partial or dead organism. Animal studies and clinical trials are two forms of in vivo research. In vivo testing is often employed over in vitro because it is better suited for observing the overall effects of an experiment on a living subject.

While there are many reasons to believe in vivo studies have the potential to offer conclusive insights about the nature of medicine and disease, there is a number of ways that these conclusions can be misleading. For example, a therapy can offer a short-term benefit, but a long-term harm.

In silico studies

In silico is an expression used to mean “performed on computer or via computer simulation.” The expression in silico was first used in public in 1989 in the workshop “Cellular Automata: Theory and Applications” in Los Alamos, New Mexico. Pedro Miramontes, a mathematician from National Autonomous University of Mexico (UNAM), presented the report “DNA and RNA Physicochemical Constraints, Cellular Automata and Molecular Evolution.” In his talk, Miramontes used the term “in silico” to characterize biological experiments carried out entirely in a computer.

Although in silico studies represent a relatively new avenue of inquiry, it has begun to be used widely in studies which predict how drugs interact with the body and with pathogens. For example, a 2009 study used software emulations to predict how certain drugs already on the market could treat multiple-drug-resistant and extensively drug-resistant strains of tuberculosis.3)

There is a variety of in silico techniques, but the two that are discussed the most in connection with the Marshall Protocol are:

Bacterial sequencing techniques – As an alternative to in vitro methods for identifying bacteria, various in silico methods which sequence bacterial DNA and RNA have been developed. The most commonly used use is polymerase chain reaction (PCR). PCR takes a single or few copies of a piece of DNA and increases it across several orders of magnitude, generating millions or more copies of a particular DNA sequence. PCR has allowed researchers to detect bacteria associated with a variety of conditions with increasingly high sensitivity.
Molecular modeling – Part of the Marshall Pathogenesis is based on in silico work, demonstrating how drugs and other substances interact with the nuclear receptors of cells. In particular, Trevor Marshall, PhD, has used computer-based emulations to show that 25-D, one of the vitamin D metabolites, and Capnine, a substance produced by bacteria, turn off the Vitamin D Receptor. These conclusions have since been validated by clinical observations.
Whole cell simulations – As described here, researchers have built a computer model of the crowded interior of a bacterial cell that—in a test of its response to sugar in its environment—accurately simulates the behavior of living cells

SS JOACHIM & ANNE, PARENTS OF THE B. V. M. (MEMORIAL)

*FIRST READING*
A reading from the Book of Exodus (Exodus 20: 1-17)
The law was given through Moses (John 1:17)

In those days: God spoke all these words, saying, “I am the Lord your God, who brought you out of the land of Egypt, out of the house of bondage. You shall have no other gods before me.  You shall not make for yourself a graven image, or any likeness of anything that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth; you shall not bow down to them or serve them; for I the Lord your God am a jealous God, visiting the iniquity of the fathers upon the children to the third and the fourth generation of those who hate me, but showing mercy to thousands of those who love me and keep my commandments. “You shall not take the name of the Lord your God in vain; for the Lord will not hold him guiltless who takes his name in vain. “Remember the sabbath day, to keep it holy. Six days you shall labour, and do all your work; but the seventh day is a sabbath to the Lord your God; in it you shall not do any work, you, or your son, or your daughter, your manservant, or your maidservant, or your cattle, or the sojourner who is within your gates; for in six days the Lord made heaven and earth, the sea, and all that is in them, and rested the seventh day; therefore the Lord blessed the sabbath day and hallowed it. “Honour your father and your mother, that your days may be long in the land which the Lord your God gives you. “You shall not kill.” “You shall not commit adultery.” “You shall not steal.” “You shall not bear false witness against your neighbour.” “You shall not covet your neighbour’s house; you shall not covet your neighbour’s wife, or his manservant, or his maidservant, or his ox, or his donkey, or anything that is your neighbour
_______________________________________
*RESPONSORIAL PSALM*
Psalm 19:8.9.10.11 (R. John 6:68c)
*R. Lord, you have the words of eternal life.*

The law of the Lord is perfect;
It revives the soul.
The decrees of the Lord are steadfast;
they give wisdom to the simple. *R.*

The precepts of the Lord are right;
they gladden the heart.
The command of the Lord is clear;
it gives light to the eyes. *R.*

The fear of the Lord is pure,
abiding forever.
The judgements of the Lord are true;
they are, all of them, just. *R.*

They are more to be desired than gold,
than quantities of gold.
And sweeter are they than honey,
Than honey flowing from the comb. *R.*
______________________________________
*ALLELUIA* 
Luke 8:15
Alleluia. Blessed are those who, hearing the word, hold it fast in an honest and good heart, and bring forth fruit with patience. Alleluia.
______________________________________
*GOSPEL*
A reading from the holy Gospel according to Matthew (Matthew 13: 18-23)
He who hears the word and understands it, bears fruit

At that time: Jesus said to his disciples, “Hear then the parable of the sower. When any one hears the word of the kingdom and does not understand it, the Evil One comes and snatches away what is sown in his heart; this is what was sown along the path. As for what was sown on rocky ground, this is he who hears the word and immediately receives it with joy; yet he has no foot in himself, but endures for a while, and when tribulation or persecution arises on account of the word, immediately he falls away. As for what was sown among thorns, this is he who hears the word, but the cares of the world and the delight in riches choke the word, and it proves unfruitful. As for what was sown on good soil, this is he who hears the word and understands it; he indeed bears fruit, and yields, in one case a hundred fold, in another sixty, and in another 
*Today’s Reflection*
Worldly cares and selfish ambitions do not allow the word of God to thrive in us because the word demands undivided attention and commitment. In its application. The word needs a certain constancy, diligence and care. We cannot serve both God and mammon. It would seem as though life is a continuous battle between the light and darkness in us. The commandments of the lord are clear on what our choice must be. The precepts of the Lord gladden the heart; therefore, our choice must be no other than God. When God is sought first, everything else is given. When the world is sought first, everything else is lost.


உன் தந்தையையும் தாயையும் மதித்து நட

*விடுதலைப் பயணம் 20: 1-17*

*“உன் தந்தையையும் தாயையும் மதித்து நட”*

*நிகழ்வு*

சில ஆண்டுகட்கு முன்னம், சவூதி அரேபியாத் தலைநகர் ரியாத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு, வயதான தந்தையை யார் வைத்துகொள்வது என்பது பற்றியது. 

விசாரணை தொடங்கியதும், அந்த வயதான தந்தையின் மூத்த மகன் பேசத் தொடங்கினார்: “எனக்கு இப்பொழுது என்பது வயது ஆகின்றது... கடந்த நாற்பது ஆண்டுகளாக நான் என்னுடைய தந்தையைப் பராமரித்து வருகிறேன். வீட்டில் மூத்தவன் என்பதாலும் இதுவரைக்கும் நான்தான் என் தந்தையைப் பராமரித்து வந்தேன் என்பதாலும், இனிமேலும் நானே என்னுடைய தந்தையைப் பராமரிக்க எனக்கு அனுமதியளிக்குமாறு நீதிபதி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.”

மூத்தமகன் தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொன்ன பின்பு, இளையமகன் தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கத் தொடங்கினார்: “என்னுடைய தந்தைக்கு என் அண்ணனும் நானும் இரண்டு பிள்ளைகள். இருவர்க்கும் பத்து வயது வித்தியாசம். இதில் என்னுடைய அண்ணன் கடந்த நாற்பது ஆண்டுகளாக என் தந்தையைப் பராமரித்து வருகின்றார். இப்பொழுது அவர்க்கு வயதாகிவிட்டது என்பதாலும், இத்தனை ஆண்டுகள் அவர் என் தந்தையைப் பராமரித்து வந்திருக்கின்றார் என்பதாலும் இனிமேல் என் தந்தையை நான் பராமரிப்பதற்கு எனக்கு அனுமதி தாருங்கள்.”

இருதரப்புவாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஒருகணம் ஆடிப்போய்விட்டார். “இத்தனை ஆண்டுகள் நான்தான் தந்தையைப் பராமரித்திருக்கிறேன். அதனால் இனிமேலும் நான் அந்தக் கடமையைத் தொடர்ந்து செய்வேன்’ என்று சொல்லும் மூத்த மகனோடு தந்தையை அனுப்பி வைப்பதா? இல்லை, ‘மூத்தவரால் தந்தையை இனிமேலும் பராமரிக்க முடியாது. அதனால் தந்தையைப் பராமரிப்பதற்கு நான்தான் சரியான ஆள்’ என்று சொல்லும் இளையமகனோடு தந்தையை அனுப்பி வைப்பதா?” என்று நீதிபதி ஒருநிமிடம் குழம்பித் தவித்தார். பின்னர் ஒரு தீர்க்கமான முடிவிற்குப் பின் தீர்ப்பினை இவ்வாறு வெளியிட்டார்:

“மூத்த மகன் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தந்தையைப் பராமரித்து வந்திருக்கின்றார் என்பதாலும் அவருடைய மூப்பின் காரணமாக இனிமேலும் அவரால் தந்தையைப் பராமரிக்க முடியாது என்பதாலும் தந்தையைப் பராமரிக்கின்ற பொறுப்பினை இளைய மகனிடம் இந்த நீதிமன்றம் ஒப்படைக்கின்றது.”

இத்தீர்ப்பைக் கேட்டதும் மூத்த மகன் நீதிபதியை நோக்கி, “நான் என்னுடைய தந்தையைப் பராமரிக்க முடியாமல் செய்ததன்மூலம் என்னை விண்ணக வாசலிலிருந்து வெளியே தள்ளிவிட்டீர்களே!” என்று கண்ணீர்விட்டு அழுதார். அவரோடு சேர்ந்து அந்த நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேரும் கண்ணீர்விட்டு அழுதார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு, நீதிபதி, “என்னுடைய பணிவாழ்க்கையில் இப்படியொரு வழக்கை நான் சந்தித்ததே இல்லை” என்றார். 

வயதான பெற்றோர்களை இங்கும் அங்கும் ஏன், முதியோர் இல்லத்திற்கும் அனுப்பி வைக்கும் பிள்ளைகட்கு மத்தியில், தங்களுடைய தந்தையைப் பராமரிப்பதற்குப் போட்டிபோட்ட அந்த இரண்டு வயதான அண்ணன் தம்பிகளின் செயல்பாடு நம்மை ஆழமாகச் சிந்திக்க அழைக்கின்றது. இன்றைய முதல் வாசகம், தாய் தந்தையை மதித்து நட என்று சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*பத்துக்கட்டளைகளுள் ஒன்றான ‘தாய் தந்தையை மதித்து நட’ என்ற கட்டளை* 

ஆண்டவராகிய கடவுள், மோசேயிடம் பத்துக்கட்டளைத் தருகின்றார். இந்தப் பத்துக் கட்டளைகளுள் ஒன்றாக இருப்பதுதான், ‘தாய் தந்தையை மதித்து நட’ என்ற கட்டளை. பழைய ஏற்பாடும் சரி, புதிய ஏற்பாடும் சரி தாய் தந்தையை மதித்து நடக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை பல இடங்களில் மிக அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்கின்றது. அதிலும் குறிப்பாக தாய் தந்தையை அடிக்கின்றவரும் சபிக்கின்றவரும் கொல்லப்படவேண்டும் என்றும் (விப 21: 15,17) பெற்றோர்க்குக் கீழ்ப்படியுங்கள் (எபே 6: 1) என்றும் சொல்கின்றது. இப்படி இருக்கையில் நாம் நம்முடைய தாய் தந்தையை மதித்தும் அவர்கட்குக் கீழ்ப்படிந்தும் நடக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டியதாக இருக்கின்றது.
*தந்தையை (தாயை) மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்*

தாய் தந்தையை மதித்து நடப்பது, அவர்களுடைய முதுமையில் அவர்களைப் பேணிக்காப்பது பிள்ளைகளின் கடமை என்று சொல்லும் இறைவார்த்தை, அப்படி அவர்களை மதித்து நடப்பதால் என்னென்ன ஆசி நமக்குக் கிடைக்கின்றது என்று அழகாக எடுத்துச் சொல்கின்றது.

சீராக்கின் ஞான நூல் தந்தையரை மதிப்போர் பாவங்கட்குக் கழுவாய் தேடிக்கொள்கிறார்கள் என்றும் அன்னையை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போர்க்கு ஒப்போவர். இன்னும் பல ஆசிகளைப் பெறுவர் (சீரா 3: 3-4) என்றும் எடுத்துச் சொல்கின்றது. ஆகையால், நாம் இறைவனிடமிருந்து பல்வேறு விதமான ஆசிகளைப் பெறுவதற்கு நம் தாய் தந்தையை மதித்து நடப்பதும் அவர்களைப் பேணிப் பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து வாழ்வது நல்லது. 

*சிந்தனை*

‘தந்தைக்குக் காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்கட்குக் கழுவாயாக இருக்கும்’ (சீரா 3: 14) என்கின்றது இறைவார்த்தை. ஆகையால், நாம் நம்முடைய பெற்றோர்களை மதித்து நடந்து, அவர்களுடைய முதுமையில் அவர்களைப் பேணிப் பாதுகாப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.     


புனிதர்கள் சுவக்கீம், அன்னா தூய மரியாவின் பெற்றோர் நினைவு l

*நிகழ்வு* 

இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எழுதப்பட்ட, திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத தூய யாக்கோபு நற்செய்தியில் சொல்லப்படும் செய்தி.

மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம், அன்னமாளுக்கு திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆனபின்பும் குழந்தைப் பேறு இல்லை. இருந்தாலும் அவர்கள் இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் மரியாவின் தந்தையாகிய ஜோக்கிம் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று, நாற்பது நாட்கள் நோன்பிருந்து இறைவனிடம் ஜெபித்து வந்தார். அப்போது வானதூதர் அவருக்குத் தோன்றி, “ஜோக்கிம்! உன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டுவிட்டது, உன் மனைவி ஒரு மகளைப் பெற்றெடுப்பார்” என்று சொல்லிவிட்டு மறந்து போனார். அன்னமாளுக்கும் வானதூதர் தோன்றி அதே செய்தியைச் சொன்னார். வானதூதர் சொன்னது போன்று பத்தாம் மாதத்தில் அன்னம்மாள் ஒரு மகவைப் பெற்றெடுத்தார். அவர்தான் மரியா.

*வாழ்க்கை வரலாறு*

மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம் அன்னம்மாளைக் குறித்து விவிலியத்தில் எங்கும் காணக்கிடைக்கவில்லை, மேலே சொல்லப்பட்ட யாக்கோபு நற்செய்தியில்தான் அவர்களைப் பற்றிய செய்தி காணக்கிடக்கிறது. ஜோக்கிம் என்றால் ‘கடவுள் தயார் செய்கிறார்’ எனப் பொருள், அன்னம்மாள் என்றால் ‘அருள்’ எனப் பொருள்படுகின்றது. அந்த நற்செய்தியின் படி, ஜோக்கிம் அன்னம்மாள் தம்பதியர் கடவுளுக்கு அஞ்சி நடக்கின்றவர்களாக, ஜெபிக்கின்ற தம்பதியராக வாழ்ந்து வந்தார். எந்தளவுக்கு என்றால், இருபது ஆண்டுகளுக்கு மேலாகவும் அவர்களுக்கு குழந்தை இல்லாது இருந்தாலும், அவர்கள் இறைவனிடத்தில் ஜெபிப்பதற்கு மறக்கவில்லை, அனுதினமும் அவர்கள் இறைவனிடத்தில் ஜெபித்து வந்தார்கள். அந்த ஜெபத்தினாலேயே மரியாவைப் பெற்றெடுத்தார்கள்.

அடுத்ததாக ஜோக்கிம் அன்னம்மாள் இருவரும் தாராள உள்ளத்தினராய் வாழ்ந்து வந்தார்கள். எப்படியென்றால் தங்களுடைய வருமானத்தை மூன்று பக்தியாகப் பிரித்து அதில் ஒரு பகுதியை எருசலேம் திருக்கோவிலுக்கும், இன்னொரு பகுதியை ஏழைகளுக்கு உதவி செய்வதற்கும், மூன்றாவது பகுதியை தங்களுக்கென பயன்படுத்தியும் வந்தார்கள். அவர்கள் ஒருபோதும் தாங்கள் பெற்ற செல்வம் தங்களுக்கானது மட்டும் அல்ல, அது பிறருக்கானது என்று வாழ்ந்ததனால்தான்   இறைவனுடைய கடைக்கண் பார்வை அவர்கள்மீது பட்டது. ‘நம்மோடு இருப்பவர்களை நாம் பராமரித்துக்கொண்டால், இறைவன் நம்மைப் பராமரிப்பார் என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.

மூன்றாவதாக, ஜோக்கிமும் அன்னம்மாளும் நன்றியுள்ள தம்பதியராக வாழ்ந்து வந்தனர். இறைவன் அவர்களுக்கு அவருடைய முதிர்ந்த வயதில் குழந்தைப் பேற்றைத் தந்தார். அதற்காக அவர்கள் தங்களுடைய வாழ்நாள் எல்லாம் நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள். கடவுள் தந்த குழந்தையை கடவுளுக்கே அர்ப்பணித்து, தங்களுடைய நன்றியுணர்வை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இவ்வாறு அவர்கள் கடவுளுக்கு உகந்த தம்பதியராய் வாழ்ந்து, சிறந்த பெற்றோருக்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார்கள். 

ஜோக்கிம் அன்னம்மாள் விழா தொடக்க காலங்களிலிருந்தே இருந்து வந்திருக்கிறது. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் ஜஸ்டினியன் என்பவர் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற இடத்தில் இந்த புனிதர்களுக்கு முதல்முறையாக ஆலயம் ஒன்றைக் கட்டினார். அதன்பிறகு புனித எலேனா என்பவர் ஜோக்கிம் அன்னம்மாள் வாழ்ந்த இல்லத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டினார். ஆனால் அது முகமதியர்களால் கைப்பற்றப்பட்டு, பள்ளிக்கூடமாக மாறத்தொடங்கியது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆறாம் சிக்ஸ்துஸ் என்ற திருத்தந்தை என்பவர் ‘மரியா ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைத் (நவம்பர் 21) தொடங்கி வைத்து, ஜோக்கிம் அன்னம்மாள் இருவரும் தங்களுடைய குழந்தை மரியாவை  கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து, அவரை இறைப்பணிக்காக அர்ப்பணித்தனர் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார். 

திருச்சபையின் ஒருசில மரபுகள் மற்றும் ஓவியங்கள், ஜோக்கிம் அன்னம்மாள் இருவரும் இயேசுவின் பிறப்புக்கு முன்பே இறந்துவிட்டார்கள் எனச் சொல்லும். எப்படியிருந்தாலும் அவர்கள் உலக மீட்பராம் ஆண்டவரைப் பெற்றெடுத்த அன்னை மரியாவைப் பெற்றெடுத்தவர்கள், வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் ஆண்டவரின் தாயைப் பெற்றெடுத்த தாய், தந்தையர் அவர்கள். அதற்காக நாம் ஆண்டவரைப் போற்றிப் புகழவேண்டும்.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம் அன்னம்மாளின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*1. சிறந்த பெற்றோர்களுக்கு எடுத்துக்காட்டு*

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்யிலாளர் தேபெஸ் நகரைச் சேர்ந்த கிரேட்ஸ் (Crates of Thebes) என்பவர். இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார். காரணம் இவருடைய போதனை மக்களின் உள்ளத்தைத் தைப்பது போன்று இருக்கும். இவருடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் குறிப்பாக பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நீதிநெறிகளை, ஒழுக்கநெறிகளைப் போதிக்காமல் அவர்களுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது, எப்பி பொருள் ஈட்டுவது என்றே கற்பித்து வந்தார்கள். இதைப் பார்த்து சினம்கொண்ட கிரேட்ஸ் என்ற அந்த மெய்யியலாளர் ஒருநாள் ஊரில் இருந்த மலைமீது ஏறி, “பெற்றோர்களே! நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நீதி நெறிகளைப் போதிக்காமல், அவர்களுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்று போதிக்கிறீர்கள், உங்கள் பிள்ளைகளைவிட அவர்கள் சம்பாதிக்கும் பணம்தான் பெரிது என்றா நினைக்கிறீர்கள்?” என்று அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்தார். 

அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் கூட பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை நீதிநெறியில், ஒழுக்க நெறியில் கடவுளுக்கு உகந்த வழியில் வளர்க்காதது மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கின்றது. இவர்கள் அனைவரும் ‘பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்கள்’ என்பதை மறந்து போனார்கள். ஆனால் இவற்றிற்கெல்லாம் முற்றிலும் மாறாக, முன்மாதிரியான பெற்றோராய் இருந்து, தங்களுடைய மகளை இறைவழியில் வழிநடத்தியவர்கள் ஜோக்கிமும் அன்னம்மாளும் என்று சொன்னால் அது மிகையாகாது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்” (மத் 7:17) ஆம், ஜோக்கிமும் அன்னமாவும் எப்படிப்பட்டவர்கள் என்பவர்கள் என்பதை மரியாவைக் கொண்டே அறியலாம். மரியா தூயவராக, மாசற்றவராக, கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவராக, எளியவருக்கு இரங்குபவராக, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்பவராக விளங்கினார் என்றால் இத்தகைய பேறும் புகழும் மரியாவின் பெற்றோரான ஜோக்கிம் மற்றும் அன்னமாளுக்குத்தான் போய் சேரும். அவர்கள்தான் தங்களுடைய குழந்தைக்கு முன்மாதிரியாக இருந்து, அவரை இறையன்பிலும், பிறரன்பிலும் வளர்த்தெடுத்தார்கள். ஆகவே, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் இருந்து, அவர்களை கடவுளுக்கு உகந்த பிள்ளையாக வளர்த்தெடுப்பது அவர்களுடைய கடமையாகும். 

மாவீரன் நெப்போலியன் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டான். “நம்முடைய பிரான்சு நாட்டில் நல்ல குடிமகன்கள் உருவாக வேண்டுமென்றால் நல்ல தாய்மார்கள் உருவாகவேண்டும்”. நல்ல தாய்மார்கள் மட்டுமல்ல, தந்தையர்கள் உருவாகினால்தான் நல்ல குடிமக்கள் உருவாவார்கள். ஆகவே, மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம் அன்னம்மாளின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நாம் முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துகாட்டுவோம், அவர்களை இறைவழியில் நடத்துவோம், அதன்வழியாக இறையருள் 


தூய ஷார்பெல் மஹ்லூப் வாழ்க்கை வரலாறு

*தூய ஷார்பெல் மஹ்லூப் 

_“அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்._

*வாழ்க்கை வரலாறு*

ஷார்பெல், லெபனான் நாட்டில் உள்ள பே-குவா-கப்ரா என்னும் இடத்தில்  1828 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய  தந்தை இறந்து போனார். எனவே இவர் இவரது மாமாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

ஷார்பெல் சிறுவயது முதலே பக்தியில் சிறந்துவிளங்கி வந்தார். இவரிடமிருந்து விளங்கிய பக்தியைப் பார்த்துவிட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். இவர் வளர்ந்து பெரியவராகிய போது மேபுங் என்னும் இடத்தில் இருந்த துறவற மடத்தில் சேர்ந்து, கல்விகற்று 1859 ஆம் ஆண்டு, அதாவது தன்னுடைய இருபத்தியோறாவது வயதிலே குருவாக மாறினார். 

குருவாக மாறிய பின்பு, ஷார்பெல் தன்னுடைய குருத்துவ  வாழ்வின் பெரும்பாலான நாட்களை தனிமையிலும் ஜெபத்திலும் தவத்திலும் செலவழித்து வந்தார்; கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இவருடைய ஜெப வாழ்வு, துறவுமடத்தில் இருந்த பலருக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது. சிலகாலம் மேபுங் துறவுமடத்தில் இருந்த ஷார்பெல், அதன்பிறகு வேறொரு இடத்திற்குச் சென்று, அங்கு ஒரு துறவுமடம் அமைத்து, அதில் ஜெப தவ வாழ்வில் ஈடுபட்டு வந்தார்.

புதிய இடத்தில், ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்துவந்த மிகப்பெரிய துறவியான தூய மரோன் என்பவரின் முன்மாதிரிகையைப் பின்பற்றி முன்பைவிட ஜெபத்திற்கும் தவத்திற்கும் ஒறுத்தல் முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தார். இது மட்டுமல்லாமல், கட்டாந்தரையில்தான் படுத்து வந்தார், ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்டு வந்தார். இப்படி அவர் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளைச் செய்து வந்ததால், அவருடைய உடல்நலம் குன்றியது. இதனால் அவர் படுத்த படுக்கையாகி 1898 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1977 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய ஷார்பெலின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். 

*1. ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோம்*

தூய ஷார்பெலின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுத்தருகின்ற மேலான சிந்தனை, நாம் அனைவரும் ஜெபிக்கக்கூடிய மக்களாக இருக்கவேண்டும் என்பதுதான். அவர் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டு ஜெபம் செய்து வந்தார் என்பதை அவருடைய வாழ்க்கைக் குறிப்பிலிருந்து நாம் அறிந்துகொள்கின்றோம். நாம் அவர் அளவுக்கு ஜெபிக்கவில்லை என்றாலும் ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வது தேவையான ஒன்றான இருக்கின்றது.

இன்றைய சூழலில் ஜெபிப்பதனால் ஏதாவது பலன், நன்மை கிடைக்குமா? என்று ஒருசிலர் கேட்கலாம். ஜெபிப்பதனால் எத்தகைய நன்மையை நாம் பெற்றுக்கொள்கின்றோம் என்பதை விளக்க ஒரு நிகழ்வு.

சில ஆண்டுகளுக்கு முன்பாக, அட்லாண்டிக் பெருங்கடலில் போய்க்கொண்டிருந்த ஒரு நைஜீரிய எண்ணெய் கப்பலானது பனிப்பாறையில் மோதி மூழ்கிப்போனது. அந்தக் கப்பலில் பதிமூன்று பேர் பயணம் செய்திருந்தனர். அவர்கள் அனைவருமே இறந்துபோயிருப்பர் என எல்லாரும் நம்பினார்கள். இதற்கிடையில் அந்தக் கப்பலில் சமைப்பவராக இருந்த ஹாரிசன் என்பவர், தான் ஒரு இராட்சதக் குழாயினுள் போவதையும் தன்னுடைய உடல் குளிரில் உறைந்துகொண்டிருப்பதையும் நன்றாகவே உணர்ந்தார்.  உடனே அவர் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தைப் பற்றி தன்னுடைய மனைவிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தார். 

இன்னொரு பக்கம் எண்ணெய் கப்பல் பனிப்பாறையில் மோதிவிட்டது என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால், கப்பலில் பயணம் செய்த அனைவருமே இறந்துபோயிருப்பர் என்றுதான் அவர்கள் நினைத்துக்கொண்டு மீட்புப் பணியைத் தொடங்கினார். அவர்கள் மீட்புப் பணியைத் தொடங்கிய சிலமணி நேரத்திற்குள் ஒருவருடைய கையானது தண்ணீருக்குள் நீண்டுகொண்டிருப்பதைப் பார்த்தார்கள். உடனே அந்த மீட்புக் குழுவில் இருந்த ஒருவர் அந்தக் கையைப் பிடித்து இழுத்தபோது, அந்தக் கையானது இவருடைய கையைப் பிடித்துக்கொண்டு மேலே வந்தது. அப்போதுதான் அந்த மனிதர் (ஹாரிசன்) உயிரோடு இருப்பது தெரிய வந்தது. சிறுது நேரத்தில் மீட்புக் குழுவினர் அவரை மேலே இழுத்துக்கொண்டு வந்து, அவர்மீது வெந்நீர் ஊற்றி, அவருக்கு ஆக்ஜிசன் பொறுத்த, அவர் பிழைத்துக் கொண்டார்.

எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. உடனே அவர்கள் அவரிடம், “உன்னால் மட்டும் எப்படி இந்தக் குளிரில் மூன்று நாட்களும் தாக்குபிடிக்க முடிந்தது?” என்று கேட்டதற்கு அவர் அவர்களிடம், “நான் கடலுக்குள் மூழ்கத் தொடங்கியபோது செய்தியை அலைப்பேசி வழியாக என் மனைவியிடம் சொல்ல, அவள் எனக்காக தொடர்ந்து ஜெபித்து வந்தாள். அந்த ஜெபத்தின் பயனாகவே உயிர்பிழைத்தேன்” என்றார்.

ஜெபம் வல்ல காரியகளைச் செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.  ஆகவே, தூய ஷார்பெல்லின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஜெப வீரர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



அந்தியோக்கு நகர தூய மார்கரேட் வாழ்க்கை வரலாறு

_“யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகின்றோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கிறது (1 கொரி 1: 22,23)._

*வாழ்க்கை வரலாறு*

இன்று நாம் நினைவுகூரும் மார்கரேட், அந்தியோக்கு நகரில் இருந்த ஒரு பிறமத குருவினுடைய மகளாகப் பிறந்தார். இவர் வளர்ந்து பெரியவராகியபோது கிறிஸ்தவப் போதனைகளால் தொடப்பட்டு, கிறிஸ்தவ மறையைத் தழுவினார். இதை அறிந்த மார்கரேட்டின் தந்தை அவரை வீட்டைவிட்டே துரத்திவிட்டார். இதனால் மார்கரேட் வீட்டைவிட்டு வெளியே சென்று, ஆடுமேயத்து பிழைத்து வந்தார்.

மார்கரேட் பேரழியாக இருந்தார். எனவே அவருடைய அழகில் மயங்கிய பலரும் அவரை மணந்துகொள்ள முன்வந்தார்கள். ஆனால் மார்கரேட்டோ யாரையும் மணந்துகொள்ள முன்வரவில்லை. இந்நிலையில் ஒலிப்ரயுஸ் என்பவன் மார்கரேட்டை எப்படியாவது மணந்துகொள்ளத் தீர்மானித்தான். அதனால் அவன் மார்கரேட்டிடம் சென்று, அவரை வற்புறுத்திக் கேட்டான். ஆனால் மார்கரேட்டோ தன்னுடைய முடிவில் மிக உறுதியாக இருந்தார். இதனால் சினம்கொண்டவன் அவரை, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருகின்றார் என்று ஆளுநனின் போட்டுக்கொடுக்க, அவன் அவரைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யத் தொடங்கினான்.

மார்கரேட் இவ்வாறு சிறையில் அடைபட்டு, சித்ரவதையை அனுபவித்துக் கொண்டிருந்த தருணத்தில், சாத்தான் இராட்சதப் பாம்பு வடிவில் வந்து, அவரை விழுங்கப் பார்த்தது. ஆனால் அவர் தன்னுடைய கையில் பிடித்திருந்த சிலுவையோ பாம்பை இரண்டாகக் கிழித்துப் போட்டது. இதைப் பார்த்த வியந்துபோன சிறைக்கைதிகள் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். இச்செய்தி ஆளுநனின் செவிகளை எட்ட, அவன் மார்கரேட்டை எரிகின்ற எண்ணெய் கொப்பறையில் தூக்கிப் போட்டான், அது ஒன்றும் செய்யவில்லை. இதனால் அவன் மார்கரேட்டின் தலையை வெட்டிக் கொன்று போட்டான். இவ்வாறு மார்கரேட் தான் கிறிஸ்துவின் மீது விசுவாசத்திற்காக கொல்லப்பட்டார்.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*  

தூய மார்கரேட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். 
  
*1. சிலுவை மீட்பின் சின்னம்* 

தூய அந்தியோக்கு நகர மார்கரேட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, நமக்கு மேலே சொல்லப்பட்ட உண்மை மிகத் தெளிவாக விளங்குகின்றது. மார்கரேட் சிறையில் அடைபட்டிருந்த தருணத்தில் பாம்பு வடிவில் இருந்த சாத்தானோ அவரை விழுங்க நினைத்தபோது, மார்கரேட் தன்னுடைய கையில் பிடித்திருந்த சிலுவையால் அதனை இரண்டு துண்டாக்கினார். இங்கே சிலுவை மார்கரேட்டுக்கு சாத்தானுடைய பிடியிலிருந்து விடுவித்து, வாழ்வினைத் தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 

தூய மார்கரேட்டின் வாழ்க்கையில் நடந்தது போல, நம்முடைய வாழ்விலும் அதிசயங்கள் நடைபெறும். எப்போது என்றால், நாம் சிலுவையின் மகிமையையும் மகத்துவத்தையும் உணர்கின்றபோது. பல நேரங்களில் நாம், நம்முடைய நெற்றியில் அடிக்கடி சிலுவை அடையாளம் வரைவதாலோ என்னவோ அதனுடைய முக்கியத்துவத்தை உணராமலே இருக்கின்றோம். என்றைக்கு நாம் சிலுவையை நம்முடைய வெற்றியின் சின்னமாக, மீட்பின் சின்னமாகப் பார்க்கின்றோமோ, அன்றைக்கு நாம் அதன்வழியாக பெற்றுக்கொள்ளக் கூடிய ஆசிர்வாதங்கள் ஏராளம்.

இடைக்காலத்தில் கீழை நாடுகளின்மீது முகமதியர்களின்  படையெடுப்பு அதிகமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் யாராரெல்லாம் அவர்கள் கையில் அகப்பட்டார்களோ (கிறிஸ்தவர்கள் உட்பட) அவர்கள் அனைவரையும் முஸ்லீம்களாக மாற்றினார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க கிறிஸ்தவர்கள் தீவிரமாக யோசித்தார்கள். அப்போது யாரோ ஒருவர் ‘முகமதியர்களுக்கு சிலுவை அடையாளமே பிடிக்காது. ஆகையால் ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களுடைய நெற்றியிலே இரும்பை நன்றாகச் சூடாக்கி, சிலுவை அடையாளம் வரைந்துகொண்டால், அதனைப் பார்க்கின்ற  எதிரிகள் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்கள்’ என்று சொல்ல, அந்த யோசனை பலருக்கும் பிடித்துப் போனது.

எனவே அவர்கள் அனைவரும் இரும்பைச் சூடாக்கி, தங்களுடைய நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து கொண்டார்கள். ஒருசிலர் மட்டும் இரும்பைச் சூடாக்கி, நெற்றியில் சிலுவை அடையாளம் வரைவதா? அதெல்லாம் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டனர். இதனால் முகமதியரின் படையெடுப்பு நிகழ்ந்த போது யாராருடைய நெற்றில் சிலுவை அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தனவோ அவர்கள் யாவரும் விடப்பட்டு, அடையாளம் பொறிக்கப்படாதவர்கள் யாவரும் இழுத்துக்கொண்டு போகப்பட்டு, முகமதியர்கள் ஆக்கப்பட்டார்கள். இது ஒரு வரலாற்றுச் செய்தி

இங்கே சிலுவை மக்களுக்கு பாதுக்காப்பினைத் தந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. நமது வாழ்விலும் சிலுவையின் வழியாக சிம்மாசனத்தை அடையலாம்.

ஆகவே, தூய மார்கரேட்டைப் போன்று, நமது வாழ்வில் சிலுவையின் மகத்துவத்தை உணர்ந்து வாழ்வோம், எப்போதும் இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


கர்ம வீரர் காமராஜர் குற்றாலம் குளியல்

*காமராஜர் குற்றாலம் குளியல்*... 
காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, ஒருமுறைஎண்ணை தேய்த்துக் கொண்டு, குற்றால அருவிக்குச்சென்றாராம். 
அருவியில் யாரும் குளித்துக்கொண்டிருக்கவில்லையாம்.
மக்கள் கூட்டம் ஒரு ஓரமாக காவலர்களால்
தடுத்தி நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஏன்யா அருவி காலியா இருக்கு? சுற்றுலாப்
பயணிகள் யாரும் குளிக்கலையா?என்று 
கேட்டிருக்கிறார்...
இல்லைங்கய்யா,, முக்கியஸ்தர்கள் வந்தால்,யாரையும் அருவியில் அனுமதிப்பதில்லை, இது வெள்ளைக்காரன் காலத்திலிருந்து வரும்
வழக்கம் என்றனராம் அதிகாரிகள்.
உடனே காமராஜர் கோபம் கொண்டு, அது வெள்ளைக்காரன் ஆட்சி.
இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சியைய்யா, மக்களுக்காகத்தான் நாம் இருக்கிறோமே ஒழிய நமக்காக மக்கள் இல்லை. உடனே அருவியில் குளிக்க மக்களை அனுமதிங்கய்யா என்று சொல்லிவிட்டு, மக்களோடு மக்களாகக் குளித்து மகிழ்ந்திருக்கிறார்.
*அதனால்தான் அவர் இன்றைக்கும் கர்ம வீரர் காமராஜர் என்று உள்ளன்போடு மக்களால் அழைக்கப்படுகிறார்.*

உட்ரெக்ட் நகர தூய பிரடெரிக் வாழ்க்கை வரலாறு

*உட்ரெக்ட் நகர தூய பிரடெரிக் 

_“ஆண்டவர் என் கற்பாறை; என் கேடயம்; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்” (திப 18: 2)._

*வாழ்க்கை வரலாறு*

பிரடெரிக் ,நெதர்லாந்து நாட்டில் உள்ள உட்ரெக்ட் என்னும் ஊரைச் சார்ந்தவர். இவர் சிறுவயது முதலே கிறிஸ்தவ நம்பிக்கையில் சிறந்து விளங்கி வந்தார். வளர்ந்து பெரியவராகியபோது குருவாக மாறவேண்டும் என்னும் எண்ணம் கொண்டார். அதன்படியே இவர் குருவாகவும் மாறினார்.

குருவாக மாறிய பின்பு இவர் உபதேசியார்களுக்கு கிறிஸ்தவ நெறிமுறைகளைப் பற்றி போதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அப்பணியை இவர் சிறப்பாகச் செய்ததால், இவர் 825 ஆம் ஆண்டு உட்ரெக்ட் நகரின் ஆயராக உயர்த்தப்பட்டார். ஆயராக உயர்ந்தபின்பு இவர் நற்செய்தி அறிவிப்புப் பணியை இன்னும் சிறப்பாகச் செய்தார். குறிப்பாக தன்னுடைய மறைமாவட்டம் முழுவதும் நற்செய்தியைப் பணியாளர்களை அனுப்பி, அவர்கள் மூலம் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களும் அறிந்துகொள்ளும்படி செய்தார். 

இதற்கிடையில் நெதர்லாந்தில் அரசியாக இருந்த யூதித்தின் போக்கு துன்மாதிரி இருப்பதை அறிந்த ஆயர் பிரெடரிக், அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அப்படியிருந்தாலும் தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். இவர் கிறிஸ்தவை அறியாத மக்களும் கிறிஸ்துவைக் குறித்து அறிந்துகொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்; அவர்களிடமிருந்த பல மூட நம்பிக்கைகளை அகற்றப் பாடுபட்டார். இதனாலும் அவருக்கு எதிர்ப்புகள் வந்தன.

இப்படி பல்வேறு எதிர்ப்புகள் இவருடைய பணிவாழ்வில் வந்தாலும் மனம் தளர்ந்து போகாமல் தன்னுடைய நம்பிக்கையில், கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். ஒருநாள் இவர் ஆயர் இல்லத்தில் இருந்த சிற்றாலயத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் இவருக்குப் பின்னால் வந்து, இவருடைய முதுகில் கத்தியால் குத்திச் சென்றனர். இதனால் இவர் அந்த இடத்திலே இறந்து போனார். இவர் யாருடைய ஆட்களால் கொல்லப்பட்டார் என்பது இன்றுவரைக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது. ஒருசிலர் இவர் பிற சமயத்து ஆட்களால் கொல்லப்பட்டார் என்றும் சொல்வார்கள்.

இவர் இறப்பதற்கு முன்பு, “உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்” என்ற இறைவார்த்தையைச் சொல்லி உயிர் துறந்தார் (திபா 116:9)

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய பிரடெரிக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். 

*1. அஞ்சாது ஆண்டவருக்குப் பணி செய்வோம்*

தூய பிரடெரிக்கின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவர் ஆண்டவருடைய அன்புப் பணியை, நற்செய்தி அறிவிப்புப் பணியை அஞ்சா நெஞ்சத்தோடு செய்ததுதான் நம்முடைய நினைவுக்கு வந்துபோகின்றது. ‘இவர் அரசியாயிற்றே, இவருடைய தவற்றைச் சுட்டிக்காட்டினால் ஏதாவது ஆபத்து வந்துவிடுமே’ என்று பயப்படவில்லை, அதே நேரத்தில் மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்தபோது அவர்களுடைய தவற்றையும் சுட்டிக் காட்டினார். அப்போதுகூட, ‘இவர்களுடைய தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றோமே, இதனால் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமே’ என்றெண்ணிப் பயப்படவில்லை. அவர் எப்போதும் அஞ்சா நெஞ்சத்தோடுதான் ஆண்டவருக்குப் பணிசெய்தார். தூய பிரடெரிக்கிடம் இருந்த இதே மனதிடமும் நம்பிக்கையும் நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நாம் ஏன் அஞ்சா நெஞ்சத்தோடும் துணிவோடும் ஆண்டவருடைய நற்செய்திப் பணியைச் செய்யவேண்டும் என்று சொன்னால், நற்செய்தியில் இயேசு கூறுகின்றார், “நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர். அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று (மாற் 16: 17-18) இயேசுவின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டு, அவருடைய பணியைச் செய்கின்றபோது இவர் இத்தகைய பாதுகாப்பையும் ஆசிரையும் தருகின்றபோது, எதற்கு அஞ்சவேண்டும் என்பதுதான் இயேசுவின் கேள்வியாக இருக்கின்றது.

