Showing posts with label GODs message. Show all posts
Showing posts with label GODs message. Show all posts

Saturday 22 February 2020

சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்”*


*“சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்”*

*நிகழ்வு*

ஒருவர் ஒரு பெரிய கடை வைத்து வாணிபம் செய்துவந்தார். அவர் தன்னுடைய கடைக்குப் பின்னால் ஒரு சிறிய அறை கட்டி, அதில் தன்னுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஒரு புனிதமான குருவின் படத்தை மாட்டி வைத்திருந்தார்.

எப்பொழுதெல்லாம் அவருக்குத் சோதனைகள் வந்தனவோ, குறிப்பாக தன்னுடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அதிகமான இலாபம் வைத்துப் பொருள்களை விற்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதோ அப்பொழுதெல்லாம் அவர் தன்னுடைய கடைக்குப் பின்னால் இருந்த அறைக்குச் சென்று, அங்கிருந்த குருவானவரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, “சுவாமி! எனக்கு மிகப்பெரிய ஒரு சோதனை வந்திருக்கின்றது. இந்தச் சோதனையை என்னால் வெற்றிகொள்ளமுடியவில்லை. உங்களுடைய திருமுகத்தை ஒருமுறை பார்த்துவிட்டால் என்னால் சோதனையை வெற்றிக்கொள்ள முடியும். அதனால்தான் உங்களுடைய திருமுகத்தைக் காண இங்கு வந்திருக்கின்றேன்” என்று சொல்லிவிட்டு, கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் நியாயமான இலாபம் வைத்து விற்பார்.

இந்த நிகழ்வில் வருகின்ற கடைக்காரர் தனக்கு வந்த சோதனையை தன்னுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த குருவானவரின் திருமுகத்தைப் பார்ப்பதன் மூலம் வெற்றிகொண்டார். நாம் நம்முடைய வாழ்வில் வரும் சோதனைகளை ஆண்டவரின் திருமுகத்தை ஒருமுறை பார்த்தோமெனில் வெற்றிகொள்ளலாம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம் சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது எப்படி என்று இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

*கடவுள் யாரையும் சோதிப்பதில்லை*

ஒருசிலர் ‘கடவுள் என் வாழ்வில் சோதனைகளுக்கு மேல் சோதனைகளை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். நாமும்கூட இவ்வார்த்தைகளைப் பலமுறை உச்சரித்திருப்போம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய முதல் வாசகத்தில் புனித யாக்கோபு சொல்லக்கூடிய வார்த்தைகள் நமது கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. “சோதனை கடவுளிடமிருந்தே வருகின்றது என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை” என்கின்றார் புனித யாக்கோபு.. இவர் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளை நன்கு உணர்ந்துகொண்டோமென்றால், சோதனைகள் கடவுளிடமிருந்தே வருகின்றன என்று சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்க மாட்டோம்.

*ஒவ்வொருவரும் தம் சொந்த தீய நாட்டத்தினாலேயே சோதிக்கப்படுகின்றனர்*

சோதனைகள் கடவுளிடமிருந்து வருவதில்லை என்று சொன்ன புனித யாக்கோபு, அந்தச் சோதனைகள் எப்படி வருகின்றன என்ற தெளிவினையும் நமக்குத் தருகின்றார். ஆம். “ஒவ்வொருவரும் தம் சொந்த தீய நாட்டத்தினாலேயே சோதிக்கப்படுகின்றனர்” என்று கூறுவதன் மூலம், சோதனைகள் எப்படி வருகின்றன என்பதற்கான தெளிவினைப் புனித யாக்கோபு தருகின்றார். இந்த இடத்தில் ஒருவர் எப்படியெல்லாம் சோதனைக்கு ஆளாகின்றார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

பொதுவாக சோதனைகள் எல்லாருக்கும் வரும். ஆண்டவர் இயேசுவுக்கே சோதனைகள் வந்தனவே! சோதனைக்கான விதையை ஆசை விதைக்கின்றது என்று சொல்லலாம். ஆசையால் நாம் ஏமாற்றப்படும்பொழுது, கடவுளின் கட்டளைகளை மீறுகின்றோம் அல்லது கீழ்ப்படியாமல் நடந்துகொள்கின்றோம். இதன்மூலம் நாம் சோதனைக்கு உட்பட்டு பாவம் செய்கின்றோம். இங்கு ஆதாமையும் ஏவாளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பாம்பின் பசப்பு மொழியால் ஆதாமின் மனைவியின் உள்ளத்தில் ஓர் ஆசை பிறக்கின்றது. அந்த ஆசை அவருக்கு ஒருவிதமான மயக்கத்தை ஏற்படுத்த, அவர் ஏமாந்துபோகின்றார். பின்னர் கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்கின்றார். ஆகவே, ஏவாளின் உள்ளத்தில் ஏற்பட்ட ஆசையே அவரையும் ஆதமையும் பாவம் செய்யத் தூண்டுகின்றது என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றும் ‘ஆசை அறுமின்’ என்று சொல்கின்றார்கள்.

*பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு*

ஒருவருக்கு வருகின்ற ஆசை அவரைச் சோதனையில் விழவைத்துப் பாவம் செய்யத் தூண்டுகின்றது என்று சிந்தித்துப் பார்த்தோம். இந்தப் பாவத்தினால் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்வோம். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவு.” ஆம், நாம் நமக்கு வரும் சோதனைகளுக்கு உட்படும்போது சாவைத்தான் கூலியாகப் பெறுவோம். அதே நேரத்தில் நாம் நமக்கு வரும் சோதனைகளை மனவுறுதியுடன் தாங்கிக்கொண்டால், பேறுபெற்றோர் ஆவோம் என்பது உறுதி. ஆகையால், நாம் பேறுபெற்றோராக மாற நமக்கு வரும் சோதனைகளை மனவுறுதியோடு தாங்கிக்கொள்வோம்

*சிந்தனை*

‘தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்’ (எபி 2: 18) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நாம் நமக்கு வரும் சோதனைகளை மனவுறுதியுடன் தாங்குவோம். அதநேரத்தில் சோதனைகளை வெற்றிக்கொள்ள இறைவனின் அருளை வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Seven Founders of the Order of the Servites



*Seven Founders of the Order of the Servites*

*FIRST READING*      
“The testing of your faith produces steadfastness that you may be perfect and complete.”
The beginning of the Letter of Saint James (James 1:1-1l)

James, a servant of God and of the Lord Jesus Christ, To the twelve tribes in the Dispersion: Greeting. Count it all joy, my brethren, when you meet various trials, for you know that the testing of your faith produces steadfastness. And let steadfastness have its full effect, that you may be perfect and complete, lacking in nothing. If any of you lacks wisdom, let him ask God, who gives to all men generously and without reproaching, and it will be given him. But let him ask in faith, with no doubting, for he who doubts is like a wave of the sea that is driven and tossed by the wind. For that person must not suppose that a double-minded man, unstable in all his ways, will receive anything from the Lord. Let the lowly brother boast in his exaltation, and the rich in his humiliation, because like the flower of the grass he will pass away. For the sun rises with its scorching heat and withers the grass; its flower falls, and its beauty perishes. So will the rich man fade away in the midst of his pursuits.
_______________________________________
*RESPONSORIAL PSALM*   Psalm119:67.68.71.72.75.76 (R. 77a)
*R/. Show me compassion, Lord,  that I may live.*

Before I was humbled, I strayed,
but now I keep your word. *R.*

You are good, and you do what is good;
teach me your statutes. *R.*

It was good for me to be humbled,
that I might learn your  statutes. *R.*

The law from your mouth means more to me
than large quantities of silver and gold. *R.*

O Lord, I know that your decrees are right;
though I am humbled, you are just. *R.*

Let your merciful love console me
by your promise to your servant.  *R.*
______________________________________
*ALLELUIA*
John 14:6
Alleluia. I am the way, and the truth, and the life, says the Lord; no one comes to the Father but by me. Alleluia.
______________________________________
*Gospel*
“why does this generation seek a sign?”
A reading from the holy Gospel according to Mark (Mark 8:11-13)

At that time: The Pharisees came and began to argue with Jesus, seeking from him a sign from heaven, to test him. And he sighed deeply in his spirit, and said, “Why does this generation seek a sign? Truly, I say to you, no sign shall be given to this generation.” And he left them, and getting into the boat again he departed to the other side.
_______________________________________
******************************************
                *Have a Blessed Day*
******************************************
*Today’s Reflection*
The Pharisees demanded a sign from Jesus. Their demand for a sign was to entrap Jesus and accuse him when the time seemed opportune. Jesus knew this and refused them and sign, partly because they lacked faith in him, and partly because their demand was a ploy to indict him. Is it not strange that people have varied motives for worshipping God? Some worship God for material and temporal benefit; some see the Church as a societal privilege, while some others see it as a pressure group. Very few seek God for who he is, out of love for God and neighbour. Jesus refused to give signs because he noticed that a lot of people followed him merely because of the miracles they saw him work; they expected wonder and entertainment. Today’s followers of Jesus do not differ from those people. Crusade grounds are always filled up, for various reasons, ranging from business deals and search for entertainment, fun and solutions to various problems.

துன்பம் வரும் வேளையில சிரிங்க”



*“துன்பம் வரும் வேளையில சிரிங்க”*

*நிகழ்வு*

ஓர் ஊரில் கிறிஸ்தவ இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அவன் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் இருப்பது போன்றும் குட்டிச் சாத்தான் அவனைத் தங்களுடைய கைகளில் இருந்த கொடிய ஆயுதங்களைக் கொண்டு தாக்குவது போன்று இருந்தது.

என்னதான் குட்டிச் சாத்தான்கள் அவனைக் கொடிய ஆயுதங்களைக் கொண்டு தாக்க முற்பட்டபோதும், அது அவனுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அப்பொழுது அவன் இயேசு சொன்ன இவ்வார்த்தைகளை நினைவில் கொண்டான். “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்.” இவ்வார்த்தைகளை அவன் நினைவில் கொண்டதும், ஆறுதல் அடைந்தான்.

