Showing posts with label life history. Show all posts
Showing posts with label life history. Show all posts

Friday 2 August 2019

K.KAMARAJ life history

19 Main points about K.Kamaraj
    K Kamaraj 1976 stamp of India.jpg
  1. Kamraj was born on July 15, 1903, in a family of traders at Virudunagar. district of state Tamil Nadu
  2. His real name was Kamakshi Kumaraswamy Nadar but was affectionately shortened to Raja by his mother, Sivakami Ammal.
  3. His father, Kumaraswamy Nader, was a coconut merchant.
  4. Kamaraj was enrolled at the local elementary school, the Nayanar Vidyalaya but was later shifted to the high school Kshatriya Vidyalaya.
  5. His father died within a year of Kamaraj’s enrollment in school. 
  6. Kamaraj’s mother sold all jewelery except her earrings and deposited the money with a local merchant and cared for the entire family on the monthly interest that the money earned.
  7. Kamaraj was not a good student in school and dropped out when he was in the sixth grade. 
  8. When he entered mainstream public life he felt handicapped and realized the importance of a good education.
  9. He educated himself during his periods of imprisonment and even learned English from his co-worker. 
  10. Kamaraj joined as an apprentice in his maternal uncle Karuppiah’s cloth shop after dropping out of school. 
  11. He was the “3rd chief minister” of the state Madras.
  12.  He strived hard to improve the status of needy and downtrodden people.
  13.  In 1976, he was honoured with “Bharat Ratna”, India's highest civilian award after his death.
  14.  He was the initiator for providing free education to backward class community children.
  15. He introduced a free mid-day meal scheme in schools.
  16. He was an active member of Congress party.  
  17. At age of 34, he won the election for the “first time” winning a seat in Sattur assembly in 1937.  
  18. He was imprisoned for 2 years for his active participation in “Salt Satyagraha” movement.
  19. Mahatma Gandhi and Jawaharlal Nehru were his sources of inspiration.


Image result for life history of kamarajarKumaraswamy Kamaraj was a powerful Indian politician, activist and statesman who played an important role in pre and post-Independent politics. Born in a moderate middle-class family, Kamaraj’s tryst with politics began early. His increasing interest in the country’s political system finally culminated when he became a full time worker of the Congress during India’s struggle for independence. Kamaraj’s humble beginning did not deter him as he persistently worked to contribute actively to the Congress’ struggle to overthrow the foreign rule. From being merely a campaigner, he rose to become a legislator in the Madras Presidency. The high point in his career came when he became the Chief Minister of Madras. Under his administration, Madras propelled forward and prospered. The education rate which was merely 7% rose to the magnanimous 37% with opening of new schools and education reforms. Irrigation and industry flourished making Madras one of the leaders of industrialization. Interestingly, Kamaraj continued to contribute even after his premiership, as President of the Indian National Congress. For his immense contribution, he was decorated with country’s highest civilian award, Bharat Ratna, posthumously.

Childhood & Early Life

Kumaraswami Kamaraj was born on July 15, 1903 at Virudhunagar, Tamil Nadu to Kumaraswamy and Sivakamiv Ammaiar. His father was a merchant. He had a younger sister Nagammal.
In 1907, Kamaraj enrolled at a traditional school. The following year, he enrolled at the Yenadhi Narayana Vidhya Salai but after a year of studies he shifted to Virudupatti High School.
Tragedy struck young Kamaraj when he was merely six. His father died and his mother was forced to support her family. To help his mother, Kamaraj dropped out of school in 1914 to support his family.

Image result for life history of kamarajarCareer
Kamaraj started his career doing odd jobs. He worked at his uncle’s provision shop. It was during this time that Kamaraj developed interest in politics. He was an avid newspaper reader and kept himself updated with the current events. He soon became involved with the political processions and public meetings and acquainted himself with the Indian Home Rule Movement.
The 1919 Jallianwala Bagh Massacre was a turning point in Kamaraj’s life. The killing of innocent people instigated a rage of fury and vehemence in Kamaraj who decided to work actively in India’s struggle for freedom and bring an end to British Raj.
Kamaraj’s growing interest in politics was not supported by his family who sent him to Thiruvananthapuram where his second uncle stayed. However, Kamaraj’s passion for politics could not be curtailed in Thiruvananthapuram as well. He participated in the Vaikom Satyagraha led by George Joseph of the Congress, against the atrocities of the higher caste Hindus on the Harijans. Kamaraj met Mahatma Gandhi, India’s face of freedom struggle, at the Madurai’s Congress meet. He was inspired by the latter’s simplicity and non-violence movement.
Image result for life history of kamarajarHis political activities in Thiruvananthapuram annoyed his family to the point that he was called back. Though the elders in the family persuaded Kamaraj to stop getting involved in country’s politics, it was without much result. They even tried to marry him off but Kamaraj resolutely disagreed.
In 1920, he joined Congress as a full time worker. He actively worked as political campaigner, organizing public meetings and carrying the Congress propaganda.
Early in his career as a political activist, he participated in many events as a part of the Non-Violent Movement including the Nagpur Flag Satyagraha, Sword Satyagraha, Neil Statue Satyagraha and so on. After joining the Congress, he participated in almost all agitations and demonstrations against the British rule.
In 1930, Kamaraj participated in the Rajagopalachari-led Salt Satyagraha Movement in Vedaranyam. He was sentenced for two years. However, his term of imprisonment was cut short following the Gandhi-Irwin Pact that led to his release in 1931.

In 1932, despite ban on public meetings and procession in Madras, he led processions and demonstrations which subsequently led to his arrest and one year imprisonment. In 1933, Kamaraj was yet again charged with involvement in the Virudhunagar bomb case. However, he was acquitted after not being found guilty.
Image result for life history of kamarajar
In 1936, Kamaraj’s guru Satyamurti was elected President of the Provincial Congress. The latter appointed Kamaraj as the General Secretary. Four years later, the duo swapped positions strengthening the party base through their leadership skills.
In 1942, he attended the All India Congress Meet in Bombay where Gandhi’s Quit India Movement bore its roots. He spread the propaganda material to Trichy, Tanjore, Ranipet and Madurai and for the same was arrested and imprisoned for three years. During his term in jail, he read and self-educated himself
After India’s independence in 1947 he was elected a member of the Working Committee of the Congress. He was also a member of the Constituent Assembly that drafted the constitution. In 1951 he contested and won a seat in the elections to the first Lok Sabha.
In 1954, he was elected as the Chief Minister of the Madras State. He reluctantly took up the post and nominated his co-contestants C. Subramaniam and M. Bhakthavatsalam in his cabinet. Kamaraj’s motto as Chief Minister was to work for the welfare of the people.
Image result for life history of kamarajarUnder Kamaraj, Madras made immense progress in education and trade. New schools were opened and education was made free and compulsory for all up to 11th Standard. Every village had a primary school and every Panchayat a high school. He even introduced the concept of Mid-Day Meal Scheme for lakhs of poor and deprived children. To eradicate caste, creed and class differences, he introduced school uniform. Such was the progress under his administration that the education rate augmented from merely 7% to 37%.
Education was the primary focus of Kamaraj’s Government but he did not overlook other sectors. In fact, he came up with major irrigation schemes that led to the building of dams and canals. Farmers were given facilities and subsidized loans. He also administered the setting up of major industries under his governance such as Neyveli Lignite Corporation, BHEL, Manali Oil Refinery, Hindustan raw photo film factory, surgical instruments factory, a railway coach factory and so on. Industries such as paper, sugar, chemicals and cement were also established during this period.