ஆகவே, தூய பிரடெரிக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருக்குப் பணி செய்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்

*மத்தேயு 11: 28-30*

*“இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்”*

*நிகழ்வு*

பெரிய கப்பல் ஒன்று கடலில் சென்றுகொண்டிருந்து. அதில் பெரிய பெரிய மனிதர்கெல்லாம் பயணம்செய்துகொண்டிருந்தார்கள். அதே கப்பலில் ஓர் இளம்பெண்ணும் பயணம் செய்தாள். அவளிடம் ஒரு (கெட்ட) பழக்கம் இருந்தது. அது என்னவெனில், சமுதாயத்தில் உயர்ந்த இடங்களில் இருப்பவர்களிடமிருந்து ஆட்டோகிராப் வாங்கி, அதைத் தன்னுடைய தோழிகளிடம் காட்டி, “பார்! எனக்கு எவ்வளவு பெரிய ஆட்களையெல்லாம் தெரியும்” என்று பெருமையடித்துக் கொள்வது. இதை அவள் பல ஆண்டுகளாகச் செய்துகொண்டு வந்தாள். 

அவள் பயணம் செய்துகொண்டிருந்தக் கப்பலில் அதிகம் கற்றுத்தேர்ந்த பேராயர் ஒருவரும் பயணம் செய்துகொண்டு வந்தார். அவரிடமிருந்து அவள் எப்படியாவது ஆட்டோகிராப் வாங்கிவிட வேண்டும் என்று முடிவுசெய்தாள். எனவே, அவள் பேராயரிடம் சென்று, தன்னிடமிருந்த ஆட்டோகிராப் வாங்கும் புத்தகத்தை நீட்டி, ஆட்டோகிராப் போடுமாறு மிகவும் பணிவோடு கேட்டார். 

“வழக்கமாக நான் யார்க்கும் ஆட்டோகிராப் போடுவதில்லை. நீ வற்புறுத்திக் கேட்டதால் போடுக்கிறேன்” என்று சொல்லி ஆட்டோகிராப் போட்டார். உடனே அந்த இளம்பெண், “பேராயர் அவர்களே! உங்கள் பெயரோடு நீங்கள் படித்த படிப்பையும் உங்களுடைய தகுதியையும் போட்டால், இன்னும் நன்றாக இருக்கும்” என்றார். “அப்படியா?” என்று கேட்டுவிட்டு, ஒருநிமிடம் யோசித்தார். பின்னர், அவர் அவருடைய பெயர்க்குப் பின்னால், “மிகப்பெரிய பாவி” என்ற எழுதினார். அதைப் பார்த்துவிட்டு, அந்த இளம்பெண் அதிர்ந்து போய், அவரிடம் கொடுத்த ஆட்டோகிராப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு வேகமாக விரைந்து சென்றார். 

அந்த இளம்பெண், பேராயர் தான் படித்த படிப்பையெல்லாம் குறிப்பிடுவார் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, அவர் ‘மிகப்பெரிய பாவி’ என்று குறிப்பிட்டது உண்மையில் வியப்பாக இருந்திருக்கும். பேராயர் தன்னை மிகப்பெரிய பாவி என்று குறிப்பிட்டார் எனில், அவரிடம் எந்தளவுக்குத் தாழ்ச்சி இருந்திருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். நற்செய்தியில் இயேசு, “கனிவும் மனத்தாழ்மையும் உள்ளவன்” என்று சொல்லிவிட்டு “என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்கின்றார். இயேசுவிடம் இருக்கும் கனிவும் தாழ்ச்சியும் எத்தகையது? அவற்றை அவரிடமிருந்து கற்றுக்கொள்வதால் ஒருவர்க்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன? என்பது பற்றிச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். 

*கனிவும் மனத்தாழ்மையும் உள்ள இயேசு*

நற்செய்தியில் இயேசு, பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்... நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்... என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்... அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்கின்றார். இயேசு கூறும் இவ்வார்த்தைகளில் இரண்டு முதன்மையான கருத்துகள் இருக்கின்றன. ஒன்று, கனிவும் மனத்தாழ்மையும் உள்ள இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதாகும். இரண்டு. அப்படி நாம் கற்றுக் கொள்கின்றபோது, நம்முடைய உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதாகும். இந்த இரண்டு கருத்துகளையும் இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை மனத்தாழ்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில்,  அவர் கடவுள் தன்மையில் விளங்கியபோதும் தன்மையே தாழ்த்தி, மனிதராகி, சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார். (பிலி 2: 6-11). மேலும் அவர் செல்வராயிருந்தும் நமக்காக ஏழையானார் (2கொரி 8: 9). இவ்வாறு இந்த உலகத்தில் யாரும் செய்யாததையும் செய்து, தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். அதனால்தான் அவரால் என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று இவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிகின்றது. 

*இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டால் இளைப்பாறுதல் கிடைக்கும்*
இயேசு, நான் கனிவும் மனத்தாழ்மையும் உடைவன் என்று சொல்லி மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்றும் சொல்கின்றார். அப்படியானால், நாம் இயேசுவிடம் இருக்கும் கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்வது அவசியமாகின்றது. 

இன்றைக்குப் பலர்க்கு மனத்தாழ்மை என்ற ஒன்று கிடையாது. அதனால்தான் அவரால்களால் சுமைகளை, மனக்கவலைகளை இன்ன பிறவற்றைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. என்றைக்கு ஒருவர் இயேசுவைப் போன்று மனத்தாழ்மையோடு இருக்கின்றாரோ அன்றைக்கு அவரால் நிச்சயம் துன்பங்களையும் வேதனையையும் தாங்கிக்கொள்ள முடியும். அன்னை மரியா அப்படித்தான் மனத்தாழ்மையோடு இருந்தார். அதனால் அவருடைய வாழ்வில் வந்த வியாகுலங்களைத் தாங்கிக்கொள்ள முடிந்தது. எனவே, நாமும் இயேசுவைப் போன்று, மரியாவைப் போன்று மனத்தாழ்மையோடு இருக்கக் கற்றுக்கொள்வோம். அதன்மூலம் இயேசு தருகின்ற இளைப்பாறுதலைப் பெறுவோம்.

*சிந்தனை*
 
‘முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவியார் அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்” (எபே 4:2) என்பார் பவுல். ஆகவே, நாம் இயேசுவிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொண்டு, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். 


Tamil story

😆😆ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்

கணவர்என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!
 வையித்தரும் சொன்னதில்லை! 
மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை! 


ஒருநாள் வைத்தியர் வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியெ காணவில்லை. 
மாறாக இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.
 வையித்திரை பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து சேவித்தாள். வைத்தியருக்கு ஒன்றும் புரியவில்லை. 
யாரம்மா நீ என்று கேட்டார். 
அதற்கு அந்த யுவதி நான்தான் உங்கள் மனைவி என்றாள்.

 வைத்தியருக்கு மிகவும் குழப்பம். 
என்ன நடந்தது என்று கேட்க மனைவி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
"  உங்களுக்காக கூழ் காய்த்து கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது. அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன். நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன். குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளைம் பெண் ஆகிவிட்டேன்" என்றாள்

வைத்தியர் பதறி அடித்துபோய் " எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் " என்று கேட்க அதற்கு அந்த மனைவி "அதை தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? " என்றாள்.

 வைத்தியர் நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்! 

நீதி 1.பெண்டாட்டிக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது..

நீதி 2. அப்படி செஞ்சால் பொண்டாட்டிக்கு தான் லாபம்..
நமக்கு எப்பவுமே அல்வா தான்..😆😆

Our Lady of Mount Carmel life history

*Our Lady of Mount Carmel*

*FIRST READING*       
A reading from the Book of Exodus (Exodus 2: 1-15a)
She named him Moses, for she said, “Because I drew him out of the water”; and when he had grown up, he went out to his people.

In those days: A man from the house of Levi went and took to wife a daughter of Levi. The woman conceived and bore a son; and when she saw that he was a goodly child, she hid him three months. And when she could hide him no longer she took for him a basket made of bulrushes, and daubed it with bitumen and pitch; and she put the child in it and placed it among the reeds at the river’s brink. And his sister stood at a distance, to know what would be done to him. Now the daughter of Pharaoh came down to bathe at the river, and her maidens walked beside the river; she saw the basket among the reeds and sent her maid to fetch it. When she opened it she saw the child; and behold, the baby was crying. She took pity on him and said, “This is one of the Hebrews’ children.” Then his sister said to Pharaoh’s daughter, “Shall I go and call you a nurse from the Hebrew women to nurse the child for you?” And Pharaoh’s daughter said to her, “Go.” So the girl went and called the child’s mother. And Pharaoh’s daughter said to her, “Take this child away, and nurse him for me, and I will give you your wages.” So the woman took the child and nursed him. And the child grew, and she brought him to Pharaoh’s daughter, and he became her son; and she named him Moses, for she said, “Because I drew him out of the water.” One day, when Moses had grown up, he went out to’ his people and looked on their burdens; and he saw an Egyptian beating a Hebrew, one of his people. He looked this way and that, and seeing no one he killed the Egyptian and hid him in the sand. When he went out the next day, behold, two Hebrews were struggling together; and he said to the man that did the wrong, “Why do you strike your fellow?” He answered, “Who made you a prince and a judge over us? Do you mean to kill me as you killed the Egyptian?” Then Moses was afraid, and thought, “Surely the thing is known.” When Pharaoh heard of it, he sought to kill Moses. But Moses fled from Pharaoh, and stayed in the land of Midian.
_______________________________________
*RESPONSORIAL PSALM*    Psalm 69:3.14.30-31.33-34  (R. see 33)
*R. You who are poor, seek God, and your hearts will revive.*

I have sunk into the mud of the deep,
where there is no foothold.
I have entered the waters of the deep,
where the flood overwhelms we. *R.*

But I pray to you, O Lord,
 for a time of your favour.
In your great mercy, answer me, O God,
with your salvation that never fails. *R.*

As for me in my poverty and pain,
let your salvation, O God, raise me up.
Then I will praise God's name with a song;
I will glorify him with thanksgiving. *R.*

The poor when they see it will be glad,
and God-seeking hearts will revive;
for the Lord listens to the needy,
and does not spurn his own in their chains. *R.*
______________________________________
*ALLELUIA*
Psalm 95:7d.8a
Alleluia. Today, harden not your hearts, but listen to the voice of the Lord. Alleluia.
______________________________________
*Gospel*
A reading from the holy Gospel according to Matthew   Matthew11:20-24
It shall be more tolerable on the day of judgement for Tyre and Sodom than for you.”

At that time: Jesus began to upbraid the cities where most of his mighty works had been done, because they did not repent. “Woe to you, Chorazin! woe to you, Bethsaida! for if the mighty works done in you had been done in Tyre and Sidon, they would have repented long ago in sackcloth and ashes. But I tell you, it shall be more tolerable on the day of judgement for Tyre and Sidon than for you. And you, Capernaum, will you be exalted to heaven? You shall be brought down to Hades. For if the mighty works done in you had been done in Sodom, it would have remained until this day. But I tell you that it shall be more tolerable on the day of judgement for the land of Sodom than for you.”
_______________________________________
*Today's Reflection*

There is a feeling of pain that come with unreturned affection. Parents expect, even when they do not say it, that the resources they spend on their children will enable them to turn out better persons. When the reverse happens, regret sets in. jesus came close to that as he looked at places where most of his mighty works were done. God has shown us so much love. He sent his son to die for us, and secondly, he manifests daily in the events of our lives. We may not have reached where we want to be in life. But we aren’t where we used to be. How do we respond to all that which we have received from God?

தூய கார்மேல் அன்னை

*தூய கார்மேல் அன்னை 

*நிகழ்வு* 

பாலஸ்தீன நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள மத்தியத் தரைக்கடலுக்கு அருகே உள்ள மலைதான் கார்மேல் மலையாகும். 

ஒருசமயம் இம்மலையில் இறைவாக்கினர் எலியா இஸ்ரேயலை ஆண்ட மன்னர் ஆகாப்பிடம் “உன்னிடம் பாகால் தெய்வத்தின் பொய்வாக்கினர்கள் நானூற்றைம்பது பேர் இருக்கிறார்களே, அவர்கள் எல்லோரையும் வரவழை. பாகாலின் சார்பாக அவர்கள் எல்லோரும் நிற்கட்டும். என் கடவுளின் சார்பாக நான் மட்டும் நிற்கிறேன். ஒரு காளையை வெட்டி பலிபீடத்தில் வைப்போம். ஆனால் நெருப்பு வைக்கக்கூடாது. யாருடைய பலியை வானத்து நெருப்பு இறங்கி வந்து எடுத்துக் கொள்கிறதோ, அது தான் உண்மையான கடவுள் சம்மதமா?” என சவால் விட்டார். அதற்கு மன்னர் சம்மதம் தெரிவித்தார். உடனே பாகாலின் இறைவாக்கினர்கள் எல்லோரும் அங்கு வந்தார்கள். அவர்கள் அதிகாலையிலேயே ஒரு பலிபீடத்தைக் கட்டி, ஒரு காளையை வெட்டி அதன் மீது வைத்துவிட்டு பாகாலை அழைக்க ஆரம்பித்தார்கள். “பாகாலே வாரும், நெருப்பை அனுப்பி பதிலைத் தாரும்” நண்பகல் வரை அழைத்தும் பாகால் ஒரு பதிலும் தரவில்லை. எனவே மக்கள் எல்லோரும் அந்தப் பலிபீடத்தைச் சுற்றி பாட்டுப் பாடி ஆட்டம் போட ஆரம்பித்தார்கள்.