ஆம், இயேசு இவ்வுலகை வெற்றிகொண்டுவிட்டபடியால் நாம் எந்தவொரு சோதனையையும் துன்பத்தையும் கண்டு அஞ்சத் தேவையில்லை. மாறாக அவற்றை மகிழ்வோடு எதிர்கொள்வோம் என்ற உண்மையை எடுத்துச்சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம், நம்முடைய வாழ்வில் சோதனை வருகின்றபொழுது, அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

*சோதனையின்பொழுது மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்*

பொதுவாக நம்முடைய வாழ்வில் சோதனைகள் வருகின்றபொழுது ஒன்று, கடவுளைப் பழித்துக் கொண்டிருப்போம். இல்லையென்றால், ‘எல்லாம் நம்முடைய விதி’ என்று சொல்லி அழுது புலம்பிக் கொண்டிருப்போம்; ஆனால், புனித யாக்கோபு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில், அதன் ஆசிரியர், “பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைக் கொண்டிருங்கள்” என்று கூறுகின்றார். உண்மையில், பல வகையான சோதனைகளுக்கு நாம் உள்ளாகும்போது, நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? மிகவும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு கேள்வியாக இருக்கின்றது. புனித யாக்கோபு சொல்வதுபோல் சோதனை வேளையில் நாம் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்யவேண்டும் என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

*மனவுறுதியோடு இருக்கவேண்டும்*

நம்முடைய வாழ்வில் சோதனைகள் வருகின்றபோது அல்லது நம்பிக்கை சோதிக்கப்படும்பொழுது அச்சோதனையில் வீழ்ந்து விடாமல் அப்படியே இருந்தால், மனவுறுதி உண்டாகும். அந்த மனவுறுதியே நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணமாக அமைந்துவிடும் என்கின்றார் புனித யாக்கோபு. இக்கருத்தினை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு புனித பேதுரு தன்னுடைய முதல் திருமுகத்தில் சொல்கின்ற வார்த்தைகளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. “இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள்” (1 பேது 1:6) என்பார் புனித பேதுரு. பல்வேறு சோதனைகளால் நாம் துயருற நேரிடலாம். அது இயற்கை. ஆனால், அப்படியே சோதனைகளைச் சந்திக்கின்றபொழுது ஒருபோதும் மனம்தளர்ந்து போய்விடக்கூடாது. ஒருவேளை நாம் மனம்தளர்ந்து போய்விட்டால் நாம் சோதனையில் விழுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. மாறாக, நாம் மனவுறுதியோடு இருந்தால், சோதனைகளை எளிதாக வெற்றிகொள்ளலாம். ஆகவே, நாம் நம்முடைய வாழ்க்கையில் மனவுறுதியோடு இருப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.

*ஞானத்தைக் கேட்போம்*

இன்றைய முதல் வாசகத்தில் புனித யாக்கோபு இன்னொரு முக்கியமான செய்தியைச் சொல்கின்றார். அது என்னவெனில், குறைவான ஞானமுடையோர் ஞானத்தை இறைவனிடம் கேட்கவேண்டும் என்பதாகும். பலர் சோதனையை எதிர்கொள்ள முடியாதவர்களாக, அதில் வீழ்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்டோர் மனவுறுதியோடு இருக்கவேண்டும் என்று மேலே நாம் சிந்தித்துப் பார்த்தோம். இந்த மனவுறுதி நமக்கு வேண்டும் என்றால், அதற்கு ஞானமானது தேவைப்படுகின்றது. அதனால்தான் புனித யாக்கோபு, குறைவான ஞானமுடையோர் ஞானத்தை இறைவனிடம் கேட்கவேண்டும் என்றும் அப்படிக் கேட்கின்றபோது முழு நம்பிக்கையோடு கேட்கவேண்டும் என்றும் கூறுகின்றார்.

ஆதலால் நாம் நம்முடைய வாழ்வில் சோதனைகள் வருகின்றபொழுது அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வோம். நாம் நமக்கு வருகின்ற சோதனைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றபோது மனம் உறுதியடைகின்றது. அதனாலேயே நம்முடைய வாழ்வில் இறைவனுடைய அருள் நிறைவாகத் தங்குகின்றது.

*சிந்தனை*

‘இறுதிவரை மனவுறுதியோடு இருப்பவரே மீட்புப் பெறுவர்’ (மத் 24:13) என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்முடைய வாழ்வில் எத்தனை சோதனைகளும் துன்பங்களும் வந்தாலும், இறுதிவரை மனவுறுதியோடு இருந்து ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது’



*‘இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது’*

*நிகழ்வு*

ஹாட்ரியன் என்றொரு மன்னன் இருந்தான். அவனுக்குக் கடவுள் நம்பிக்கையே கிடையாது. ஒருநாள் அவன் யூத இரபியான யோசுவாவிடம் சென்று, “நீங்கள் கடவுளிடம் பேசுவதாகச் சொல்கிறீர்கள்; ஆனால் அவர் எங்கே இருக்கின்றார் என்று சொல்லமாட்டேன் என்கிறீர்கள். ஒருவேளை அவர் இருக்கின்றார் என்றால், எனக்குக் காட்டுங்கள்” என்றார். அதற்கு இரபி யோசுவா, “அதெல்லாம் முடியாது” என்று பதிலுரைத்தார்.