Image result for life history of kamarajarKamaraj’s excellence as a leader and administrator was evident from the fact that he remained the Chief Minister of the State for three consecutive terms, being re-elected in 1957 and later in 1962. Under his administration, Nehru claimed Madras to be the ‘best administered state in India’
In 1963, he resigned from his post of the Chief Minister to serve a greater purpose. Congress which was losing its vigour and shine needed a revamp of sorts. He came up with a plan which was called the ‘Kamaraj Plan’. He proposed that all senior Congress leaders should resign from their post and devote their energy towards revitalization of the Congress. It was mainly done to refrain the leaders from the temptation of power and instead re-commit them to party objectives and motto. The Plan was a major hit as a number of ministers like Lal Bahadur Shastri, Jagjivan Ram, Morarji Desai and S.K. Patil resigned from their posts.
In 1964, he was elected the President of the All India Congress. During his term as the President, he successfully steered the nation through the stormy years post Nehru’s death. He refused to take up Prime Ministerial office twice, giving it to Lal Bahadur Shastri and Indira Gandhi in 1964 and 1966 respectively.
During the 1969 split of Congress, Kamaraj became the leader of the Indian National Congress (Organisation) in Tamil Nadu. However, in 1971 the party failed miserably but he retained his position until his death in 1975.

Major Works
Image result for life history of kamarajarThough Kamaraj’s role in politics was significant all through, starting off as a political activist and later as the prominent leader of the Indian Independence Movement, his most important contribution came later in his career as the Chief Minister of Madras State. Under his governance, Madras became one of the best administered states of the country. He emphasized on educational reforms, introducing free compulsory education. He established new schools and introduced the concept of midday meal scheme under which lakhs of poor and deprived children were provided food. He also tried to get rid of caste and creed differences. Irrigation and industry also prospered and grew under his three-consecutive term governance.

Personal Life & Legacy
Image result for life history of kamarajarKamaraj breathed his last on October 2, 1975 in his sleep. He was 72 years of age.
Posthumously, Kamaraj was bestowed with the nation’s highest civilian honour, the Bharat Ratna in 1976.
He was proclaimed with the title of ‘Kalvi Thanthai’ or Father of Education in Tamil Nadu.
Chennai airport named its domestic terminal ‘Kamaraj Terminal’.
Several roads and streets across the country are named to honor Kamaraj’s contribution in Indian politics and governance such as Chennai's beach road which bears the name ‘Kamarajar Salai’. Bangalore's North Parade Road and Parliament road in New Delhi were renamed ‘K. Kamaraj Road’.
A university in Madurai was inaugurated under his name, Madurai Kamaraj University, honouring his educational policies as the CM of Madras.

Wednesday 31 July 2019

SS JOACHIM & ANNE, PARENTS OF THE B. V. M. (MEMORIAL)

*FIRST READING*
A reading from the Book of Exodus (Exodus 20: 1-17)
The law was given through Moses (John 1:17)

In those days: God spoke all these words, saying, “I am the Lord your God, who brought you out of the land of Egypt, out of the house of bondage. You shall have no other gods before me.  You shall not make for yourself a graven image, or any likeness of anything that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth; you shall not bow down to them or serve them; for I the Lord your God am a jealous God, visiting the iniquity of the fathers upon the children to the third and the fourth generation of those who hate me, but showing mercy to thousands of those who love me and keep my commandments. “You shall not take the name of the Lord your God in vain; for the Lord will not hold him guiltless who takes his name in vain. “Remember the sabbath day, to keep it holy. Six days you shall labour, and do all your work; but the seventh day is a sabbath to the Lord your God; in it you shall not do any work, you, or your son, or your daughter, your manservant, or your maidservant, or your cattle, or the sojourner who is within your gates; for in six days the Lord made heaven and earth, the sea, and all that is in them, and rested the seventh day; therefore the Lord blessed the sabbath day and hallowed it. “Honour your father and your mother, that your days may be long in the land which the Lord your God gives you. “You shall not kill.” “You shall not commit adultery.” “You shall not steal.” “You shall not bear false witness against your neighbour.” “You shall not covet your neighbour’s house; you shall not covet your neighbour’s wife, or his manservant, or his maidservant, or his ox, or his donkey, or anything that is your neighbour
_______________________________________
*RESPONSORIAL PSALM*
Psalm 19:8.9.10.11 (R. John 6:68c)
*R. Lord, you have the words of eternal life.*

The law of the Lord is perfect;
It revives the soul.
The decrees of the Lord are steadfast;
they give wisdom to the simple. *R.*

The precepts of the Lord are right;
they gladden the heart.
The command of the Lord is clear;
it gives light to the eyes. *R.*

The fear of the Lord is pure,
abiding forever.
The judgements of the Lord are true;
they are, all of them, just. *R.*

They are more to be desired than gold,
than quantities of gold.
And sweeter are they than honey,
Than honey flowing from the comb. *R.*
______________________________________
*ALLELUIA* 
Luke 8:15
Alleluia. Blessed are those who, hearing the word, hold it fast in an honest and good heart, and bring forth fruit with patience. Alleluia.
______________________________________
*GOSPEL*
A reading from the holy Gospel according to Matthew (Matthew 13: 18-23)
He who hears the word and understands it, bears fruit

At that time: Jesus said to his disciples, “Hear then the parable of the sower. When any one hears the word of the kingdom and does not understand it, the Evil One comes and snatches away what is sown in his heart; this is what was sown along the path. As for what was sown on rocky ground, this is he who hears the word and immediately receives it with joy; yet he has no foot in himself, but endures for a while, and when tribulation or persecution arises on account of the word, immediately he falls away. As for what was sown among thorns, this is he who hears the word, but the cares of the world and the delight in riches choke the word, and it proves unfruitful. As for what was sown on good soil, this is he who hears the word and understands it; he indeed bears fruit, and yields, in one case a hundred fold, in another sixty, and in another 
*Today’s Reflection*
Worldly cares and selfish ambitions do not allow the word of God to thrive in us because the word demands undivided attention and commitment. In its application. The word needs a certain constancy, diligence and care. We cannot serve both God and mammon. It would seem as though life is a continuous battle between the light and darkness in us. The commandments of the lord are clear on what our choice must be. The precepts of the Lord gladden the heart; therefore, our choice must be no other than God. When God is sought first, everything else is given. When the world is sought first, everything else is lost.