எலியா அவர்களை நோக்கி “இன்னும் கொஞ்சம் சத்தமாய்க் கத்துங்கள். பாவம் பாகால், அவன் உறங்கிக் கொண்டிருக்கலாம், அல்லது ஒதுக்குப் புறமாக போயிருக்கலாம், இன்னும் கத்துங்கள்” என்று கிண்டல் செய்தார். அவர்கள் “பாகாலே பதில் தாரும்” என்று தொடர்ந்து கத்தினார்கள். ஆனால் பாகால் பதில் ஏதும் சொல்லவில்லை.

அப்போது எலியா அவர்களை எல்லோரையும் அழைத்தார். “வாருங்கள், பாகாலின் பிரதிநிதிகளே வாருங்கள். கொஞ்சம் ஓய்வெடுங்கள். பாவம். ஆடிப் பாடி களைத்திருக்கிறீர்கள். இப்போது நான் செய்வதைக் கவனியுங்கள்” என்று சொல்லிவிட்டு எலியா இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிப்பிடும் விதமாக பன்னிரண்டு கற்களைக் கொண்டு ஒரு பலிபீடத்தைக் கட்டினார். அந்த பலிபீடத்தைச் சுற்றிலும் வாய்க்கால் வெட்டினார். பின் பலிபீடத்தின் மீது ஒரு காளையை வெட்டி வைத்தார். காளையின் மீது பன்னிரண்டு குடம் தண்ணீர் ஊற்றினார். பலிக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்தபின் அவர் கடவுளை நோக்கி, “கடவுளே!, இதோ உமது பலிப்பொருள். நீரே உண்மையான கடவுள் என்பதை இம் மக்களுக்குக் காட்டும்” என்றார். உடனே வானத்திலிருந்து நெருப்பு இறங்கி வந்து எலியாவின் பலிபீடத்தில் விழுந்தது. காளையும், விறகுகளும் கொழுந்து விட்டெரிந்தன. வாய்க்கால் நீர் வற்றிப் போய்விட்டது.

இதைக் கண்ட மக்கள் அனைவரும் “ஆண்டவரே கடவுள், ஆண்டவரே கடவுள்” என்று கத்திக் கொண்டே தரையில் விழுந்து வணங்கினார்கள். பாகாலின் போலி இறைவாக்கினர்கள் பயந்து நடுங்கி ஓடினார்கள். மக்கள் அவர்களைத் துரத்திப் பிடித்து எலியாவிடம் ஒப்படைக்க, எலியா அவர்கள் நானூற்று ஐம்பதுபேரையும் கொன்று ஓடையில் வீசினார். அதன் பின் அவர் மன்னனை அழைத்து, “இப்போதாவது நீ உண்மையான கடவுளை உணர்ந்து கொள், இன்று முதல் நாட்டின் பஞ்சம் விலகும். மழை பெய்யும்” என்றார். மன்னன் அவ்விடம் விட்டு அரண்மனையை அடையும் முன் பெருமழை நாட்டை குளிர்வித்தது (1 அரசர்கள் 18)

எலியா இறைவாக்கினர் போலி இறைவாக்கினர்களை வெற்றிகொண்ட  கார்மேல் மலையில், அவருடைய சீடர்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களே பின்னாளில் ‘கார்மலைட்ஸ்’ என அழைக்கப்பட்டார்கள். இவர்கள் 1245 ஆம் ஆண்டு, அங்கு ஏற்பட்ட முகமதியர்களின் படையெடுப்புக்குப் பின் இங்கிலாந்துக்கு மாறிப்போனார்கள்.   

*வரலாற்றுப் பின்னணி* 

முகமதியர்களின் படையெடுப்புக்குப் பின்னால் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த கார்மேல் சபைத் துறவிகளின் தலைவராகப் பொறுப்பேற்றவர் சைமன் ஸ்டோக் என்பவர். இவர் சபைத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நிறைய பிரச்சனைகளைச் சந்திக்கவேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட தருணத்தில் 1251 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள், சைமன் ஸ்டோக் மரியன்னைக்கு முன்பாக வேண்டிக் கொண்டிருந்தார். அப்போது மரியன்னை அவருக்குக் காட்சிகொடுத்து, அவரைத் தேற்றினார். அது மட்டுமல்லாமல் கரு நிறத்தில் இருந்த உத்தரிக்கத்தைக் கொடுத்து, “இதை அணிந்துகொள், இதை அணிந்துகொள்வோரை இடர்களிலிருந்தும், நரக தண்டனையிலிருந்தும் காப்பாற்றி அமைதி தருவேன்” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார். 

அதன்பிறகு சைமன் ஸ்டோக் என்ற அந்த கார்மேல் சபைத் துறவி, உத்தரியம் அறிந்துகொள்கிற வழக்கத்தை சபைத் துறவிகளிடத்தில் கொண்டுவந்தார், அது இன்றைக்கு படிப்படியாக வளர்ந்து, பொதுமக்களும் அணிந்துகொள்ளும் அளவுக்கு வந்துவிட்டது.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

கார்மேல் அன்னை அல்லது உத்தரிக்க அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

*1. அன்னையின் பாதுகாப்பும் அன்னையின் வழி நடப்பதும்*

அன்னையானவள் சைமன் ஸ்டோக் என்ற அந்த கார்மேல் சபைத் துறவியிடம் காட்சியின்போது சொன்னது, “உத்தரிக்கத்தை யாராரெல்லாம் அணிந்திருக்கிறார்களே, அவர்கள் நரக தண்டனையிலிருந்து காப்பாற்றப் படுவார்கள்” என்பதுதான். நாம் உத்தரிக்கத்தை அணியும்போது அன்னையின் பாதுகாவலைப் பெறுகிறோம்.  அதே நேரத்தில் நாம் அந்த அன்னை வாழ்ந்து காட்டிய நெறியின் படி வாழ அழைக்கப்டுகின்றோம். 

மரியன்னை கிறிஸ்தவ வாழ்விற்கு முன்மாதிரி. அவள் தாழ்ச்சிக்கு, பிறரன்புக்கு, கீழ்படிதலுக்கு எடுத்துக்காட்டாக  விளங்குகின்றார். ஆகவே, நாம் அன்னையைப் போன்று தாழ்ச்சியில், பிறரன்பில், கீழ்ப்படிதலில் வளரும்போது  அன்னையின் அன்புப் பிள்ளைகள் ஆகின்றோம், அதே நேரத்தில் அவளது பாதுகாவளைப் பெறுகின்றவர்கள் ஆகின்றோம்.

எனவே, இந்த நாளில் நாம் அன்னையின் வழி நடக்க முயற்சிப்போம், அன்னையின் பாதுகாப்பையும் அரவணைப்பையும் இறையருளையும் நிறைவாய் பெறுவோம். 

மனிதர்கள் வழியாகச் செயல்படும் இறைவன்

*விடுதலைப் பயணம் 2: 1-15*

*மனிதர்கள் வழியாகச் செயல்படும் இறைவன்*

*நிகழ்வு*

ஒரு கிராமத்தில் கணவராலும் பின்னர் அவருடைய பிள்ளைகளாலும் கைவிடப்பட்ட மூதாட்டி ஒருத்தி இருந்தாள். பெரும்பாலான நேரங்களில் அவள், ‘எனக்கேன் இப்படியெல்லாம் நடக்கின்றது?’ என்ற அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். 

ஒருநாள் அவளுடைய வீட்டிற்கு அவளுடைய பால்ய காலத்துத் தோழி ஒருத்தி வந்தார். அவளிடம் அவள் தன்னுடைய நிலைமையை எடுத்துச் சொல்லி, “இப்போதெல்லாம் எனக்குக் கடவுள்மீது நம்பிக்கையே போய்விட்டது. அவர் மட்டும் இருந்திருந்தால், நான் ஏன் இவ்வளவு கஷ்டப்படவேண்டும்?” என்று புலம்பித் தள்ளினாள். உடனே அவளுடைய தோழி அவளிடம், “இனிமேலும் நீ இப்படியெல்லாம் அழுது புலம்பிக் கொண்டிராதே! கடவுளிடம் நீ உருக்கமாக மன்றாடு! அவர் உன்னைத் தொடவேண்டும் என்று மனம் உருகி வேண்டு. நிச்சயம் அவர் உன்னைத் தொடுவார்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அன்றைய நாளின் இரவு வேளையில் அந்த மூதாட்டி, முழந்தாள் படியிட்டு இறைவனிடம் மன்றாடத் தொடங்கினாள்; “ஆண்டவரே! என்மேல் இறங்கிவாரும்! என்னைத் தொட்டு உம்முடைய வல்லமையால் என்னை நிரம்பும்!” என்று உருக்கமாக மன்றாடினாள். அவள் இவ்வாறு மன்றாடத் தொடங்கிய சிறிதுநேரத்தில் ஒரு கை அவளைத் தொட்டது. உடனே அவள் மகிழ்ச்சியில், “ஆண்டவர் என்னைத் தொட்டுவிட்டார்... ஆண்டவர் என்னைத் தொட்டுவிட்டார்” என்று துள்ளிக் குதிக்கத் தொடங்கினாள். இச்செய்தியை தன்னுடைய தோழியிடம் சொல்வதற்கு மறுநாள்வரை அவள் காத்திருந்தாள்.

மறுநாள் பிறந்தது. மூதாட்டி தன் தோழியின் வருகைக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய தோழி வந்ததும், அவளிடம், “நேற்று இரவு நீ சொன்னது போன்று நான் இறைவனிடம் வேண்டினேன். இறைவனும் என்னைத் தொட்டார்” என்றாள். அவளோடைய தோழியோ அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள். மூதாட்டி தொடர்ந்து பேசினாள்: “நேற்று இரவு நான் இறைவனிடம் வேண்டும்போது அவர் என்னைத் தொட்டார் என்று சொன்னேன் அல்லவா... அவர் என்னைத் தொடும்போது நீ என்னைத் தொடுவதுபோன்று அவ்வளவு வாஞ்சையாக இருந்தது.”

  அந்த மூதாட்டி இவ்வாறு சொல்லிமுடித்ததும், அவளுடைய தோழி அவளிடம், “உண்மையில் நடந்ததுதான் இதுதான். நேற்று இரவு நீ இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கும்போது உன்னைத் தொட்டது வேறு யாரு நான்தான்” என்றாள். “நான்தான்” என்று அவளுடைய தோழி சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போன அந்த மூதாட்டியிடம், அவளுடைய தோழி, “பின்னே! இறைவன் உன்னைத் தொடுவார் என்றால், வானத்திலிருந்து தன் கைகளை நீட்டியா தொடுவார்? யாருடைய கை பக்கத்தில் இருக்கின்றதோ, அந்தக் கையின் வழியாகத் தொடுவார்” என்றார். இதற்குப் பிறகு அந்த மூதாட்டி, கடவுள் தன்னை விட்டு விலகவில்லை... அவர் தன்னோடுதான் இருக்கின்றார்’ என்ற உண்மையை உணர்ந்துகொள்ளத் தொடங்குகின்றாள். 

கடவுள் தன் மக்களைக் கைவிட்டு விடுவதில்லை. அவர் மனிதர்கள் வழியாகச் செயல்பட்டு அவர்களை மீட்கின்றார் என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் எபிரேயர்கள் பார்வோனின் ஆட்சியில் சொல்லொண்ணா துயரை அனுபவித்தபோது, அவர்களை விடுவிக்க கடவுள் மோசேயை அவர்கள் மத்தியில் அனுப்புகின்றார். அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

*எபிரேயர்களின் ஆண் குழந்தைகள் கொல்லப்படுதலும் மோசே காப்பாற்றப்படுதலும்* 

பார்வோன் மன்னன் எபிரேயர்களின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், அவர்களை அழிக்க என்னவெல்லாமோ செய்து பார்த்தான். எதுவும் முடியாமல் போகவே, இறுதியில் அவர்களின் ஆண் குழந்தைகளை நைல் நதியில் தூக்கிப் போடச் சொன்னான். இப்படி எல்லா எபிரேயக் குழந்தைகள் நைல் நதியில் தூக்கிப்போடப்படும்போது அம்ராம் - யோக்கபேது (விப 6:20) தம்பதியரின் மகனான மோசே மட்டும் அதிலிருந்து அதிசயமாகக் காப்பாற்றப்படுகின்றார். காரணம் மோசே மற்ற குழந்தைகள் போன்று கிடையாது. அவர் வித்தியாசமானவர் (எபி 11: 23). அவர்க்கென்று ஒரு திட்டத்தை இறைவன் வைத்திருந்ததால் இறைவன் அவரை பார்வோனின் கையிலிருந்து காப்பாற்றுகின்றார்.

*இஸ்ரயேல் மக்களை விடுவிக்கப்பிறந்த மோசே எப்படிப்பட்டவர்*
எபிரேயர்களின் எல்லாக் குழந்தைகளும் நைல் நதியில் தூக்கி வீசப்பட்டபோது, மோசே மட்டும் அதிசயமாகக் காப்பாற்றப்பட்டார் என்று மேலே பார்த்தோம். இப்படி அதிசயமாகக் காப்பாற்றப்பட்ட மோசே எப்படிப்பட்டவர் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துச் சொல்கின்றது. மோசே வளர்ந்து பெரியவனானபின் தன் மக்களின் நிலையைக் காணச் சென்றபோது, தன் இனத்தானாகிய எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனை அடித்துக் கொள்கின்றார். 