“கடவுளைக் காணமுடியாதா...? அப்படியானால், காணமுடியாத கடவுளை நான் எப்படி நம்புவது...?” என்றான் ஹட்ரியான். இரபி யோசுவா ஒரு வினாடி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் மன்னனை அறையைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டு சென்று, சூரியனைப் பார்க்கச் சொன்னார். அதுவோ நண்பகல் வேளை. சூரியனைப் பார்க்க முயன்ற ஹாட்ரியனால் அதைப் பார்க்கவில்லை. அதனால் அவன் இரபி யோசுவாவிடம், “என்னால் பார்க்கமுடியவில்லை” என்றான். அப்பொழுது இரபி யோசுவா அவனிடம், “படைப்புப் பொருளையே பார்க்கமுடியாத உன்னால், படைத்தவனை எப்படிப் பார்க்க முடியும்?” என்றார். ஹட்ரியன் எதுவும் பேசமுடியாமல் வாயடைத்து நின்றான்.

கடவுளைக் காணவேண்டும் என்று கேட்ட ஹட்ரியன் என்ற மன்னனுக்கு இரபி யோசுவா தக்க பதில் தந்தது போன்று, இன்றைய நற்செய்தியில் அடையாளம் வேண்டும் என்று பரிசேயர்களுக்கு இயேசு தக்க பதில் தருகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்தப் பார்ப்போம்.

*ஏன் அடையாளம் கேட்டார்கள்?*

இயேசுவின் செல்வாக்கு நாளொன்று மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தது. இதைக் கேள்விப்பட்ட ‘பொறாமை மிகுந்த’ பரிசேயர்கள் அவரை வீழ்த்தவேண்டும் என்ற எண்ணத்தோடு இயேசுவிடம் வந்து, வானிலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டவேண்டும் என்று கேட்கின்றார்கள். இயேசு அவர்களுக்கு என்ன மறுமொழி கூறினார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பு, எந்த அடிப்படையில் பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் ஒன்றைக் காட்டுமாறு கேட்டார்கள் எனத் தெரிந்துகொள்வது நல்லது.

இணைச்சட்ட நூல் 13: 1-3, 18: 18-22 இல் இவ்வாறு வாசிக்கின்றோம். ‘உங்களிடையே ஓர் இறைவாக்கினனோ அல்லது கனவு காண்பவனோ தோன்றி, அடையாளம் காட்டுகின்றேன் என்று சொன்னால், உடனே அவனை நம்பிவிடவேண்டாம். ஏனெனில் அவன் உங்களை வேற்றுதெய்வங்களை வழிபடத் தூண்டுவான்.’

மேல்கண்ட இறைவார்த்தையின் அடிப்படையில் பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்டிருக்கலாம்; ஆனால், சாதாரண மக்கள் இயேசுவை இறைவாக்கினராக, தாவீதின் மகனாக, மெசியாவாக ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அப்படியிருக்கையில் பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்டதுதான் மிகவும் வியப்பாக இருக்கின்றது. ஒருவேளை இயேசுவால் அடையாளம் தரமுடியாத பட்சத்தில் அவர் இறைவாக்கினர் கிடையாது என்ற செய்தியை மக்களிடம் பரப்பலாம் என்ற எண்ணத்தில் பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்டிருக்கலாம் என்று சொல்லலாம்.

*இயேசு தந்த அடையாளம்*

வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும் என்று பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்டபொழுது, இயேசு பெருமூச்சு விட்டு, இத்தீய தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்று உறுதியாகச் சொல்கின்றார். மத்தேயு நற்செய்தியில், பரிசேயர்கள் அடையாளம் கேட்டபொழுது, இயேசு யோனாவை அடையாளமாகத் தருவார் (மத் 16:4); ஆனால், மாற்கு நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எந்த அடையாளமும் தரப்பட மாட்டாது என்று உறுதியாகக் கூறுகின்றார். இதற்கு முக்கியமான காரணம், இந்த நிகழ்விற்கு முன்பு இயேசு எத்தனையோ வல்ல செயல்களையும் அருமடையாளங்களையும் செய்திருப்பார். அவற்றைக் கண்டு, சாதாரண மக்கள் இயேசுவின் நம்பிக்கை கொண்டார்கள். இந்தப் பரிசேயர்கள்தான் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாமல், அவரைச் சோதித்துப் பார்க்கின்றார்கள். இதனாலேயே இயேசு அவர்களிடம் அடையாளம் எதுவும் தரப்படமாட்டது என்று கூறுகின்றார்.
இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும்

பரிசேயர்களுக்கு இயேசு அளித்த பதில் நமக்கொரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும்... அவரை நம்பவேண்டும் என்பதாகும். பரிசேயர்களுக்கு இயேசுவின் நம்பிக்கை இல்லை. அதனால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆனால் நாம் அப்படியிருக்கக்கூடாது. ஏனெனில், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறுவதுபோல், ‘நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆகமுடியாது’ (எபி 11:6). ஆகையால், நாம் இயேசுவை நம்புவோம். அவரைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோம்.

