Wednesday 31 July 2019

புனிதர்கள் சுவக்கீம், அன்னா தூய மரியாவின் பெற்றோர் நினைவு l

*நிகழ்வு* 

இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எழுதப்பட்ட, திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத தூய யாக்கோபு நற்செய்தியில் சொல்லப்படும் செய்தி.

மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம், அன்னமாளுக்கு திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆனபின்பும் குழந்தைப் பேறு இல்லை. இருந்தாலும் அவர்கள் இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் மரியாவின் தந்தையாகிய ஜோக்கிம் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று, நாற்பது நாட்கள் நோன்பிருந்து இறைவனிடம் ஜெபித்து வந்தார். அப்போது வானதூதர் அவருக்குத் தோன்றி, “ஜோக்கிம்! உன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டுவிட்டது, உன் மனைவி ஒரு மகளைப் பெற்றெடுப்பார்” என்று சொல்லிவிட்டு மறந்து போனார். அன்னமாளுக்கும் வானதூதர் தோன்றி அதே செய்தியைச் சொன்னார். வானதூதர் சொன்னது போன்று பத்தாம் மாதத்தில் அன்னம்மாள் ஒரு மகவைப் பெற்றெடுத்தார். அவர்தான் மரியா.

*வாழ்க்கை வரலாறு*

மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம் அன்னம்மாளைக் குறித்து விவிலியத்தில் எங்கும் காணக்கிடைக்கவில்லை, மேலே சொல்லப்பட்ட யாக்கோபு நற்செய்தியில்தான் அவர்களைப் பற்றிய செய்தி காணக்கிடக்கிறது. ஜோக்கிம் என்றால் ‘கடவுள் தயார் செய்கிறார்’ எனப் பொருள், அன்னம்மாள் என்றால் ‘அருள்’ எனப் பொருள்படுகின்றது. அந்த நற்செய்தியின் படி, ஜோக்கிம் அன்னம்மாள் தம்பதியர் கடவுளுக்கு அஞ்சி நடக்கின்றவர்களாக, ஜெபிக்கின்ற தம்பதியராக வாழ்ந்து வந்தார். எந்தளவுக்கு என்றால், இருபது ஆண்டுகளுக்கு மேலாகவும் அவர்களுக்கு குழந்தை இல்லாது இருந்தாலும், அவர்கள் இறைவனிடத்தில் ஜெபிப்பதற்கு மறக்கவில்லை, அனுதினமும் அவர்கள் இறைவனிடத்தில் ஜெபித்து வந்தார்கள். அந்த ஜெபத்தினாலேயே மரியாவைப் பெற்றெடுத்தார்கள்.

அடுத்ததாக ஜோக்கிம் அன்னம்மாள் இருவரும் தாராள உள்ளத்தினராய் வாழ்ந்து வந்தார்கள். எப்படியென்றால் தங்களுடைய வருமானத்தை மூன்று பக்தியாகப் பிரித்து அதில் ஒரு பகுதியை எருசலேம் திருக்கோவிலுக்கும், இன்னொரு பகுதியை ஏழைகளுக்கு உதவி செய்வதற்கும், மூன்றாவது பகுதியை தங்களுக்கென பயன்படுத்தியும் வந்தார்கள். அவர்கள் ஒருபோதும் தாங்கள் பெற்ற செல்வம் தங்களுக்கானது மட்டும் அல்ல, அது பிறருக்கானது என்று வாழ்ந்ததனால்தான்   இறைவனுடைய கடைக்கண் பார்வை அவர்கள்மீது பட்டது. ‘நம்மோடு இருப்பவர்களை நாம் பராமரித்துக்கொண்டால், இறைவன் நம்மைப் பராமரிப்பார் என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.

மூன்றாவதாக, ஜோக்கிமும் அன்னம்மாளும் நன்றியுள்ள தம்பதியராக வாழ்ந்து வந்தனர். இறைவன் அவர்களுக்கு அவருடைய முதிர்ந்த வயதில் குழந்தைப் பேற்றைத் தந்தார். அதற்காக அவர்கள் தங்களுடைய வாழ்நாள் எல்லாம் நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள். கடவுள் தந்த குழந்தையை கடவுளுக்கே அர்ப்பணித்து, தங்களுடைய நன்றியுணர்வை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இவ்வாறு அவர்கள் கடவுளுக்கு உகந்த தம்பதியராய் வாழ்ந்து, சிறந்த பெற்றோருக்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார்கள். 