இதைக் குறித்து விவிலிய அறிஞர்கள் சொல்லும்போது, மோசே தன் இனத்தவனை அந்த எகிப்தினை அடித்தான் என்பதற்காக அடிக்கவில்லை. மாறாக வறியவன் ஒருவனை வலிமையானவன் ஒருவன் அடித்தான் என்பதற்காக அடித்தார் என்று சொல்வார்கள். இதன்மூலம் மோசே மக்கள்மீது அதுவும் குறிப்பாக வறியவர்கள்மீது மிகுந்த இரக்கம் கொண்டவர் என்பதைப் புரிந்துகொள்ளலாம். எண்ணிக்கை நூலும் கூட, “பூவுலகில் உள்ள அனைத்து மாந்தரிலும் மோசே சந்தமுள்ள மாந்தராய்த் திகழ்ந்தார்” (எண் 12: 3) என்றுதான் எடுத்துச் சொல்கின்றது. 

இவ்வாறு, கடவுள் தன் மக்களைக் கைவிட்டுவிடுவதில்லை. அவர்களை வழிநடத்த தன் தூதர்களை அனுப்புவார் என்பதை மோசேயின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். 

*சிந்தனை*

‘ஆண்டவரே! உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை’ (திபா 9:10). என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்மைக் கைவிடாமல், தன் தூதர்கள் வழியாக நம்மைக் காக்கும் இறைவனுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்போம். அதவழியாக 

St Bonaventure life history

*St Bonaventure*

*FIRST READING*
A reading from the Book of Exodus (Exodus 1:8-14.22)
Let us deal shrewdly with Israel, lest they multiply.

In those days: there arose a new king over Egypt, who did not know Joseph. And he said to his people, “Behold, the sons of Israel are too many and too mighty for us. Come, let us deal shrewdly with them, lest they multiply, and, if war befall us, they join our enemies and fight against us and escape from the land.” Therefore they set taskmasters over them to afflict them with heavy burdens; and they built for Pharaoh store-cities, Pithom and Ra-amses. But the more they were oppressed, the more they multiplied and the more they spread abroad. And the Egyptians were in dread of the sons of Israel. So they made the people of Israel serve with rigour, and made their lives bitter with hard service, in mortar and brick, and in all kinds of work in the field; in all their work they made them serve with rigor. And Pharaoh commanded all his people, “Every son that is born to the Hebrews you shall cast into the Nile, but you shall let every daughter live.”
_______________________________________
*RESPONSORIAL  PSALM*    Psalm 124:1-3.4-6.7-8 (R. 8a)
*R. Our help is in the name of the Lord.*

“If the Lord had not been on our side,”
let Israel say —
“If the Lord had not been on our side
when men rose against us,
then would they have swallowed us alive
when their anger was kindled.” *R.*

“Then would the waters have engulfed us,
the torrent gone over us;
over our head would have swept
the raging waters.”
Blest be the Lord who did not give us
a prey to their teeth! *R.*

Our life, like a bird, has escaped
from the snare of the fowler.
Indeed, the snare has been broken,
and we have escaped.
Our help is in the name of the Lord,
who made heaven and earth. *R.*
______________________________________
*Alleluia*
 Matthew 5:10
Alleluia. Blessed are those who are persecuted for righteousness’ sake, for theirs is the kingdom of heaven. Alleluia.
______________________________________
*GOSPEL*         
A reading from the holy Gospel according to Matthew (Matthew10:34-11:1)
“I have not come to bring peace, but a sword.”

At that time: Jesus said to his apostles, “Do not think that I have come to bring peace on earth; I have not come to bring peace, but a sword. For I have come to set a man against his father, and a daughter against her mother, and a daughter-in-law against her mother-in-law; and a man’s foes will be those of his own household. He who loves father or mother more than me is not worthy of me; and he who loves son or daughter more than me is not worthy of me; and he who does not take his cross and follow me is not worthy of me. He who finds his life will lose it, and he who loses his life for my sake will find it. He who receives you received me, and he who receives me receives him who sent me. He who receives a prophet because he is a prophet shall receive a prophet’s reward, and he who receives a righteous man because he is a righteous man shall receive a righteous man’s reward.  And whoever gives to one of these little ones even a cup of cold water because he is a disciple, truly, I say to you, he shall not lose his reward.” And when Jesus had finished instructing his twelve disciples, he went on from there to teach and preach in their cities.
_______________________________________

*Today’s Reflection*
Religious persecution is a reality in the world today as it always has been. What do we do? The roadmap has been provided by Jesus. Firstly, he admonishes us to be prepared for persecution in his name. Then he adds that, we must never retaliate. The battle is not ours. The battle is his and he has won the battle (Jn 16:33). Great spiritual men and women have gone through this road in the past and emerged victorious because they depended on God. We too can.
_______________________________________
*Today’s Saint and Quote*

St Bonaventure – July 15th
Mary seeks for those who approach her devoutly and with reverence, for such she loves, nourishes, and adopts as her children.

தூய பொனவெந்தூர் வாழ்க்கை வரலாறு

*தூய பொனவெந்தூர் (ஜூலை 15)*

*நிகழ்வு* 

பொனவெந்தூரின் சமகாலத்தவர் ‘இறையியலாளர்களின் இளவரசராகிய’ தூய தாமஸ் அக்குயினாஸ். பொனவெந்தூரின் நெருங்கிய நண்பரும்கூட. அவர் அப்போதுமே பொனவெந்தூரிடம் விளங்கிய அறிவுத் திறனைக் கண்டு வியந்துகொண்டிருந்தார். ஒருநாள் அவர் இதை நேரடியாகவே அவரிடம் கேட்டுவிட்டார், “உங்களுக்கு இவ்வளவு ஞானமும் அறிவுத்திறனும் எங்கிருந்து கிடைத்தது. அதற்கு அவர் தாமஸ் அக்குயினாசை தன்னுடைய துறவற மடத்தில் இருந்த சிற்றாலயத்திற்கு அழைத்துக்கொண்டு போய், அங்கிருந்த பாடுபட்ட சிரூபத்தைச் சுட்டிக்காட்டி, “இயேசுவின் இந்த பாடுபட்ட சிரூபத்திலிருந்தே நான் எல்லா அறிவையும்  ஞானத்தையும் பெறுகிறேன்” என்றார். இதைக் கேட்ட தாமஸ் அக்குயினாஸ் வியந்து நின்றார்.

*வாழ்க்கை வரலாறு*

பொனவெந்தூர் கி.பி. 1221 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள தஸ்கனி (Tuscany) என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ஜான், தாய் ரிடெல்லா என்பவர் ஆவர். பொனவெந்தூரின் இயற்பெயர் ஜான் என்பதுதான். இவருக்கு நான்கு வயது நடந்து கொண்டிருந்தபோது கொடிய நோயினால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்கள் யாராலும் இவரிடமிருந்த நோயைக் குணப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை. இதனால் இவருடைய தாய் இவரை தூய பிரான்சிஸ் அசிசியாரிடம் எடுத்துக்கொண்டு போனார். அவர் முழந்தாள் படியிட்டு ஜெபிக்க, இவரிடம் இருந்த நோயானது முற்றிலுமாக நீங்கிப் போனது. அப்போது பிரான்சிஸ் அசிசியார் (Bena Venture) நல்லதே நடக்கட்டும் என்பதைக் குறித்துக்காட்டும் அடையாளமாக பொனவெந்தூர் என்ற பெயரை அவருக்கு வைத்தார். அன்றே பொனவெந்தூரின் தாய் தன் மகனை பிரான்சிஸ்கன் சபையில் சேர்த்து, குருவாக அழகு பார்க்க நினைத்தார்.

பொனவெந்தூரின் தாயின் கனவு 1238 ஆம் ஆண்டு நிறைவேறியது. ஆம், பொனவெந்தூர் தன்னுடைய பதினெட்டாம் வயதில் பிரான்சிஸ் சபையில் குருமாணவராகச் சேர்ந்தார். அவர் பிரான்சில் உள்ள பாரிஸ் பல்கலைக்கழகத்தில் ஒன்பது ஆண்டுகள் மெய்யியல் மற்றும் இறையியலைக் கற்றுத் தேர்ந்து அதிலே புலமையும் பெற்றார். இவரிடம் விளங்கிய அறிவுத் திறனையும் புலமையும் ஞானத்தையும் கண்டு எல்லாரும் வியந்தார்கள். இவரிடம் விளங்கிய அறிவுத்திறனைக் கண்டு 1243 ஆம் ஆண்டு இவரை சபைத் தலைவராக நியமித்தார்கள். இவர் சபைத் தலைவராக (Genaral) நியமிக்கப்பட போது, இவருக்கு வயது வெறும் 36 தான்.

பொனவெந்தூர் சபைத் தலைவராக பதவி உயர்ந்தபிறகு சபையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். துறவறத்தார் ஆன்மீக வாழ்விலும், ஜெப வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் சிறந்தோங்கி வளர நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தார். இன்றைக்கு நாம் சொல்லக்கூடிய மூவேளை ஜெபம்கூட இவர் தொடங்கி வைத்ததுதான். இவர் ஆற்றிய பணிகளைப் பார்த்துவிட்டு, துறவறத்தார் இவரை பிரான்சிஸ்கன் சபையின் இரண்டாம் நிறுவுனர் என்று அன்போடு அழைத்தனர்.

பொனவெந்தூர் மிகச் சிறந்த ஆன்மீக எழுத்தாளராகவும்  விளங்கினார். தன்னுடைய எழுத்துத் திறமையின் வாயிலாக இவர் திருச்சபைக்கு அளித்த பங்களிப்பு ஏராளம். பொனவெந்தூரிடம் விளங்கிய அறிவுத்திறனையும், ஜெப வாழ்வையும் பார்த்துவிட்டு திருத்தந்தை இவரை அல்பனா என்ற நகருக்கு ஆயராக ஏற்படுத்தினார். தனக்கு எந்த ஒரு பதவியும் பொறுப்பும் வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்ட போதும் அவருக்கு இப்படிப்பட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டது. இருந்தாலும் அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினை மிகச் சிறப்பாகச் செய்தார். இறைமக்களை ஆன்மீக வாழ்விலும் சமூக மற்றும் பொருளாதார வாழ்விலும் சிறந்த விதமாய் கட்டி எழுப்பி மக்களுக்கு நல்லதொரு ஆயனாக விளங்கினார். ஆயர் பொறுப்பினை சிறப்பாகச் செய்ததனால் திருத்தந்தை பத்தாம் கிரகோரியார் இவரை கர்தினாலாக உயர்த்தினார். இப்படியாக பொனவெந்தூர் மேலும் மேலும் உயர்ந்துகொண்டிருந்தார்.

1270 களில்  நடைபெற்ற லயன்ஸ் பொதுச்சங்கத்தில் பேசப்பட்ட கருத்துகள் அனைத்துமே இவர் தீர்மானித்துத் தந்ததுதான். ஒரு கர்தினாலாக இருந்து, திருத்தந்தைக்கு பெரும் உதவியாக இருந்தார். இப்படி பலவேறு பணிகளை திருச்சபையின் வளர்சிக்காக செய்த பொனவெந்தூர் 1273 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். 1482 ஆம் ஆண்டு இவர் புனிதராக உயர்த்தப்பட்டார். 1588 ஆம் ஆண்டு இவர் மறைவல்லுனராக உயர்த்தப்பட்டார். திருச்சபையில் மிகவும் முக்கியமாகக் கருதப்படும் ஐந்து மறைவல்லுனர்களில்  இவரும் ஒருவர்.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*   

தூய பொனவெந்தூரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

*1. தாழ்ச்சி*

தூய பொனவெந்தூர் தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தனக்கு எந்த பதவியும்  பொறுப்பும் வேண்டாம் என்றுதான் வாழ்ந்து வந்தார். அப்படியிருந்தும் அவருக்கு மேலும் மேலும் பதவிகள் வந்தன.

ஒருசமயம் திருத்தந்தை பத்தாம் கிரோகோரியார் இவரை கர்தினாலாக அறிவித்து,  கர்தினாலுக்கு உரிய  தொப்பியை தன்னுடைய பணியாளர்களிடம் கொடுத்து, அவருக்குக் கொடுக்கச் சொன்னார். திருத்தந்தையின்  வேண்டுகோளுக்கு இணங்க பணியாளர்கள் பொனவெந்தூரிடம் கர்தினாலுக்கு உரிய தொப்பியை கொடுக்கச் சென்றார்கள். அவர்கள் சென்ற நேரம் பொனவெந்தூர் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து திருந்தந்தையின் பணியாளர்கள், ஒரு ஆயர் –கர்தினாலாக உயர்த்தப்பட்டவர் – இப்படியா பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருப்பது என்று வியந்துபோய் நின்றார்கள். அவர்கள் தாங்கள் வந்த செய்தியை அவரிடத்தில் சொன்னபோது, அவர், “நீங்கள் கொண்டுவந்த கர்தினாலுக்கு உரிய தொப்பியை பக்கத்தில் உள்ள மரத்தில் வைத்துவிட்டுப் போங்கள், நான் இந்த பாத்திரங்களைக் கழுவிவிட்டு, அதன்பிறகு வந்து, அந்த கர்தினாலுக்குரிய தொப்பியை அணிந்துகொள்கிறேன்” என்றார். அந்தளவுக்கு பொனவெந்தூர் தாழ்ச்சியாக, பேரையும் புகழையும் விரும்பாதவராக இருந்தார்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் தாழ்ச்சியை அணிகலனாகக் அணிந்துகொண்டு வாழ்கிறோமா? அல்லது ஆணவத்தோடு வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் இயேசு சொல்வார், “தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் (லூக் 14:11). ஆம் நாம் தாழ்ச்சியோடு வாழும்போது இறைவனால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பதற்கு தூய பொனவெந்தூரின் வாழ்வே நமக்கு நமக்கு சான்றாக இருக்கின்றது. ஆகவே, நமது வாழ்வில் தாழ்ச்சியைக் கடைப்படித்து வாழ்வோம்.