*சிந்தனை*

‘இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுவோரோடு கடவுள் இணைந்திருக்கின்றார்; அவரோடு கடவுளும் இணைந்திருக்கின்றார்’ (1 யோவா 4: 15) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவே இறைமகன் என ஏற்றுக்கொண்டு அவரோடு இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


தூய ஒனேசிம்

தூய ஒனேசிம்

மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, “கடவுளுக்கு நீர் அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே” என்று பதிலுரைத்தான். பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார். (லூக் 23: 43)

*வாழ்க்கை வரலாறு*

ஒனேசிம், பிரிகியாவைச் சேர்ந்தவர். இவர் கொலோசை நகரில் இருந்த பெரும் செல்வந்தராகிய பிலமோனிடம் அடிமையாய் வேலை பார்த்து வந்தார். ஒருசில காரணங்களால் ஒனேசிம் பிலமோனிடமிருந்து தப்பியோடி உரோமைச் சிறையில் இருந்த பவுலிடம் தஞ்சம் புகுந்தார். அங்கே சிலகாலம் அவரோடு தங்கி, அவருக்கு உதவிகள் புரிந்து வந்தார். இதற்கிடையில் பவுல், ஒனேசிம் தன்னோடு இருப்பது நல்லதல்ல, அவர் அவருடைய தலைவராகிய பிலமோனோடு இருப்பதே நல்லது என்று உணர்ந்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், “ஒனேசிமை மன்னித்து, அவரை அடிமையாக அல்ல, அன்புச் சகோதரராக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் ஒனேசிமை பிலமோனிடம் அனுப்பி வைக்க, அவர் அவருடைய குற்றங்களை மன்னித்து தனது சகோதரராக ஏற்றுக்கொண்டார்.

சில நாட்களுக்குப் பின் ஒனேசிம், பிலமோனிடமிருந்து விடுதலை அடைந்து மீண்டுமாக பவுலோடு இணைந்து பணியாற்றினார். அதன்பிறகு திமொத்தேயுவுக்குப் பின், எபேசு நகரின் ஆயராக உயர்ந்தார். அங்கு அவர் ஆண்டவரின் நற்செய்தியை மிகுந்த வல்லமையோடு எடுத்துரைத்தார். இயல்பிலே சிறந்த பேச்சாளராய் விளங்கிய இவர், மறையுரைகளை வல்லமையோடு ஆற்றினார். இந்த நேரத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான வேத கலாபனை நடைபெற்றது. இதில் இவர் 18 ஆண்டுகள் சித்ரவதையை அனுபவித்தார். அத்தகைய தருணங்களில் எல்லாம் இவர் ஆண்டவர் இயேசுவின் மீது உறுதியான நம்பிக்கையோடு இருந்தார். கி.பி. 95 ஆம் ஆண்டு, வதைப்போர் இவருடைய கால்களையும் தொடையையும் முறித்து இவரைக் கொன்று போட்டார்கள். இவ்வாறு ஒனேசிம் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்து மறைசாட்சியானார்.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய ஒனேசிமின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*1. மனமாற்றம்*

ஒனேசிமின் வாழ்க்கை வரலாற்றை ஒருகணம் நாம் வாசித்துப் பார்க்கும்போது, அவர் தான் செய்த தவற்றிற்காக தன்னுடைய தலைவரிடமிருந்து தப்பியோடி, பின்னர் தன்னுடைய தவற்றை உணர்ந்து தலைவரிடம் சென்று, மன்னிப்புக் கேட்டு, அவரிடமே பணியாற்றுகின்றார். ஓனேசிமின் இந்த மனமாற்றம் பின்னாளில் அவரை ஒரு பெரிய புனிதராக மாற்றுகின்றது. பாவம் அல்லது தவறு செய்யும் எவரும் தன்னுடைய தவற்றை உணர்ந்து மனமாறவேண்டும். அப்படி மனம்மாறுகின்றபோது அவருடைய வாழ்க்கை எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு போதிக்கின்ற முதல் போதனையே மனமாற்றம்தான். “காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது (மாற் 1:15). ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் போதனையைக் கேட்டு மனம்மாறுவதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

இந்த இடத்தில், நம்முடைய இந்திய நாட்டில் மிகப் பெரிய ஞானியை வாழ்ந்து மறைந்த சாது வாஸ்வானி அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருளுள்ளதாக இருக்கும். ஒரு சமயம் சாது வாஸ்வானி நடத்தி வந்த மீரா பள்ளிக்கூடத்திற்குள் திருடன் ஒருவன் புகுந்து அங்கிருந்த பொருள்களைத் திருடிக்கொண்டு ஓட முயன்றான். ஆனால், துரதிஸ்டவசமாக அவன் அங்கிருந்த காவலரிடம் மாட்டிக்கொள்ள, அவர் திருடனை நீதிமன்றத்தில் நிறுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி அந்தத் திருடனுக்கு கடுந்தண்டனை கொடுத்தார். இதற்கிடையில் செய்தி அறிந்த சாது வாஸ்வானி நீதிபதியிடம் சென்று, “ஐயா! அவன் திருடன் அல்ல, என் சகோதரன்தான். அவன் என்னுடைய பள்ளிக்கூடத்திலிருந்து எதையும் திருடவில்லை, அவனை விட்டுவிடுங்கள்” என்றார். மிகப் பெரிய ஞானி இவர். நிச்சயமாக இவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து, நீதிபதி அவனை விடுதலை செய்தார். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த திருடன் சாது வாஸ்வானியிடம் வந்து, “நான் செய்தது மிகப்பெரிய தவறு. அப்படியிருந்தும் என்னை மன்னித்து ஏற்றுக்கொண்டீர்களே, இனிமேலும் நான் திருடமாட்டேன், மனமாறி நல்ல மனிதனாக வாழ்வேன்” என்று சூளுரைத்து அதன்படி வாழ முயன்றான்.