உன் தந்தையையும் தாயையும் மதித்து நட

*விடுதலைப் பயணம் 20: 1-17*

*“உன் தந்தையையும் தாயையும் மதித்து நட”*

*நிகழ்வு*

சில ஆண்டுகட்கு முன்னம், சவூதி அரேபியாத் தலைநகர் ரியாத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு, வயதான தந்தையை யார் வைத்துகொள்வது என்பது பற்றியது. 

விசாரணை தொடங்கியதும், அந்த வயதான தந்தையின் மூத்த மகன் பேசத் தொடங்கினார்: “எனக்கு இப்பொழுது என்பது வயது ஆகின்றது... கடந்த நாற்பது ஆண்டுகளாக நான் என்னுடைய தந்தையைப் பராமரித்து வருகிறேன். வீட்டில் மூத்தவன் என்பதாலும் இதுவரைக்கும் நான்தான் என் தந்தையைப் பராமரித்து வந்தேன் என்பதாலும், இனிமேலும் நானே என்னுடைய தந்தையைப் பராமரிக்க எனக்கு அனுமதியளிக்குமாறு நீதிபதி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.”

மூத்தமகன் தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொன்ன பின்பு, இளையமகன் தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கத் தொடங்கினார்: “என்னுடைய தந்தைக்கு என் அண்ணனும் நானும் இரண்டு பிள்ளைகள். இருவர்க்கும் பத்து வயது வித்தியாசம். இதில் என்னுடைய அண்ணன் கடந்த நாற்பது ஆண்டுகளாக என் தந்தையைப் பராமரித்து வருகின்றார். இப்பொழுது அவர்க்கு வயதாகிவிட்டது என்பதாலும், இத்தனை ஆண்டுகள் அவர் என் தந்தையைப் பராமரித்து வந்திருக்கின்றார் என்பதாலும் இனிமேல் என் தந்தையை நான் பராமரிப்பதற்கு எனக்கு அனுமதி தாருங்கள்.”

இருதரப்புவாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஒருகணம் ஆடிப்போய்விட்டார். “இத்தனை ஆண்டுகள் நான்தான் தந்தையைப் பராமரித்திருக்கிறேன். அதனால் இனிமேலும் நான் அந்தக் கடமையைத் தொடர்ந்து செய்வேன்’ என்று சொல்லும் மூத்த மகனோடு தந்தையை அனுப்பி வைப்பதா? இல்லை, ‘மூத்தவரால் தந்தையை இனிமேலும் பராமரிக்க முடியாது. அதனால் தந்தையைப் பராமரிப்பதற்கு நான்தான் சரியான ஆள்’ என்று சொல்லும் இளையமகனோடு தந்தையை அனுப்பி வைப்பதா?” என்று நீதிபதி ஒருநிமிடம் குழம்பித் தவித்தார். பின்னர் ஒரு தீர்க்கமான முடிவிற்குப் பின் தீர்ப்பினை இவ்வாறு வெளியிட்டார்:

“மூத்த மகன் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தந்தையைப் பராமரித்து வந்திருக்கின்றார் என்பதாலும் அவருடைய மூப்பின் காரணமாக இனிமேலும் அவரால் தந்தையைப் பராமரிக்க முடியாது என்பதாலும் தந்தையைப் பராமரிக்கின்ற பொறுப்பினை இளைய மகனிடம் இந்த நீதிமன்றம் ஒப்படைக்கின்றது.”

இத்தீர்ப்பைக் கேட்டதும் மூத்த மகன் நீதிபதியை நோக்கி, “நான் என்னுடைய தந்தையைப் பராமரிக்க முடியாமல் செய்ததன்மூலம் என்னை விண்ணக வாசலிலிருந்து வெளியே தள்ளிவிட்டீர்களே!” என்று கண்ணீர்விட்டு அழுதார். அவரோடு சேர்ந்து அந்த நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேரும் கண்ணீர்விட்டு அழுதார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு, நீதிபதி, “என்னுடைய பணிவாழ்க்கையில் இப்படியொரு வழக்கை நான் சந்தித்ததே இல்லை” என்றார். 

வயதான பெற்றோர்களை இங்கும் அங்கும் ஏன், முதியோர் இல்லத்திற்கும் அனுப்பி வைக்கும் பிள்ளைகட்கு மத்தியில், தங்களுடைய தந்தையைப் பராமரிப்பதற்குப் போட்டிபோட்ட அந்த இரண்டு வயதான அண்ணன் தம்பிகளின் செயல்பாடு நம்மை ஆழமாகச் சிந்திக்க அழைக்கின்றது. இன்றைய முதல் வாசகம், தாய் தந்தையை மதித்து நட என்று சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*பத்துக்கட்டளைகளுள் ஒன்றான ‘தாய் தந்தையை மதித்து நட’ என்ற கட்டளை* 

ஆண்டவராகிய கடவுள், மோசேயிடம் பத்துக்கட்டளைத் தருகின்றார். இந்தப் பத்துக் கட்டளைகளுள் ஒன்றாக இருப்பதுதான், ‘தாய் தந்தையை மதித்து நட’ என்ற கட்டளை. பழைய ஏற்பாடும் சரி, புதிய ஏற்பாடும் சரி தாய் தந்தையை மதித்து நடக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை பல இடங்களில் மிக அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்கின்றது. அதிலும் குறிப்பாக தாய் தந்தையை அடிக்கின்றவரும் சபிக்கின்றவரும் கொல்லப்படவேண்டும் என்றும் (விப 21: 15,17) பெற்றோர்க்குக் கீழ்ப்படியுங்கள் (எபே 6: 1) என்றும் சொல்கின்றது. இப்படி இருக்கையில் நாம் நம்முடைய தாய் தந்தையை மதித்தும் அவர்கட்குக் கீழ்ப்படிந்தும் நடக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டியதாக இருக்கின்றது.
*தந்தையை (தாயை) மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்*

தாய் தந்தையை மதித்து நடப்பது, அவர்களுடைய முதுமையில் அவர்களைப் பேணிக்காப்பது பிள்ளைகளின் கடமை என்று சொல்லும் இறைவார்த்தை, அப்படி அவர்களை மதித்து நடப்பதால் என்னென்ன ஆசி நமக்குக் கிடைக்கின்றது என்று அழகாக எடுத்துச் சொல்கின்றது.

சீராக்கின் ஞான நூல் தந்தையரை மதிப்போர் பாவங்கட்குக் கழுவாய் தேடிக்கொள்கிறார்கள் என்றும் அன்னையை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போர்க்கு ஒப்போவர். இன்னும் பல ஆசிகளைப் பெறுவர் (சீரா 3: 3-4) என்றும் எடுத்துச் சொல்கின்றது. ஆகையால், நாம் இறைவனிடமிருந்து பல்வேறு விதமான ஆசிகளைப் பெறுவதற்கு நம் தாய் தந்தையை மதித்து நடப்பதும் அவர்களைப் பேணிப் பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து வாழ்வது நல்லது. 