ஒருமுறை ஆயிரம் நோட்டும், ஒரு ரூபாய் ருபாய் நாணயமும் சந்தித்துக் கொண்டன. ஆயிரம் ரூபாய் நோட்டு அலுத்துக்கொள்வது போலப் பெருமையடித்துக்கொண்டது. “நடிகர்கள் கையில் புரள்கிறேன்! தொழிலதிபர்கள் பெட்டியில் தூங்கிகிறேன்!! ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இருக்கிறேன். விலையுயர்ந்த கார்களில் பறக்கிறேன்! வாழ்க்கையே பரபரப்பாக இருக்கிறது. ஆனால் பாவம் நீ இதையெல்லாம் பார்த்திருக்க மாட்டாய்”. அதற்கு ஒரு ரூபாய் அமைதியாகச் சொன்னது. “நான் அங்கெல்லாம் போய் அவஸ்தைப்பட்டதே கிடையாது. கோவில் உண்டியல்களில் கடவுள் என்னைப் பாதுகாக்கின்றார். மண் உண்டியல்களில் குழந்தைகள் என்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றன”. இதைக் கேட்ட ஆயிரம் ரூபாய் நோட்டு எதுவும் பேசாது அமைதியானது. ஆணவத்தோடு இருந்தால் அழிவையும், தாழ்ச்சியோடு இருந்தால் உயர்வையும் சிந்திப்போம் என்பதை இந்தக் கதை நமக்கு அழகாக எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய பொனவெந்தூரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாம் அவரிடம் விளங்கிய தூய வாழ்க்கையை, தாழ்ச்சியை நமதாக்குவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 

தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர்

*மத்தேயு 10: 34-11:1*

*“தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர்”*

*நிகழ்வு*

நெதர்லாந்து நாட்டில் பிறந்த மிகச்சிறந்த ஓவியர் பிரான்ஸ் ஹால்ஸ் (Frans Hals) என்பவர். அவருடைய ஓவியங்கள் இன்றைக்கும் மக்களால் வியந்து பாராட்டப்படுகின்றன. ஆனால், அவர் ஒரு பயங்கரக் குடிகாரர். குடித்துவிட்டால் அவர் சுயநினைவை இழந்து எங்காவது விழுந்து கிடப்பார். மக்கள்தான் அவரை அவருடைய வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு வந்து, படுக்கையில் கிடத்துவார்கள். இது ஒருநாள்கூடத் தவறாமல், நாள்தோறும் நடந்துகொண்டிருந்தது. மக்களும் அவர்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததால், அவர் குடித்துவிட்டுச் சாலையில் கிடப்பதைப் பெரிதாகக் கருதாமல், அவரைத் தூக்கிக்கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினார்கள். 

இதற்கிடையில் மக்கள் அவரைப் படுக்கையில் கிடத்துகின்றபோது அவர், “கடவுளே! மிகப்பெரிய குடிக்காரனாகிய என்னைச் சீக்கிரம் மேலே எடுத்துக்கொள்ளும்” என்ற வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் மன்றாடிவந்தார். இதைக் கவனித்த ஒருசிலர்,  அவ்வார்த்தைகளை அவர் உணர்ந்துதான் சொல்கிறாரா? அல்லது கேளிக்கைகாகச் சொல்கிறாரா? என்று சோதித்துப் பார்க்க விரும்பினார்கள். எனவே அவர்கள் பிரான்ஸ் ஹால்ஸினுடிய படுக்கைக்கு மேலிருந்த தளத்தில் நான்கு துளைகளைப் போட்டு, அவற்றின் வழியாக நான்கு கயிறுகளை இறக்கி, அவற்றை அவர் படுக்கும் கட்டிலின் நான்கு கால்களோடும் இறுகக் கட்டினார்கள். 

வழக்கம் போல் குடித்துவிட்டுத் தெருவோரத்தில் கிடந்த பிரான்ஸ் ஹால்சை மக்கள் தூக்கிக்கொண்டு அவருடைய படுக்கையில் கிடத்தினார்கள். அவர் கட்டிலில் கிடத்தப்பட்டதும் எப்போதும் சொல்கின்ற, ‘கடவுளே மிகப்பெரிய குடிக்காரனாகிய என்னைச் சீக்கிரம் மேலே எடுத்துக்கொள்ளும்” என்று சொல்லி மன்றாடத் தொடங்கினார். உடனே கட்டிலோடு பிணைக்கப்பட்ட கயிறுகளைப் பிடித்துக்கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்கள் வேகமாக இழுக்கத் தொடங்கினார்கள். தான் மேலே செல்கின்றோம் என்பதை உணர்ந்த பிரான்ஸ் ஹால்ஸ், “‘கடவுளே! பாவியாகிய என்னைச் சீக்கிரம் மேலே எடுத்துக்கொள்ளும்’ என்றுதான் வேண்டினேன்... ஆனால், இவ்வளவு சீக்கிரம் என்னை மேலே எடுத்துக்கொள்ளும் என்று வேண்டவில்லை” என்றார். 

‘இந்த உலகத்தை விட்டு சீக்கிரம் போய்விடவேண்டும்’ என்று சொல்பவர்கள்கூட உயிர் வாழவும் அல்லது உயிரைக் காத்துக்கொள்ளவும் தான் ஆசைப்படுகின்றார்கள். இப்படித் தங்களுடைய உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக்கொள்வர் என்று நற்செய்தியில் இயேசு கூறுகின்றார். அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். 

*உயிரைக் காக்க நினைப்பவர் இழந்துவிடுவர்* 

ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றார். அவ்வாறு அவர் அவர்களை அனுப்புகின்றபோது, அவர்கட்கு ஒருசில அறிவுரைகளையும் சிந்தனைகளையும் தருகின்றார். அவற்றில் ஒன்றுதான், ‘உயிரைக் காக்க நினைப்பவர் அதை இழந்துவிடுவர். உயிரை இழக்க நினைப்பவரோ, அதைக் காத்துக்கொள்வார்’ என்பதாகும். 
முதலில் உயிரைக் காத்துக்கொள்ள நினைப்பவர் எப்படி அதை இழக்கின்றார் என்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசு தன்னைப் பின்பற்றுகின்றவர்கள், மற்ற எல்லாரையும் விட தனக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் தன்னுடைய சிலுவையைச் சுமக்கவேண்டும் என்றும் கூறுகின்றார். சிலுவையை சுமப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதற்காக ஒருவர் உயிரையும் தரவேண்டும். உயிரைத் தரவேண்டுமே என்று நினைத்துக்கொண்டு ஒருவர் இயேசுவைப் பின்பற்றுவதையும் சிலுவை சுமப்பதையும் நிறுத்திக்கொண்டுவிட்டால், அவர் இயேசுவின் சீடராக இருப்பதற்குத் தகுதியற்றவராய்ப் போவது மட்டுமன்றி, வாழ்வையும் இழக்கின்றார். ஏனென்றால், இயேசுதான் வாழ்வாக இருக்கின்றார் (யோவா 14:6). ஆகையால், சிலுவையைச் சுமப்பதால் வரும் துன்பங்கட்குப் பயந்து ஒருவர் இயேசுவைப் பின்தொடராமல் இருந்தால், அவர் தன்னுடைய வாழ்வை இழந்து விடுவார் என்று  உறுதி. 

*உயிரை இழக்க நினைப்பவரோ காத்துக்கொள்வர்*

உயிரைக் காக்க நினைப்போர், அதை இழந்துவிடுவர் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்த்த நாம், உயிரை இழக்க நினைப்பவர் அதை எவ்வாறு காத்துக்கொள்கின்றனர் என்று சிந்தித்துப் பார்ப்போம். 

மேலே நாம் சிந்தித்துப் பார்த்ததுபோல, இயேசுவைப் பின்பற்றுவதால் சிலுவையை சுமக்க நேரிடலாம். அதன்பொருட்டு உயிரையும் இழக்கலாம். அவ்வாறு நாம் உயிரை இழக்கின்றபோதுதான் அதைக் காத்துக்கொள்கின்றோம். எப்படி என்றால், இயேசு சொல்வதுபோல, கோதுமை மணி விழுந்து மடிந்தால்தான் அது மிகுந்த விளைச்சலை அளிக்கும். மடியாவிட்டால் அது அப்படியேதான் இருக்கும் (யோவா 12:24) அதுபோன்றுதான் இயேசுவின் பொருட்டு நம்முடைய வாழ்வை  இழக்கத் துணிகின்றபோதுதான் அதைக் காத்துக்கொள்ள முடியும். அப்படி இல்லையென்றால், நம்முடைய உயிரைக் காக்கவே முடியாது. 

*சிந்தனை*
‘என் பெயரின் பொருட்டு வீடுகளையோ சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறுமடங்காகப் பெறுவர், நிலைவாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்’ (மத் 19:20) என்பார் இயேசு. ஆகவே, இயேசுவின் பொருட்டு எல்லாவற்றையும் இழக்கத் துணிவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். 

துன்பம் நம்மைப் புடமிடும்

*விடுதலைப் பயணம் 1: 8-14, 22*

*துன்பம் நம்மைப் புடமிடும்*

*நிகழ்வு*

தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவர்க்குக் கோடிக்கணக்கில் சொத்துகள் இருந்தன. இதனால் அவருடைய வாழ்க்கை நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. இப்படி இருக்கையில் அவருடைய தொழிலில் தொடர் தோல்விகள் ஏற்படவே அவர் கடன்காரரானார். இதனால் அவர் வீட்டைவிட்டு வெளியேறி, மனம் போன போக்கில் நடக்கத் தொடங்கினார். 

இடையில் ஓர் ஊர் வந்தது. அந்த ஊரின் எல்லையில் இருந்த நிலத்தில் விவசாயி ஒருவர் கோதுமை மணிகளை விதைத்து, அவற்றை மண்வெட்டியால் கொத்தி நிலம் முழுவதும் நிரப்பிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த அந்தத் தொழிலதிபர் விவசாயியிடம், “என்னய்யா நீங்கள்! அதான் கோதுமை மணிகளை நிலம் முழுவதும் விதைத்து விட்டீர்களே!. பிறகு எதற்கு அவற்றை மண்வெட்டியால் கொத்தி நிலம் முழுவதும் நிரப்பிக் கொண்டிருக்கின்றீர்கள்?” என்றார். “கோதுமை மணிகள் மண்ணுக்குள் ஆழமாகப் போனால்தானே மழை பெய்யும்போதும் தண்ணீர் பாய்ச்சும் போதும் அவை நிலத்தில் உறுதியாக இருந்து நிறைந்த பலனைத் தரும்” என்றார் விவசாயி. இதைக் கேட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தவராய் விவசாயி தொடர்ந்து நடக்கத் தொடங்கினார். 

சிறிதுதூரம் அவர் சென்றதும் விவசாயி ஒருவர், இரண்டு ஏர்மாடுகளை வைத்து, நிலத்தை ஆழமாக உழுது கொண்டிருந்தார். இதைப் பார்த்துவிட்டு தொழிலதிபர் அந்த விவசாயியைப் பார்த்து, “ஐயா பெரியவரே! நீங்கள் இப்படி நிலத்தை ஆழமாக உழுவதால், அதற்கு வலிக்காதா? அது மிகபெரிய குற்றமாகாதா?” என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி, “அப்படியில்லை... நிலத்தை ஆழமாக உழுதால்தான் பயிரிடுவதற்குத் தோதுவாக இருக்கும். இல்லையென்றால், இந்நிலத்தில் பயிர்செய்ய முடியாது” என்றார். 

அந்த விவசாயி சொன்னதையும் காதில் போட்டுக்கொண்டு தொழிலதிபர் தொடர்ந்து நடந்தார். இன்னும் சிறிதுதூரம் அவர் சென்றிருப்பார். அப்பொழுது ஒருவர் தன்னுடைய மல்லிகைத் தோட்டத்தில் இருந்த செடிகளை கத்திரியால் வெட்டிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் தொழிலதிபர் அவரிடம், “நன்றாக வளர்ந்திருக்கின்ற இந்த மல்லிகைச் செடிகளை இப்படி வெட்டிக்கொண்டிருக்கின்றீர்களே... இது உங்களுக்கு நன்றாக இருக்கின்றதா?” என்றார். உடனே அந்த மனிதர் அவரிடம், “இந்த மல்லிகைச் செடிகளை அவ்வப்போது சீராக  வெட்டிவிட்டால்தான் அவை நல்ல பலனைக் கொடுக்கும். இல்லையென்றால் அவை பெயருக்கு வளர்ந்திருக்குமே ஒழியே, சரியாகப் பூக்கள் பூக்காது” என்றார். 

இப்பொழுது அவர், அந்த மூன்று விவசாயிகள் சொன்னதையும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கத் தொடங்கினார். ‘கோதுமை மணிகள் நல்ல பலனைத் தர, அவை நன்றாகக் கொத்தப்பட்ட நிலத்தினுள்ளே போடப்படுகின்றன... நிலம் நல்ல பலனைத் தர, ஆழமாக உழப்படுகின்றது. மல்லிகைச் செடிகள் நன்றாகப் பூப்பூக்க அவ்வப்போது கத்தரிக்கப்படுகின்றன. அப்படியானால் நானும் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற இதுபோன்ற துன்பங்களால் புடமிடப்படவேண்டியது அவசியம்தானோ!’ இத்தகைய தெளிவினை அவர் பெற்றுக்கொண்ட பிறகு தனக்கு ஏற்பட்ட துன்பங்கட்காக இறைவனுக்கு நன்றி செலுத்தத் தொடங்கினார். பின்னர் கடுமையாக உழைத்து தன்னுடைய தொழிலில் முன்பைவிடப் பெரிய நிலையை அடைந்தார். 