மிகப்பெரிய திருடனை சாது வாஸ்வானி மன்னித்த உடன், மனம்மாறி புதிய மனிதனாக வாழ முற்பட்டான். இறைவனும் நம் பாவங்களை மன்னித்துவிட்டார். ஆகவே, நாம் மனம்மாறி புதிய மனிதனாக வாழ்வதுதான் சிறப்பானது.

ஆகவே, தூய ஒனேசிமின் விழாவை கொண்டாடும் நாம் மனம்மாறி புதிய மனிதர்களாக வாழ்வோம்.


Monday 10 February 2020

7 promise from God


*“இயேசு கற்பிக்கத் தொடங்கினார்; மாபெரும் மக்கள்கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வந்தது”*



*நிகழ்வு*

அது ஒரு பழமையான பங்கு. அந்தப் பங்கில் இருந்த பாடகற்குழுவில் பெரியவர் இருந்தார். அவருக்குச் சரியாகப் பாட வராது. இருந்தும், அவரிடம் ஆள் பலமும் பண பலமும் இருந்ததால், அவர் தொடர்ந்து பாடகற்குழுவில் இருந்து ‘பாடல்’ பாடிவந்தார். . இதற்கிடையில் அவருடைய குரலைக் கேட்டுக் கடுப்பான ஒருசிலர் அங்கிருந்த பங்குத்தந்தையிடம் சென்று, “சுவாமி! அந்தப் பெரியவரைப் பாடகற்குழுவிலிருந்து முதலில் நீக்குங்கள். அப்பொழுதுதான் பாடகர்குழு உருப்படும்” என்று சொல்லிவிட்டுப் போனார்கள். பங்குத்தந்தையும் அவரை நீக்குகிறேன் என்று சொல்லிவிட்டு, ‘அவரைப் பாடகர்குழுவிலிருந்து நீக்கினால் சண்டைக்கு வருவாரோ?’ என்று அமைதியாக இருந்தார்.

ஒருநாள் அந்தப் பெரியவர் பாடிய விதத்தைப் பார்த்துவிட்டு கோயிலுக்கு வந்த பலரும் எரிச்சலடைந்தார்கள். அதனால் அவர்கள் வழிபாடு முடிந்ததும், நேராகப் பங்குத்தந்தையிடம் சென்று, “சுவாமி முதலில் அந்தப் பெரியவரைப் பாடகற்குழுவிலிருந்து நீக்குங்கள். இல்லையென்றால் நாங்கள் யாரும் கோயிலுக்கு வரமாட்டோம்” என்று சற்று கோபத்தோடு சொல்லிவிட்டுப் போனார்கள்.

‘இதற்கு மேலும் அமைதியாக இருந்தால், பிரச்சனை பெரிதாகும்’ என்று நினைத்த பங்குத்தந்தை அந்தப் பெரியவரை அழைத்துப் பேசத் தொடங்கினார்; “ஐயா! நான் சொல்கிறேன் என்று என்னைத் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். கோயிலுக்கு வருகின்ற பலர், ‘உங்களுடைய குரல் நன்றாகவே இல்லை... நீங்கள் பாடகற்குழுவை விட்டு நீங்கவேண்டும்’ என்று சொல்கிறார்கள். அதனால் நீங்கள் பாடகற்குழுவை விட்டு நீங்கிக்கொள்கிறீர்களா...?” என்றார். பங்குத்தந்தை இவ்வாறு சொன்னதைக் கேட்டு அந்தப் பெரியவர் சிறிதுநேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் பங்குத்தந்தையிடம், “உங்களைப் பற்றியும்தான் மக்கள் ‘சாமியாருக்கு சரியாகப் பிரசங்கம் வைக்கத் தெரியவில்லை’, ‘மக்கள் எல்லாரும் பிரசங்க நேரத்தில் தூங்கித் தூங்கி வழிகிறார்கள்’ என்று சொல்கின்றார். அதற்காக நீங்கள் இந்தப் பங்கைவிட்டு நீங்கிவிடுகிறீர்களா...?” என்றார். பங்குத்தந்தையால் எதுவும் பேச முடியவில்லை.

இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவர் பங்குத்தந்தையிடம் உண்மையைப் பேசினாரோ அல்லது அவருக்குப் பதிலளிக்கவேண்டும் என்பதற்காகப் பேசினாரோ என்று தெரியவில்லை; ஆனால், ஆண்டவருடைய வார்த்தையைப் போதிப்பது அல்லது கற்பிப்பது ஒரு கலை. அந்தக் கலை இயேசுவுக்கு மிகச் சிறப்பாக வந்தது. இன்றைய நற்செய்தியின் தொடக்கத்தில், இயேசு கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கியபொழுது, மாபெரும் மக்கள்கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வந்தது என்று வாசிக்கின்றோம். இதற்குக் காரணமாக இருந்தவை எவை என சிந்தித்துப் பார்ப்போம்.