*சிந்தனை*

‘தந்தைக்குக் காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்கட்குக் கழுவாயாக இருக்கும்’ (சீரா 3: 14) என்கின்றது இறைவார்த்தை. ஆகையால், நாம் நம்முடைய பெற்றோர்களை மதித்து நடந்து, அவர்களுடைய முதுமையில் அவர்களைப் பேணிப் பாதுகாப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.     


புனிதர்கள் சுவக்கீம், அன்னா தூய மரியாவின் பெற்றோர் நினைவு l

*நிகழ்வு* 

இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எழுதப்பட்ட, திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத தூய யாக்கோபு நற்செய்தியில் சொல்லப்படும் செய்தி.

மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம், அன்னமாளுக்கு திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆனபின்பும் குழந்தைப் பேறு இல்லை. இருந்தாலும் அவர்கள் இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் மரியாவின் தந்தையாகிய ஜோக்கிம் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று, நாற்பது நாட்கள் நோன்பிருந்து இறைவனிடம் ஜெபித்து வந்தார். அப்போது வானதூதர் அவருக்குத் தோன்றி, “ஜோக்கிம்! உன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டுவிட்டது, உன் மனைவி ஒரு மகளைப் பெற்றெடுப்பார்” என்று சொல்லிவிட்டு மறந்து போனார். அன்னமாளுக்கும் வானதூதர் தோன்றி அதே செய்தியைச் சொன்னார். வானதூதர் சொன்னது போன்று பத்தாம் மாதத்தில் அன்னம்மாள் ஒரு மகவைப் பெற்றெடுத்தார். அவர்தான் மரியா.

*வாழ்க்கை வரலாறு*

மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம் அன்னம்மாளைக் குறித்து விவிலியத்தில் எங்கும் காணக்கிடைக்கவில்லை, மேலே சொல்லப்பட்ட யாக்கோபு நற்செய்தியில்தான் அவர்களைப் பற்றிய செய்தி காணக்கிடக்கிறது. ஜோக்கிம் என்றால் ‘கடவுள் தயார் செய்கிறார்’ எனப் பொருள், அன்னம்மாள் என்றால் ‘அருள்’ எனப் பொருள்படுகின்றது. அந்த நற்செய்தியின் படி, ஜோக்கிம் அன்னம்மாள் தம்பதியர் கடவுளுக்கு அஞ்சி நடக்கின்றவர்களாக, ஜெபிக்கின்ற தம்பதியராக வாழ்ந்து வந்தார். எந்தளவுக்கு என்றால், இருபது ஆண்டுகளுக்கு மேலாகவும் அவர்களுக்கு குழந்தை இல்லாது இருந்தாலும், அவர்கள் இறைவனிடத்தில் ஜெபிப்பதற்கு மறக்கவில்லை, அனுதினமும் அவர்கள் இறைவனிடத்தில் ஜெபித்து வந்தார்கள். அந்த ஜெபத்தினாலேயே மரியாவைப் பெற்றெடுத்தார்கள்.

அடுத்ததாக ஜோக்கிம் அன்னம்மாள் இருவரும் தாராள உள்ளத்தினராய் வாழ்ந்து வந்தார்கள். எப்படியென்றால் தங்களுடைய வருமானத்தை மூன்று பக்தியாகப் பிரித்து அதில் ஒரு பகுதியை எருசலேம் திருக்கோவிலுக்கும், இன்னொரு பகுதியை ஏழைகளுக்கு உதவி செய்வதற்கும், மூன்றாவது பகுதியை தங்களுக்கென பயன்படுத்தியும் வந்தார்கள். அவர்கள் ஒருபோதும் தாங்கள் பெற்ற செல்வம் தங்களுக்கானது மட்டும் அல்ல, அது பிறருக்கானது என்று வாழ்ந்ததனால்தான்   இறைவனுடைய கடைக்கண் பார்வை அவர்கள்மீது பட்டது. ‘நம்மோடு இருப்பவர்களை நாம் பராமரித்துக்கொண்டால், இறைவன் நம்மைப் பராமரிப்பார் என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.

மூன்றாவதாக, ஜோக்கிமும் அன்னம்மாளும் நன்றியுள்ள தம்பதியராக வாழ்ந்து வந்தனர். இறைவன் அவர்களுக்கு அவருடைய முதிர்ந்த வயதில் குழந்தைப் பேற்றைத் தந்தார். அதற்காக அவர்கள் தங்களுடைய வாழ்நாள் எல்லாம் நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள். கடவுள் தந்த குழந்தையை கடவுளுக்கே அர்ப்பணித்து, தங்களுடைய நன்றியுணர்வை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இவ்வாறு அவர்கள் கடவுளுக்கு உகந்த தம்பதியராய் வாழ்ந்து, சிறந்த பெற்றோருக்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார்கள். 

ஜோக்கிம் அன்னம்மாள் விழா தொடக்க காலங்களிலிருந்தே இருந்து வந்திருக்கிறது. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் ஜஸ்டினியன் என்பவர் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற இடத்தில் இந்த புனிதர்களுக்கு முதல்முறையாக ஆலயம் ஒன்றைக் கட்டினார். அதன்பிறகு புனித எலேனா என்பவர் ஜோக்கிம் அன்னம்மாள் வாழ்ந்த இல்லத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டினார். ஆனால் அது முகமதியர்களால் கைப்பற்றப்பட்டு, பள்ளிக்கூடமாக மாறத்தொடங்கியது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆறாம் சிக்ஸ்துஸ் என்ற திருத்தந்தை என்பவர் ‘மரியா ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைத் (நவம்பர் 21) தொடங்கி வைத்து, ஜோக்கிம் அன்னம்மாள் இருவரும் தங்களுடைய குழந்தை மரியாவை  கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து, அவரை இறைப்பணிக்காக அர்ப்பணித்தனர் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார். 

திருச்சபையின் ஒருசில மரபுகள் மற்றும் ஓவியங்கள், ஜோக்கிம் அன்னம்மாள் இருவரும் இயேசுவின் பிறப்புக்கு முன்பே இறந்துவிட்டார்கள் எனச் சொல்லும். எப்படியிருந்தாலும் அவர்கள் உலக மீட்பராம் ஆண்டவரைப் பெற்றெடுத்த அன்னை மரியாவைப் பெற்றெடுத்தவர்கள், வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் ஆண்டவரின் தாயைப் பெற்றெடுத்த தாய், தந்தையர் அவர்கள். அதற்காக நாம் ஆண்டவரைப் போற்றிப் புகழவேண்டும்.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம் அன்னம்மாளின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*1. சிறந்த பெற்றோர்களுக்கு எடுத்துக்காட்டு*

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்யிலாளர் தேபெஸ் நகரைச் சேர்ந்த கிரேட்ஸ் (Crates of Thebes) என்பவர். இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார். காரணம் இவருடைய போதனை மக்களின் உள்ளத்தைத் தைப்பது போன்று இருக்கும். இவருடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் குறிப்பாக பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நீதிநெறிகளை, ஒழுக்கநெறிகளைப் போதிக்காமல் அவர்களுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது, எப்பி பொருள் ஈட்டுவது என்றே கற்பித்து வந்தார்கள். இதைப் பார்த்து சினம்கொண்ட கிரேட்ஸ் என்ற அந்த மெய்யியலாளர் ஒருநாள் ஊரில் இருந்த மலைமீது ஏறி, “பெற்றோர்களே! நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நீதி நெறிகளைப் போதிக்காமல், அவர்களுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்று போதிக்கிறீர்கள், உங்கள் பிள்ளைகளைவிட அவர்கள் சம்பாதிக்கும் பணம்தான் பெரிது என்றா நினைக்கிறீர்கள்?” என்று அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்தார். 

அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் கூட பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை நீதிநெறியில், ஒழுக்க நெறியில் கடவுளுக்கு உகந்த வழியில் வளர்க்காதது மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கின்றது. இவர்கள் அனைவரும் ‘பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்கள்’ என்பதை மறந்து போனார்கள். ஆனால் இவற்றிற்கெல்லாம் முற்றிலும் மாறாக, முன்மாதிரியான பெற்றோராய் இருந்து, தங்களுடைய மகளை இறைவழியில் வழிநடத்தியவர்கள் ஜோக்கிமும் அன்னம்மாளும் என்று சொன்னால் அது மிகையாகாது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்” (மத் 7:17) ஆம், ஜோக்கிமும் அன்னமாவும் எப்படிப்பட்டவர்கள் என்பவர்கள் என்பதை மரியாவைக் கொண்டே அறியலாம். மரியா தூயவராக, மாசற்றவராக, கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவராக, எளியவருக்கு இரங்குபவராக, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்பவராக விளங்கினார் என்றால் இத்தகைய பேறும் புகழும் மரியாவின் பெற்றோரான ஜோக்கிம் மற்றும் அன்னமாளுக்குத்தான் போய் சேரும். அவர்கள்தான் தங்களுடைய குழந்தைக்கு முன்மாதிரியாக இருந்து, அவரை இறையன்பிலும், பிறரன்பிலும் வளர்த்தெடுத்தார்கள். ஆகவே, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் இருந்து, அவர்களை கடவுளுக்கு உகந்த பிள்ளையாக வளர்த்தெடுப்பது அவர்களுடைய கடமையாகும். 

மாவீரன் நெப்போலியன் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டான். “நம்முடைய பிரான்சு நாட்டில் நல்ல குடிமகன்கள் உருவாக வேண்டுமென்றால் நல்ல தாய்மார்கள் உருவாகவேண்டும்”. நல்ல தாய்மார்கள் மட்டுமல்ல, தந்தையர்கள் உருவாகினால்தான் நல்ல குடிமக்கள் உருவாவார்கள். ஆகவே, மரியாவின் பெற்றோராகிய ஜோக்கிம் அன்னம்மாளின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நாம் முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துகாட்டுவோம், அவர்களை இறைவழியில் நடத்துவோம், அதன்வழியாக இறையருள் 


தூய ஷார்பெல் மஹ்லூப் வாழ்க்கை வரலாறு

*தூய ஷார்பெல் மஹ்லூப் 

_“அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்._

*வாழ்க்கை வரலாறு*

ஷார்பெல், லெபனான் நாட்டில் உள்ள பே-குவா-கப்ரா என்னும் இடத்தில்  1828 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய  தந்தை இறந்து போனார். எனவே இவர் இவரது மாமாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

ஷார்பெல் சிறுவயது முதலே பக்தியில் சிறந்துவிளங்கி வந்தார். இவரிடமிருந்து விளங்கிய பக்தியைப் பார்த்துவிட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். இவர் வளர்ந்து பெரியவராகிய போது மேபுங் என்னும் இடத்தில் இருந்த துறவற மடத்தில் சேர்ந்து, கல்விகற்று 1859 ஆம் ஆண்டு, அதாவது தன்னுடைய இருபத்தியோறாவது வயதிலே குருவாக மாறினார். 

குருவாக மாறிய பின்பு, ஷார்பெல் தன்னுடைய குருத்துவ  வாழ்வின் பெரும்பாலான நாட்களை தனிமையிலும் ஜெபத்திலும் தவத்திலும் செலவழித்து வந்தார்; கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இவருடைய ஜெப வாழ்வு, துறவுமடத்தில் இருந்த பலருக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது. சிலகாலம் மேபுங் துறவுமடத்தில் இருந்த ஷார்பெல், அதன்பிறகு வேறொரு இடத்திற்குச் சென்று, அங்கு ஒரு துறவுமடம் அமைத்து, அதில் ஜெப தவ வாழ்வில் ஈடுபட்டு வந்தார்.

புதிய இடத்தில், ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்துவந்த மிகப்பெரிய துறவியான தூய மரோன் என்பவரின் முன்மாதிரிகையைப் பின்பற்றி முன்பைவிட ஜெபத்திற்கும் தவத்திற்கும் ஒறுத்தல் முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தார். இது மட்டுமல்லாமல், கட்டாந்தரையில்தான் படுத்து வந்தார், ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்டு வந்தார். இப்படி அவர் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளைச் செய்து வந்ததால், அவருடைய உடல்நலம் குன்றியது. இதனால் அவர் படுத்த படுக்கையாகி 1898 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1977 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய ஷார்பெலின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். 

*1. ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோம்*

தூய ஷார்பெலின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுத்தருகின்ற மேலான சிந்தனை, நாம் அனைவரும் ஜெபிக்கக்கூடிய மக்களாக இருக்கவேண்டும் என்பதுதான். அவர் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டு ஜெபம் செய்து வந்தார் என்பதை அவருடைய வாழ்க்கைக் குறிப்பிலிருந்து நாம் அறிந்துகொள்கின்றோம். நாம் அவர் அளவுக்கு ஜெபிக்கவில்லை என்றாலும் ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வது தேவையான ஒன்றான இருக்கின்றது.

இன்றைய சூழலில் ஜெபிப்பதனால் ஏதாவது பலன், நன்மை கிடைக்குமா? என்று ஒருசிலர் கேட்கலாம். ஜெபிப்பதனால் எத்தகைய நன்மையை நாம் பெற்றுக்கொள்கின்றோம் என்பதை விளக்க ஒரு நிகழ்வு.