ஒருவருடைய வாழ்க்கையில் வரும் துன்பங்கள் அவரைப் புடமிடுகின்றன. அத்தகைய துன்பங்களை அவர் மனவுறுதியோடு தாங்கிக்கொண்டு உழைத்தால் வெற்றி பெறலாம் என்பதை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துக் கூறுகின்றன. இந்திய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் –எபிரேயர்கள் - பாரவோன் மன்னனால் துன்புறுத்தப்படுகின்றார்கள். அவர்கள் பட்ட துன்பம் அவர்களை மிகவும் வலிமைவாய்ந்த ஓர் இனமாக மாற்றுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

*இஸ்ரயேல் மக்கள் பாராவோனின் ஆட்சியில் துன்பப்படக் காரணமென்ன?*    

கானான் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதால், எகிப்திற்குச் செல்லும் யாக்கோபின் குடும்பம் அங்கு, ஆண்டவர் சொன்னது போன்று (தொநூ 12) பலுகிப் பெருகுகின்றது. இதைத் தொடர்ந்து எகிப்து நாட்டை ஆண்ட பாரவோன் மன்னன் யாக்கோபின் சந்ததியினரைக் கொடுமைப்படுத்தத் தொடங்குகின்றான். அவன் ஏன் அவர்களைக் கொடுமைப்படுத்தவேண்டும் என்றால், அவனுக்கு அவர்களைக் குறித்து முழுவதுமாகத் தெரியாமல் இருந்தது. அடுத்ததாக, எபிரேயர்கள் எகிப்தியர்களைவிட செழித்தோங்கி வளர்ந்திருந்தார்கள். இதைவிட மிக முக்கியமான காரணம், எபிரேயர்கள் அதாவது யாக்கோபின் சந்ததியினர் நாட்டின் எல்லைப் பகுதிகளில் குடியிருந்தார்கள். அவர்கள் எதிரி நாட்டினரோடு கைகோர்த்தால் தன்னுடைய நாட்டிற்கு அது வினையாகிவிடும்  என்று நினைத்து பாரவோன் அவர்களைக் கொடுமைப்படுத்துகின்றான். 

*துன்பங்களின் வழியாக தன் மக்களைப் புடமிட்ட இறைவன்*

பாரவோனின் ஆட்சியில் கட்டிட வேலைகளிலும் விவசாயம் சார்ந்த வேலைகளிலும் எபிரேயர்கள் ஈடுபடுத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்கள். இத்துன்பங்களின் வழியாக கடவுளை அவர்களை உறுதிப்படுத்தி, அவர்களை இன்னும் வலிமை வாய்ந்த இனமாக உருவாக்கினார். அது மட்டுமல்லாமல் அவர்கள் வழியாக பேரரசராம் ஆண்டவர் இயேசுவைத் தோன்றச் செய்கின்றார்.

சில சமயங்களில் நாம் நினைக்கலாம், ‘இந்தத் துன்பமெல்லாம் நமக்கு எதற்கு?’ என்று. இறைவன் துன்பங்களின் வழியாக நம்மை வலிமையுறச் செய்கின்றார். அதற்காகவே, அவர் துன்பங்களை நம்முடைய வாழ்வில் அனுமதிக்கின்றார். இந்த உண்மையை உணர்ந்தொமெனில் நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களைக் கண்டு நாம் அஞ்ச மாட்டோம். 

*சிந்தனை*

‘கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால், அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்’ (யோவா 12: 24) என்பார் இயேசு. ஆகவே, நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொண்டு, தொடர்ந்து இலக்கை நோக்கி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் 

தூய கமிலஸ் தே லெல்லிஸ் வாழ்க்கை வரலாறு

*தூய கமிலஸ் தே லெல்லிஸ் (ஜூலை 14)*

_“இயேசுவே என் இறைவனே! உம் மக்களும் உம் சகோதர சகோதரிகளுமான நோயாளிகளுக்கு என் முழு உள்ளத்தோடு சேவை செய்ய நான் வாக்களிக்கின்றேன்” – தூய கமிலஸ்_ 

*வாழ்க்கை வரலாறு*

கமிலஸ், இத்தாலியில் உள்ள அப்ருசி என்னும் இடத்தில் 1550 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு நீண்ட நாட்களாக குழந்தையே இல்லை. பல்வேறு விதமான ஒறுத்தல் மற்றும் பக்தி முயற்சிகளுக்கு பின்னேதான் இவர் பிறந்தார்.

கமிலசின் தந்தை ஒரு போர்வீரர். எனவே இவரும் தன் தந்தையை போன்று போர்வீராக மாற ஆசைப்பட்டார். இவர் ஆசைப்பட்டது போலவே பின்னாளில் ஒரு போர்வீரராகி துருக்கியர்களுக்கு எதிரான போரில் கலந்துகொண்டார். அந்தப் போரில் இவருடைய காலில் குண்டடிபட்டதால் இவருடைய வாழ்க்கையே கேள்விக்குறியானது.

இவர் தன்னுடைய காலில் பட்ட குண்டை அகற்றுவதற்கு உரோமை நகரில் இருந்த சான் ஜியாகோமா என்ற மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு இவர் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து மருத்துவச் சிகிச்சை பெற்று வந்தார். அந்நாட்களில் இவருடைய நடத்தை சரியில்லாததால் இவர் வெளியே துரத்தப்பட்டார். அதனால் இவர் தெருவில் பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அப்போது கப்புச்சின் சபையைச் சார்ந்த ஒரு துறவி இவருடைய நிலையைப் பார்த்து, இவருக்கு தன்னுடைய துறவுமடத்தில் வேலை ஒன்றை போட்டுக்கொடுத்தார். அங்கே இவருடைய வாழ்க்கையில் நிறைய மாற்றம் காணப்பட்டது. இதன்பிறகு இவர் முன்பு தான் மருத்துவ உதவிகளைப் பெற்றுவந்த சான் ஜியோகோமோ மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு இவருடைய நடத்தையில் காணப்பட்ட நிறைய மாற்றங்களைக் கண்டு, இவரை அங்கேயே தங்கச் செய்தனர். அங்கு தன்னிலும் வறிய நிலையில் இருந்த நோயாளிகளுக்கு தன்னாலான உதவிகளை செய்யத் தொடங்கினார்; அவர்களை நல்லவிதமாய் பராமரித்துக் கொண்டார். இதனால் இவருக்கு நல்ல நல்ல மதிப்பு உண்டானது.

இப்படி இவருடைய வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கும்போதுதான் இவருக்கு தூய பிலிப்பு நெரியாரின் நட்பு கிடைத்தது. அவரை இவர் தன்னுடைய ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டு, நிறைய காரியங்களில் ஆலோசனை பெற்று வந்தார். ஒருகட்டத்தில் கமிலசுக்கு நோயாளிகளுக்காக சபை ஒன்றைத் தொடங்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதனை இவர் தன்னுடைய ஆன்ம குருவிடத்தில் சொன்னபோது, “நல்ல காரியம், விரைவாகத் தொடங்கு” என்றார். உடனே கமிலஸ் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள, The Clerks Regular of Good Death, Ministers to the Sick எனப்படும் கமிலியன் சபையைத் தோற்றுவித்தார். இந்த சபையினுடைய பிரதான நோக்கமே நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதுதான்.

கமிலஸ் ஏற்படுத்திய சபையில் நிறையப் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தார். அவர்களுடைய ஒத்துழைப்பின் பேரில், நோயாளிகளைக் கவனித்துக் கொள்கின்ற பணியினை மிகச் சிறப்பான முறையில் செய்தார்.

இப்படி நோயாளிகள் நலம்பெற தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த கமிலஸ்  1614 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1746 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த எட்டாம் சிங்கராயரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய கமிலசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். 

*1. நோயாளிகளிடத்தில் அக்கறை* 

தூய கமிலசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் நோயாளிகளிடத்தில் கொண்டிருந்த அன்பும் அக்கறையும்தான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. கமிலஸ் தன்னிடத்தில் வந்த நோயாளிகளை தன்னுடைய சகோதர சகோதரிகளைப் போன்று பார்த்து, அவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்துவந்தார்.

தூய கமிலசைப் போன்று நாம் நோயாளிகளிடம் அக்கறையும் அன்பும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இறுதித் தீர்ப்பின் போது ஆண்டவர் இயேசு தனக்கு முன்பாகக் கூடியிருந்தவர்களைப் பார்த்து கேட்கின்ற கேள்வி, “நான் நோயுற்றிருந்தேன் என்னை கவனித்துக் கொண்டாயா?” என்பதுதான். இந்த இறைவார்த்தை இயேசு ஒவ்வொரு நோயாளியிடமும் இருக்கின்றார், நோயாளியைக் கவனித்துக் கொள்ளும்போது நாம் இயேசுவையே கவனித்துக் கொள்கின்றோம் என்ற செய்தியை நமக்கு எடுத்துரைப்பதாக இருக்கின்றது.

ஆகவே, தூய கமிலசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நோயாளிகளிடத்தில் இயேசுவைக் காண்போம், அவர்களுக்கு அன்போடும் கரிசனையோடும் சேவை செய்வோம். 

Theme of the Sunday

To Inherit Eternal Life. Our love of God, we learn from today’s gospel, will be assessed on our attitude towards people. A true religion is a religion of love, not one of mere words. The Samaritan was capable of sharing in God's compassion for all people. The first reading tells us that the commandments are not imposed from outside but spring from our hearts. The second reading is in line with this theme. Jesus holds the first place in love for his brethren. He was the first authentic “Samaritan.”
______________________________________
*FIRST READING*       
A reading from the Book of Deuteronomy (Deuteronomy 30: 10-14)
“The word is very near you so that you can do it.”

Moses spoke to the people, saying, “You shall obey the voice of the Lord your God, and keep his commandments and his statutes which are written in this book of the law, and turn to the Lord your God with all your heart and with all your soul. “For this commandment which I command you this day is not too hard for you, neither is it far off. It is not in heaven, that you should say, ‘Who will go up for us to heaven, and bring it to us, that we may hear it and do it?’ Neither is it beyond the sea, that you should say, ‘Who will go over the sea for us, and bring it to us, that we may hear it and do it?' But the word is very near you; it is in your mouth and in your heart, so that you can do it.”
______________________________________
*RESPONSORIAL PSALM*  Psalm 69:13 and 16.29-30.32—33.35ab and 36 (R. see 32)
*R/. You who are poor, seek God, and your hearts will revive.*

I pray to you, O Lord, for a time of your favour.
In your great mercy, answer me, O God,
with your salvation that never fails.
Lord, answer, for your mercy is kind;
in your great compassion, turn towards me. *R/.*

As for me in my poverty and pain,
let your salvation, O God, raise me up.
Then I will praise God’s name with a song;
I will glorify him with thanksgiving. *R/.*

The poor when they see it will be glad,
and God-seeking hearts will revive;
for the Lord listens to the needy,
and does not spurn his own in their chains. *R/.*

For God will bring salvation to Sion,
and rebuild the cities of Judah.
The children of his servants shall inherit it;
those who love his name shall dwell there. *R.*
______________________________________
*SECOND READING*
A reading from the Letter of Saint Paul to the Colossians (Colossians 1:15-20)
“All things were created through him and in him.”

Christ Jesus is the image of the invisible God, the first-born of all creation; for in him all things were created, in heaven and on earth, visible and invisible, whether thrones or dominions or principalities or authorities — all things were created through him and for him. He is before all things, and in him all things hold together. He is the head of the body, the Church; he is the beginning, the first-born from the dead, that in everything he might be pre-eminent. For in him all the fullness of God was pleased to dwell, and through him to reconcile to himself all things, whether on earth or in heaven, making peace by the blood of his cross.
______________________________________
*ALLELUIA*
John 6:63c.68c
Alleluia. Your words, Lord, are Spirit and life; you have the words of eternal life. Alleluia.
______________________________________
*GOSPEL*         
A reading from the holy Gospel according to Luke (Luke 10:25-37)
“Who is my neighbour?”

At that time: Behold, a lawyer stood up to put Jesus to the test, saying, “Teacher, what shall I do to inherit eternal life?” He said to him, “What is written in the law? What do you read there?” And he answered, “You shall love the Lord your God with all your heart, and with all your soul, and with all your strength, and with all your mind; and your neighbour as yourself.” And he said to him, “You have answered right; do this, and you will live.” But he, desiring to justify himself, said to Jesus, “And who is my neighbour?” Jesus replied, “A man was going down from Jerusalem to Jericho, and he fell among robbers, who stripped him and beat him, and departed, leaving him half dead. Now by chance a priest was going down that road; and when he saw him he passed by on the other side. So likewise a Levite, when he came to the place and saw him, passed by on the other side. But a Samaritan, as he journeyed, came to where he was; and when he saw him, he had compassion, and went to him and bound up his wounds, pouring on oil and wine; then he set him on his own beast and brought him to an inn, and took care of him. And the next day he took out two denarii and gave them to the innkeeper, saying, ‘Take care of him; and whatever more you spend, I will repay you when I come back.’ Which of these three, do you think, proved neighbour to the man who fell among the robbers?” He said, “The one who showed mercy on him.” And Jesus said to him, “Go and do likewise.”
_______________________________________

*Today’s Reflection*

The path to inherit eternal life is not so far from us as to need someone to bring it near. It is visible in Jesus and expressed in his teaching: ‘Love your neighbour as yourself.’ This path to eternal life calls us to stretch beyond our comfort zone to the very unfamiliar and the strange. It is a human inclination in us to love our own and despise what we consider as the other. Your neighbour is that person with whom you may not necessarily share the same faith. He is that person with whom you may not necessarily share the same race, ideology, or opinions. In a world that is becoming more exclusive and boundary-bound, true worshippers of God are invited to break those boundaries and reach out to the other.