*இறைவேண்டலோடு எல்லாவற்றையும் செய்த இயேசு*

இயேசு கற்பித்ததைக் கேட்க, மாபெரும் மக்கள்கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வந்ததற்கு முதன்மையான காரணமாக, அவர் செய்த இறைவேண்டலைச் சொல்லலாம். ஆம், இயேசு ஒவ்வொரு செயலையும் இறைவேண்டலோடு தொடங்கினார். விடியற்காலையில் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று இறைவனிடம் வேண்டிய இயேசு (மாற் 1: 35) சீடர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னரும் தன்னுடைய நண்பர் இலாசரை உயிர்பிப்பதற்கு முன்னரும் இறைவனிடம் வேண்டினார் என்று நற்செய்தி நூல்கள் நமக்குச் சான்றுபகர்கின்றன. அந்த வகையில் அவர் மக்களிடம் கற்பிப்பதற்கு முன்னரும் இறைவனிடம் வேண்டியிருக்கவேண்டும் என்று உறுதியாகச் சொல்லலாம். அப்படியானால் இறைவார்த்தையை எடுத்துரைக்கும் குருவானவரும் சரி, இறையடியார்களும் சரி இறைவனிடம் வேண்டிவிட்டு இறைவார்த்தையைக் கற்பித்தால், அது பலருடைய உள்ளத்தைத் தொடுவதாக இருக்கும் என்பது உறுதி.

*அதிகாரத்தோடு போதித்த இயேசு*

இயேசு கற்பித்தது பலரையும் கவர்ந்திழுக்க இரண்டாவது முக்கியமான காரணம். அவர் அதிகாரத்தோடு போதித்தார் என்பதாகும். இயேசுவுக்கு எல்லா அதிகாரமும் விண்ணிலிருந்து தரப்பட்டது (மத் 28: 18) என்பது ஒருபக்கம் இருந்தாலும், அவர் மறைநூல் அறிஞர்களைப் போன்று சொல்வது ஒன்றும் செய்வது வேறொன்றுமாக (மத் 23: 3) இல்லாமல், சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராக (லூக் 24: 19) இருந்தார். அதனால்தான் அவர் கற்பித்ததைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்தார்கள்

அப்படியானால் இறைவாக்கை எடுத்துரைக்கும் குருக்களின், இறையடியார்களின் வாழ்க்கை இயேசுவைப் போன்று சொல்லிலும் செயலில் சிறந்ததாக இருந்தது என்றால், அவர்கள் கற்பிப்பத்தைக் கேட்க மக்கள் வருவார்கள் என்பது உறுதி. இயேசு மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் சிறு சிறு கதைகளையும் பயன்படுத்திப் போதித்தார் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இயேசு இறைவேண்டலோடு எதையும் தொடங்கினார்; சொல்லிலும் செயலில் வல்லவராக விளங்கினார் என்று சிந்தித்துப் பார்த்த நாம், அவரைப் போன்று இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்த்து, அவர் காட்டிய வழியில் நடக்க முயற்சி செய்வோம்.

*சிந்தனை*

‘அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை’ (யோவா 7: 46) என்று இயேசுவைப் பார்த்து, காவலர்கள் சொல்வார்கள். இயேசுவின் பேச்சு, அவருடைய போதனை எல்லாரையும் கவிர்ந்திழுக்க அவருடைய இறைவேண்டலும் அவருடைய வாழ்வும் காரணமாய் அமைந்தன. நமது போதனையும் வாழ்வும் எல்லாரையும் கவிர்ந்திழுக்க இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


*“எனது பெயருக்காகக் கோயில் கட்டவிருப்பவன் அவனே”*



*நிகழ்வு*

சிறுவன் ஒருவன் தன் தாய் தந்தையோடு கடற்கரைக்குச் சென்றான்.கடற்கரையில் அவனுடைய தாயும் தந்தையும் ஓரிடத்தில் அமர்ந்து பேசத் தொடங்கியதும், அவன் அவர்களை விட்டுச் சற்றுத் தள்ளிச்சென்று எதையோ கட்டத் தொடங்கினான்.

சிறுவனின் பெற்றோர் ஒருசில மணித்துளிகள் பேசி முடித்துவிட்டு, சற்றுத் தொலைவில் எதையோ மும்முரமாகக் கட்டிக்கொண்டிருந்த தங்களுடைய மகனிடம், “தம்பி! எதையோ தீவிரமாகக் கட்டிக்கொண்டிருப்பது போல் தெரிகின்றது...! அப்படி என்ன கட்டிக்கொண்டிருக்கின்றாய்...?” என்றார்கள். “நான் கோயில் கட்டிக்கொண்டிருக்கின்றேன்... அதனால் அமைதி காக்கவும்” என்றான் மகன். உடனே அவனுடைய தந்தை அவனிடம், “கோயில் கட்டுவது சரி... எதற்காக நாங்கள் அமைதி காக்கவேண்டும்...?” என்றார். அதற்குச் சிறுவன் அவர்களிடம், “கோயிலில் பேசிக்கொண்டா இருப்பீர்கள்; அமைதியாக அல்லவா இருப்பீர்கள். அதனால்தான் உங்களிடம் அமைதி காக்கவும் என்று சொன்னேன்” என்றான்.

சிறுவன் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன் பேசுவதைப் போன்று பேசுவதைக் கேட்டு, அவனுடைய தந்தை அவனைக் கட்டி அணைத்துக்கொண்டார்.