சில ஆண்டுகளுக்கு முன்பாக, அட்லாண்டிக் பெருங்கடலில் போய்க்கொண்டிருந்த ஒரு நைஜீரிய எண்ணெய் கப்பலானது பனிப்பாறையில் மோதி மூழ்கிப்போனது. அந்தக் கப்பலில் பதிமூன்று பேர் பயணம் செய்திருந்தனர். அவர்கள் அனைவருமே இறந்துபோயிருப்பர் என எல்லாரும் நம்பினார்கள். இதற்கிடையில் அந்தக் கப்பலில் சமைப்பவராக இருந்த ஹாரிசன் என்பவர், தான் ஒரு இராட்சதக் குழாயினுள் போவதையும் தன்னுடைய உடல் குளிரில் உறைந்துகொண்டிருப்பதையும் நன்றாகவே உணர்ந்தார்.  உடனே அவர் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தைப் பற்றி தன்னுடைய மனைவிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தார். 

இன்னொரு பக்கம் எண்ணெய் கப்பல் பனிப்பாறையில் மோதிவிட்டது என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால், கப்பலில் பயணம் செய்த அனைவருமே இறந்துபோயிருப்பர் என்றுதான் அவர்கள் நினைத்துக்கொண்டு மீட்புப் பணியைத் தொடங்கினார். அவர்கள் மீட்புப் பணியைத் தொடங்கிய சிலமணி நேரத்திற்குள் ஒருவருடைய கையானது தண்ணீருக்குள் நீண்டுகொண்டிருப்பதைப் பார்த்தார்கள். உடனே அந்த மீட்புக் குழுவில் இருந்த ஒருவர் அந்தக் கையைப் பிடித்து இழுத்தபோது, அந்தக் கையானது இவருடைய கையைப் பிடித்துக்கொண்டு மேலே வந்தது. அப்போதுதான் அந்த மனிதர் (ஹாரிசன்) உயிரோடு இருப்பது தெரிய வந்தது. சிறுது நேரத்தில் மீட்புக் குழுவினர் அவரை மேலே இழுத்துக்கொண்டு வந்து, அவர்மீது வெந்நீர் ஊற்றி, அவருக்கு ஆக்ஜிசன் பொறுத்த, அவர் பிழைத்துக் கொண்டார்.

எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. உடனே அவர்கள் அவரிடம், “உன்னால் மட்டும் எப்படி இந்தக் குளிரில் மூன்று நாட்களும் தாக்குபிடிக்க முடிந்தது?” என்று கேட்டதற்கு அவர் அவர்களிடம், “நான் கடலுக்குள் மூழ்கத் தொடங்கியபோது செய்தியை அலைப்பேசி வழியாக என் மனைவியிடம் சொல்ல, அவள் எனக்காக தொடர்ந்து ஜெபித்து வந்தாள். அந்த ஜெபத்தின் பயனாகவே உயிர்பிழைத்தேன்” என்றார்.

ஜெபம் வல்ல காரியகளைச் செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.  ஆகவே, தூய ஷார்பெல்லின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஜெப வீரர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



அந்தியோக்கு நகர தூய மார்கரேட் வாழ்க்கை வரலாறு

_“யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகின்றோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கிறது (1 கொரி 1: 22,23)._

*வாழ்க்கை வரலாறு*

இன்று நாம் நினைவுகூரும் மார்கரேட், அந்தியோக்கு நகரில் இருந்த ஒரு பிறமத குருவினுடைய மகளாகப் பிறந்தார். இவர் வளர்ந்து பெரியவராகியபோது கிறிஸ்தவப் போதனைகளால் தொடப்பட்டு, கிறிஸ்தவ மறையைத் தழுவினார். இதை அறிந்த மார்கரேட்டின் தந்தை அவரை வீட்டைவிட்டே துரத்திவிட்டார். இதனால் மார்கரேட் வீட்டைவிட்டு வெளியே சென்று, ஆடுமேயத்து பிழைத்து வந்தார்.

மார்கரேட் பேரழியாக இருந்தார். எனவே அவருடைய அழகில் மயங்கிய பலரும் அவரை மணந்துகொள்ள முன்வந்தார்கள். ஆனால் மார்கரேட்டோ யாரையும் மணந்துகொள்ள முன்வரவில்லை. இந்நிலையில் ஒலிப்ரயுஸ் என்பவன் மார்கரேட்டை எப்படியாவது மணந்துகொள்ளத் தீர்மானித்தான். அதனால் அவன் மார்கரேட்டிடம் சென்று, அவரை வற்புறுத்திக் கேட்டான். ஆனால் மார்கரேட்டோ தன்னுடைய முடிவில் மிக உறுதியாக இருந்தார். இதனால் சினம்கொண்டவன் அவரை, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருகின்றார் என்று ஆளுநனின் போட்டுக்கொடுக்க, அவன் அவரைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யத் தொடங்கினான்.

மார்கரேட் இவ்வாறு சிறையில் அடைபட்டு, சித்ரவதையை அனுபவித்துக் கொண்டிருந்த தருணத்தில், சாத்தான் இராட்சதப் பாம்பு வடிவில் வந்து, அவரை விழுங்கப் பார்த்தது. ஆனால் அவர் தன்னுடைய கையில் பிடித்திருந்த சிலுவையோ பாம்பை இரண்டாகக் கிழித்துப் போட்டது. இதைப் பார்த்த வியந்துபோன சிறைக்கைதிகள் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். இச்செய்தி ஆளுநனின் செவிகளை எட்ட, அவன் மார்கரேட்டை எரிகின்ற எண்ணெய் கொப்பறையில் தூக்கிப் போட்டான், அது ஒன்றும் செய்யவில்லை. இதனால் அவன் மார்கரேட்டின் தலையை வெட்டிக் கொன்று போட்டான். இவ்வாறு மார்கரேட் தான் கிறிஸ்துவின் மீது விசுவாசத்திற்காக கொல்லப்பட்டார்.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*  

தூய மார்கரேட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். 
  
*1. சிலுவை மீட்பின் சின்னம்* 

தூய அந்தியோக்கு நகர மார்கரேட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, நமக்கு மேலே சொல்லப்பட்ட உண்மை மிகத் தெளிவாக விளங்குகின்றது. மார்கரேட் சிறையில் அடைபட்டிருந்த தருணத்தில் பாம்பு வடிவில் இருந்த சாத்தானோ அவரை விழுங்க நினைத்தபோது, மார்கரேட் தன்னுடைய கையில் பிடித்திருந்த சிலுவையால் அதனை இரண்டு துண்டாக்கினார். இங்கே சிலுவை மார்கரேட்டுக்கு சாத்தானுடைய பிடியிலிருந்து விடுவித்து, வாழ்வினைத் தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 

தூய மார்கரேட்டின் வாழ்க்கையில் நடந்தது போல, நம்முடைய வாழ்விலும் அதிசயங்கள் நடைபெறும். எப்போது என்றால், நாம் சிலுவையின் மகிமையையும் மகத்துவத்தையும் உணர்கின்றபோது. பல நேரங்களில் நாம், நம்முடைய நெற்றியில் அடிக்கடி சிலுவை அடையாளம் வரைவதாலோ என்னவோ அதனுடைய முக்கியத்துவத்தை உணராமலே இருக்கின்றோம். என்றைக்கு நாம் சிலுவையை நம்முடைய வெற்றியின் சின்னமாக, மீட்பின் சின்னமாகப் பார்க்கின்றோமோ, அன்றைக்கு நாம் அதன்வழியாக பெற்றுக்கொள்ளக் கூடிய ஆசிர்வாதங்கள் ஏராளம்.