ஜோக்கிம் அன்னம்மாள் விழா தொடக்க காலங்களிலிருந்தே இருந்து வந்திருக்கிறது. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் ஜஸ்டினியன் என்பவர் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற இடத்தில் இந்த புனிதர்களுக்கு முதல்முறையாக ஆலயம் ஒன்றைக் கட்டினார். அதன்பிறகு புனித எலேனா என்பவர் ஜோக்கிம் அன்னம்மாள் வாழ்ந்த இல்லத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டினார். ஆனால் அது முகமதியர்களால் கைப்பற்றப்பட்டு, பள்ளிக்கூடமாக மாறத்தொடங்கியது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆறாம் சிக்ஸ்துஸ் என்ற திருத்தந்தை என்பவர் ‘மரியா ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைத் (நவம்பர் 21) தொடங்கி வைத்து, ஜோக்கிம் அன்னம்மாள் இருவரும் தங்களுடைய குழந்தை மரியாவை  கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து, அவரை இறைப்பணிக்காக அர்ப்பணித்தனர் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார். 

திருச்சபையின் ஒருசில மரபுகள் மற்றும் ஓவியங்கள், ஜோக்கிம் அன்னம்மாள் இருவரும் இயேசுவின் பிறப்புக்கு முன்பே இறந்துவிட்டார்கள் எனச் சொல்லும். எப்படியிருந்தாலும் அவர்கள் உலக மீட்பராம் ஆண்டவரைப் பெற்றெடுத்த அன்னை மரியாவைப் பெற்றெடுத்தவர்கள், வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் ஆண்டவரின் தாயைப் பெற்றெடுத்த தாய், தந்தையர் அவர்கள். அதற்காக நாம் ஆண்டவரைப் போற்றிப் புகழவேண்டும்.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம் அன்னம்மாளின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*1. சிறந்த பெற்றோர்களுக்கு எடுத்துக்காட்டு*

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்யிலாளர் தேபெஸ் நகரைச் சேர்ந்த கிரேட்ஸ் (Crates of Thebes) என்பவர். இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார். காரணம் இவருடைய போதனை மக்களின் உள்ளத்தைத் தைப்பது போன்று இருக்கும். இவருடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் குறிப்பாக பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நீதிநெறிகளை, ஒழுக்கநெறிகளைப் போதிக்காமல் அவர்களுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது, எப்பி பொருள் ஈட்டுவது என்றே கற்பித்து வந்தார்கள். இதைப் பார்த்து சினம்கொண்ட கிரேட்ஸ் என்ற அந்த மெய்யியலாளர் ஒருநாள் ஊரில் இருந்த மலைமீது ஏறி, “பெற்றோர்களே! நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நீதி நெறிகளைப் போதிக்காமல், அவர்களுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்று போதிக்கிறீர்கள், உங்கள் பிள்ளைகளைவிட அவர்கள் சம்பாதிக்கும் பணம்தான் பெரிது என்றா நினைக்கிறீர்கள்?” என்று அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்தார். 

அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் கூட பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை நீதிநெறியில், ஒழுக்க நெறியில் கடவுளுக்கு உகந்த வழியில் வளர்க்காதது மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கின்றது. இவர்கள் அனைவரும் ‘பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்கள்’ என்பதை மறந்து போனார்கள். ஆனால் இவற்றிற்கெல்லாம் முற்றிலும் மாறாக, முன்மாதிரியான பெற்றோராய் இருந்து, தங்களுடைய மகளை இறைவழியில் வழிநடத்தியவர்கள் ஜோக்கிமும் அன்னம்மாளும் என்று சொன்னால் அது மிகையாகாது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்” (மத் 7:17) ஆம், ஜோக்கிமும் அன்னமாவும் எப்படிப்பட்டவர்கள் என்பவர்கள் என்பதை மரியாவைக் கொண்டே அறியலாம். மரியா தூயவராக, மாசற்றவராக, கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவராக, எளியவருக்கு இரங்குபவராக, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்பவராக விளங்கினார் என்றால் இத்தகைய பேறும் புகழும் மரியாவின் பெற்றோரான ஜோக்கிம் மற்றும் அன்னமாளுக்குத்தான் போய் சேரும். அவர்கள்தான் தங்களுடைய குழந்தைக்கு முன்மாதிரியாக இருந்து, அவரை இறையன்பிலும், பிறரன்பிலும் வளர்த்தெடுத்தார்கள். ஆகவே, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் இருந்து, அவர்களை கடவுளுக்கு உகந்த பிள்ளையாக வளர்த்தெடுப்பது அவர்களுடைய கடமையாகும். 

மாவீரன் நெப்போலியன் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டான். “நம்முடைய பிரான்சு நாட்டில் நல்ல குடிமகன்கள் உருவாக வேண்டுமென்றால் நல்ல தாய்மார்கள் உருவாகவேண்டும்”. நல்ல தாய்மார்கள் மட்டுமல்ல, தந்தையர்கள் உருவாகினால்தான் நல்ல குடிமக்கள் உருவாவார்கள். ஆகவே, மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம் அன்னம்மாளின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நாம் முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துகாட்டுவோம், அவர்களை இறைவழியில் நடத்துவோம், அதன்வழியாக இறையருள் 


No comments:

Post a Comment