கோயில் சாதாரண இடம் கிடையாது... ஆண்டவன் உறையும் இல்லம். அப்படிப்பட்ட இல்லத்தில் அல்லது இடத்தில் அமைதியாகவேண்டும் என்ற புரிதல் கடற்கரை மணலில் கோயிலைக் கட்டிய அந்தச் சிறுவனுக்கு இருந்தது நம்முடைய கவனத்திற்கு உரியவனாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் தாவீது அரசர் ஆண்டவருக்காகக் கோயிலைக் கட்ட விரும்புகின்றார். இதைத் தொடர்ந்து என்ன நடந்து என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*ஆண்டவருக்குக் கோயிலைக் கட்ட நினைத்த தாவீது*

ஆண்டவராகிய கடவுள் தாவீது அரசருக்கு சுற்றிலும் இருந்த எதிரிகளின் தொல்லையிலிருந்து ஓய்வு அளிக்கின்றார். இதற்குப் பின் அவர் மற்ற அரசர்களைப் போன்று கேளிக்கையில் ஈடுபடவோ அல்லது தன்னுடைய பெயர் விளங்குமாறு மாட மாளிகைகளை அல்லது கோட்டைக் கொத்தளங்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக, தான் கேதுரு மரங்களால் ஆன அரண்மனையில் இருக்கும்பொழுது ஆண்டவரின் பேழை கூடாரத்தில் இருக்கின்றதே. எனவே ஆண்டவருக்கென ஒரு கோயிலைக் கட்டலாம் என்று நினைக்கின்றார். தாவீது அரசர் இவ்வாறு எண்ணியது அவர் எப்பொழுது ஆண்டவரை நினைத்துக் கொண்டிருந்தார் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது திருப்பாடல் 132: 1-5 வரையுள்ள பகுதியில் வருகின்ற இறைவார்த்தை இதற்குச் சான்று பகிர்கின்றது.

இது இவ்வாறு இருக்க, ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் நாத்தானுக்குக் கனவில் தோன்றி, தன்னுடைய விருப்பத்தை தாவீது அரசரிடம் எடுத்துச் சொல்லுமாறு சொல்கின்றார். தன்னுடைய விருப்பமாக ஆண்டவராகிய கடவுள் நாத்தானிடம் சொன்னது என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

*ஆண்டவர்தாமே வீட்டைக் கட்டப் போவதாகச் சொல்லுதல்*

தாவீது அரசர் ஆண்டவருக்குக் கோயில் கட்ட நினைத்தபொழுது, ஆண்டவராகிய கடவுள் நாத்தான் இறைவாக்கினர் வழியாக, தாவீது தனக்காகக் கோயிலை கட்டவேண்டாம் என்றும் தாமே அவருடைய வீட்டைக் கட்டப்போவதாகக் கூறுகின்றார். கடவுள் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த தாவீது அரசரை ஏன் கோயிலைக் கட்டவேண்டாம் என்று சொன்னார் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இதற்கான பதிலை நாம் 1 குறிப்பேடு 22:8 ல் இவ்வாறு வாசிக்கின்றோம்: “நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய்; பெரும் போர்களை நடத்தினாய்; எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால் என் பெயருக்கு நீ கோயில் கட்டவேண்டாம்.”

ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் நாத்தான் வழியாக தாவீதிடம் இவ்வாறு சொன்னது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கும்; ஆனாலும் அதை தாவீது இறைவனின் திருவுளமென ஏற்றுக்கொள்கின்றார். இன்னும் சொல்லப்போனால், கடவுள் தாவீது அரசரிடம் கோயில் அல்லது இல்லம் என்று இன்னொன்றைச் சொல்கின்றார். அது என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

*தாவீதின் அரியணை என்றுமே நிலைத்திருக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்படல்*

கடவுள் தாவீது அரசரிடம், தாமே வீட்டை அல்லது கோயிலைக் கட்டப்போவதாகச் சொல்வது எருசலேம் திருக்கோயில் அல்ல, அதை விட உயர்ந்தது. அது தாவீதின் வழி வந்த இயேசுவால் இப்புவியில் நிறுவப்பட்ட என்றுமுள்ள அரசு. அதைத்தான் ஆண்டவர் நாத்தான் இறைவாக்கினர் வழியாக தாவீது அரசரிடம் சொல்கின்றார்.

சில சமயங்களில் தாவீது ஆண்டவரிடம் கேட்டது அவருக்கு நடக்காதது போன்று நமக்கும் நடக்காமல் இருக்கலாம். ஆனால், நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, அவருடைய திருவுளத்தின் படி நடந்தோமெனில் கடவுள் அதைவிடவும் மேலான ஒன்றை நமக்குச் செய்து தருவார். ஆகையால், நாம் எப்பொழுதும் இறைவனின் திருவுளத்தின் நடக்கக் கற்றுக்கொள்வோம்.

*சிந்தனை*

‘நான் ஆண்டவரின் அடிமை; உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்’ (லூக் 1: 38) என்று மரியா இறைத்திருவுளத்திற்குப் பணிந்து நடப்பார். நாமும் மரியாவைப் போன்று தாவீதைப் போன்று இறைத்திருவுளத்திற்குப் பணிந்து நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.