இடைக்காலத்தில் கீழை நாடுகளின்மீது முகமதியர்களின்  படையெடுப்பு அதிகமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் யாராரெல்லாம் அவர்கள் கையில் அகப்பட்டார்களோ (கிறிஸ்தவர்கள் உட்பட) அவர்கள் அனைவரையும் முஸ்லீம்களாக மாற்றினார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க கிறிஸ்தவர்கள் தீவிரமாக யோசித்தார்கள். அப்போது யாரோ ஒருவர் ‘முகமதியர்களுக்கு சிலுவை அடையாளமே பிடிக்காது. ஆகையால் ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களுடைய நெற்றியிலே இரும்பை நன்றாகச் சூடாக்கி, சிலுவை அடையாளம் வரைந்துகொண்டால், அதனைப் பார்க்கின்ற  எதிரிகள் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்கள்’ என்று சொல்ல, அந்த யோசனை பலருக்கும் பிடித்துப் போனது.

எனவே அவர்கள் அனைவரும் இரும்பைச் சூடாக்கி, தங்களுடைய நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து கொண்டார்கள். ஒருசிலர் மட்டும் இரும்பைச் சூடாக்கி, நெற்றியில் சிலுவை அடையாளம் வரைவதா? அதெல்லாம் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டனர். இதனால் முகமதியரின் படையெடுப்பு நிகழ்ந்த போது யாராருடைய நெற்றில் சிலுவை அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தனவோ அவர்கள் யாவரும் விடப்பட்டு, அடையாளம் பொறிக்கப்படாதவர்கள் யாவரும் இழுத்துக்கொண்டு போகப்பட்டு, முகமதியர்கள் ஆக்கப்பட்டார்கள். இது ஒரு வரலாற்றுச் செய்தி

இங்கே சிலுவை மக்களுக்கு பாதுக்காப்பினைத் தந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. நமது வாழ்விலும் சிலுவையின் வழியாக சிம்மாசனத்தை அடையலாம்.

ஆகவே, தூய மார்கரேட்டைப் போன்று, நமது வாழ்வில் சிலுவையின் மகத்துவத்தை உணர்ந்து வாழ்வோம், எப்போதும் இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


உட்ரெக்ட் நகர தூய பிரடெரிக் வாழ்க்கை வரலாறு

*உட்ரெக்ட் நகர தூய பிரடெரிக் 

_“ஆண்டவர் என் கற்பாறை; என் கேடயம்; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்” (திப 18: 2)._

*வாழ்க்கை வரலாறு*

பிரடெரிக் ,நெதர்லாந்து நாட்டில் உள்ள உட்ரெக்ட் என்னும் ஊரைச் சார்ந்தவர். இவர் சிறுவயது முதலே கிறிஸ்தவ நம்பிக்கையில் சிறந்து விளங்கி வந்தார். வளர்ந்து பெரியவராகியபோது குருவாக மாறவேண்டும் என்னும் எண்ணம் கொண்டார். அதன்படியே இவர் குருவாகவும் மாறினார்.

குருவாக மாறிய பின்பு இவர் உபதேசியார்களுக்கு கிறிஸ்தவ நெறிமுறைகளைப் பற்றி போதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அப்பணியை இவர் சிறப்பாகச் செய்ததால், இவர் 825 ஆம் ஆண்டு உட்ரெக்ட் நகரின் ஆயராக உயர்த்தப்பட்டார். ஆயராக உயர்ந்தபின்பு இவர் நற்செய்தி அறிவிப்புப் பணியை இன்னும் சிறப்பாகச் செய்தார். குறிப்பாக தன்னுடைய மறைமாவட்டம் முழுவதும் நற்செய்தியைப் பணியாளர்களை அனுப்பி, அவர்கள் மூலம் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களும் அறிந்துகொள்ளும்படி செய்தார். 

இதற்கிடையில் நெதர்லாந்தில் அரசியாக இருந்த யூதித்தின் போக்கு துன்மாதிரி இருப்பதை அறிந்த ஆயர் பிரெடரிக், அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அப்படியிருந்தாலும் தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். இவர் கிறிஸ்தவை அறியாத மக்களும் கிறிஸ்துவைக் குறித்து அறிந்துகொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்; அவர்களிடமிருந்த பல மூட நம்பிக்கைகளை அகற்றப் பாடுபட்டார். இதனாலும் அவருக்கு எதிர்ப்புகள் வந்தன.

இப்படி பல்வேறு எதிர்ப்புகள் இவருடைய பணிவாழ்வில் வந்தாலும் மனம் தளர்ந்து போகாமல் தன்னுடைய நம்பிக்கையில், கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். ஒருநாள் இவர் ஆயர் இல்லத்தில் இருந்த சிற்றாலயத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் இவருக்குப் பின்னால் வந்து, இவருடைய முதுகில் கத்தியால் குத்திச் சென்றனர். இதனால் இவர் அந்த இடத்திலே இறந்து போனார். இவர் யாருடைய ஆட்களால் கொல்லப்பட்டார் என்பது இன்றுவரைக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது. ஒருசிலர் இவர் பிற சமயத்து ஆட்களால் கொல்லப்பட்டார் என்றும் சொல்வார்கள்.

இவர் இறப்பதற்கு முன்பு, “உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்” என்ற இறைவார்த்தையைச் சொல்லி உயிர் துறந்தார் (திபா 116:9)

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய பிரடெரிக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். 

*1. அஞ்சாது ஆண்டவருக்குப் பணி செய்வோம்*

தூய பிரடெரிக்கின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவர் ஆண்டவருடைய அன்புப் பணியை, நற்செய்தி அறிவிப்புப் பணியை அஞ்சா நெஞ்சத்தோடு செய்ததுதான் நம்முடைய நினைவுக்கு வந்துபோகின்றது. ‘இவர் அரசியாயிற்றே, இவருடைய தவற்றைச் சுட்டிக்காட்டினால் ஏதாவது ஆபத்து வந்துவிடுமே’ என்று பயப்படவில்லை, அதே நேரத்தில் மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்தபோது அவர்களுடைய தவற்றையும் சுட்டிக் காட்டினார். அப்போதுகூட, ‘இவர்களுடைய தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றோமே, இதனால் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமே’ என்றெண்ணிப் பயப்படவில்லை. அவர் எப்போதும் அஞ்சா நெஞ்சத்தோடுதான் ஆண்டவருக்குப் பணிசெய்தார். தூய பிரடெரிக்கிடம் இருந்த இதே மனதிடமும் நம்பிக்கையும் நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நாம் ஏன் அஞ்சா நெஞ்சத்தோடும் துணிவோடும் ஆண்டவருடைய நற்செய்திப் பணியைச் செய்யவேண்டும் என்று சொன்னால், நற்செய்தியில் இயேசு கூறுகின்றார், “நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர். அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று (மாற் 16: 17-18) இயேசுவின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டு, அவருடைய பணியைச் செய்கின்றபோது இவர் இத்தகைய பாதுகாப்பையும் ஆசிரையும் தருகின்றபோது, எதற்கு அஞ்சவேண்டும் என்பதுதான் இயேசுவின் கேள்வியாக இருக்கின்றது.

ஆகவே, தூய பிரடெரிக்கின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவருக்குப் பணி செய்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்

*மத்தேயு 11: 28-30*

*“இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்”*

*நிகழ்வு*

பெரிய கப்பல் ஒன்று கடலில் சென்றுகொண்டிருந்து. அதில் பெரிய பெரிய மனிதர்கெல்லாம் பயணம்செய்துகொண்டிருந்தார்கள். அதே கப்பலில் ஓர் இளம்பெண்ணும் பயணம் செய்தாள். அவளிடம் ஒரு (கெட்ட) பழக்கம் இருந்தது. அது என்னவெனில், சமுதாயத்தில் உயர்ந்த இடங்களில் இருப்பவர்களிடமிருந்து ஆட்டோகிராப் வாங்கி, அதைத் தன்னுடைய தோழிகளிடம் காட்டி, “பார்! எனக்கு எவ்வளவு பெரிய ஆட்களையெல்லாம் தெரியும்” என்று பெருமையடித்துக் கொள்வது. இதை அவள் பல ஆண்டுகளாகச் செய்துகொண்டு வந்தாள். 

அவள் பயணம் செய்துகொண்டிருந்தக் கப்பலில் அதிகம் கற்றுத்தேர்ந்த பேராயர் ஒருவரும் பயணம் செய்துகொண்டு வந்தார். அவரிடமிருந்து அவள் எப்படியாவது ஆட்டோகிராப் வாங்கிவிட வேண்டும் என்று முடிவுசெய்தாள். எனவே, அவள் பேராயரிடம் சென்று, தன்னிடமிருந்த ஆட்டோகிராப் வாங்கும் புத்தகத்தை நீட்டி, ஆட்டோகிராப் போடுமாறு மிகவும் பணிவோடு கேட்டார். 

“வழக்கமாக நான் யார்க்கும் ஆட்டோகிராப் போடுவதில்லை. நீ வற்புறுத்திக் கேட்டதால் போடுக்கிறேன்” என்று சொல்லி ஆட்டோகிராப் போட்டார். உடனே அந்த இளம்பெண், “பேராயர் அவர்களே! உங்கள் பெயரோடு நீங்கள் படித்த படிப்பையும் உங்களுடைய தகுதியையும் போட்டால், இன்னும் நன்றாக இருக்கும்” என்றார். “அப்படியா?” என்று கேட்டுவிட்டு, ஒருநிமிடம் யோசித்தார். பின்னர், அவர் அவருடைய பெயர்க்குப் பின்னால், “மிகப்பெரிய பாவி” என்ற எழுதினார். அதைப் பார்த்துவிட்டு, அந்த இளம்பெண் அதிர்ந்து போய், அவரிடம் கொடுத்த ஆட்டோகிராப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு வேகமாக விரைந்து சென்றார். 

அந்த இளம்பெண், பேராயர் தான் படித்த படிப்பையெல்லாம் குறிப்பிடுவார் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, அவர் ‘மிகப்பெரிய பாவி’ என்று குறிப்பிட்டது உண்மையில் வியப்பாக இருந்திருக்கும். பேராயர் தன்னை மிகப்பெரிய பாவி என்று குறிப்பிட்டார் எனில், அவரிடம் எந்தளவுக்குத் தாழ்ச்சி இருந்திருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். நற்செய்தியில் இயேசு, “கனிவும் மனத்தாழ்மையும் உள்ளவன்” என்று சொல்லிவிட்டு “என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்கின்றார். இயேசுவிடம் இருக்கும் கனிவும் தாழ்ச்சியும் எத்தகையது? அவற்றை அவரிடமிருந்து கற்றுக்கொள்வதால் ஒருவர்க்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன? என்பது பற்றிச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். 

*கனிவும் மனத்தாழ்மையும் உள்ள இயேசு*

நற்செய்தியில் இயேசு, பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்... நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்... என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்... அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்கின்றார். இயேசு கூறும் இவ்வார்த்தைகளில் இரண்டு முதன்மையான கருத்துகள் இருக்கின்றன. ஒன்று, கனிவும் மனத்தாழ்மையும் உள்ள இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதாகும். இரண்டு. அப்படி நாம் கற்றுக் கொள்கின்றபோது, நம்முடைய உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதாகும். இந்த இரண்டு கருத்துகளையும் இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை மனத்தாழ்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில்,  அவர் கடவுள் தன்மையில் விளங்கியபோதும் தன்மையே தாழ்த்தி, மனிதராகி, சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார். (பிலி 2: 6-11). மேலும் அவர் செல்வராயிருந்தும் நமக்காக ஏழையானார் (2கொரி 8: 9). இவ்வாறு இந்த உலகத்தில் யாரும் செய்யாததையும் செய்து, தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். அதனால்தான் அவரால் என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று இவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிகின்றது. 

*இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டால் இளைப்பாறுதல் கிடைக்கும்*
இயேசு, நான் கனிவும் மனத்தாழ்மையும் உடைவன் என்று சொல்லி மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்றும் சொல்கின்றார். அப்படியானால், நாம் இயேசுவிடம் இருக்கும் கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்வது அவசியமாகின்றது. 

இன்றைக்குப் பலர்க்கு மனத்தாழ்மை என்ற ஒன்று கிடையாது. அதனால்தான் அவரால்களால் சுமைகளை, மனக்கவலைகளை இன்ன பிறவற்றைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. என்றைக்கு ஒருவர் இயேசுவைப் போன்று மனத்தாழ்மையோடு இருக்கின்றாரோ அன்றைக்கு அவரால் நிச்சயம் துன்பங்களையும் வேதனையையும் தாங்கிக்கொள்ள முடியும். அன்னை மரியா அப்படித்தான் மனத்தாழ்மையோடு இருந்தார். அதனால் அவருடைய வாழ்வில் வந்த வியாகுலங்களைத் தாங்கிக்கொள்ள முடிந்தது. எனவே, நாமும் இயேசுவைப் போன்று, மரியாவைப் போன்று மனத்தாழ்மையோடு இருக்கக் கற்றுக்கொள்வோம். அதன்மூலம் இயேசு தருகின்ற இளைப்பாறுதலைப் பெறுவோம்.

*சிந்தனை*
 
‘முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவியார் அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்” (எபே 4:2) என்பார் பவுல். ஆகவே, நாம் இயேசுவிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொண்டு, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.