Wednesday 31 July 2019

துன்பம் நம்மைப் புடமிடும்

*விடுதலைப் பயணம் 1: 8-14, 22*

*துன்பம் நம்மைப் புடமிடும்*

*நிகழ்வு*

தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவர்க்குக் கோடிக்கணக்கில் சொத்துகள் இருந்தன. இதனால் அவருடைய வாழ்க்கை நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. இப்படி இருக்கையில் அவருடைய தொழிலில் தொடர் தோல்விகள் ஏற்படவே அவர் கடன்காரரானார். இதனால் அவர் வீட்டைவிட்டு வெளியேறி, மனம் போன போக்கில் நடக்கத் தொடங்கினார். 

இடையில் ஓர் ஊர் வந்தது. அந்த ஊரின் எல்லையில் இருந்த நிலத்தில் விவசாயி ஒருவர் கோதுமை மணிகளை விதைத்து, அவற்றை மண்வெட்டியால் கொத்தி நிலம் முழுவதும் நிரப்பிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த அந்தத் தொழிலதிபர் விவசாயியிடம், “என்னய்யா நீங்கள்! அதான் கோதுமை மணிகளை நிலம் முழுவதும் விதைத்து விட்டீர்களே!. பிறகு எதற்கு அவற்றை மண்வெட்டியால் கொத்தி நிலம் முழுவதும் நிரப்பிக் கொண்டிருக்கின்றீர்கள்?” என்றார். “கோதுமை மணிகள் மண்ணுக்குள் ஆழமாகப் போனால்தானே மழை பெய்யும்போதும் தண்ணீர் பாய்ச்சும் போதும் அவை நிலத்தில் உறுதியாக இருந்து நிறைந்த பலனைத் தரும்” என்றார் விவசாயி. இதைக் கேட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தவராய் விவசாயி தொடர்ந்து நடக்கத் தொடங்கினார். 

சிறிதுதூரம் அவர் சென்றதும் விவசாயி ஒருவர், இரண்டு ஏர்மாடுகளை வைத்து, நிலத்தை ஆழமாக உழுது கொண்டிருந்தார். இதைப் பார்த்துவிட்டு தொழிலதிபர் அந்த விவசாயியைப் பார்த்து, “ஐயா பெரியவரே! நீங்கள் இப்படி நிலத்தை ஆழமாக உழுவதால், அதற்கு வலிக்காதா? அது மிகபெரிய குற்றமாகாதா?” என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி, “அப்படியில்லை... நிலத்தை ஆழமாக உழுதால்தான் பயிரிடுவதற்குத் தோதுவாக இருக்கும். இல்லையென்றால், இந்நிலத்தில் பயிர்செய்ய முடியாது” என்றார். 

அந்த விவசாயி சொன்னதையும் காதில் போட்டுக்கொண்டு தொழிலதிபர் தொடர்ந்து நடந்தார். இன்னும் சிறிதுதூரம் அவர் சென்றிருப்பார். அப்பொழுது ஒருவர் தன்னுடைய மல்லிகைத் தோட்டத்தில் இருந்த செடிகளை கத்திரியால் வெட்டிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் தொழிலதிபர் அவரிடம், “நன்றாக வளர்ந்திருக்கின்ற இந்த மல்லிகைச் செடிகளை இப்படி வெட்டிக்கொண்டிருக்கின்றீர்களே... இது உங்களுக்கு நன்றாக இருக்கின்றதா?” என்றார். உடனே அந்த மனிதர் அவரிடம், “இந்த மல்லிகைச் செடிகளை அவ்வப்போது சீராக  வெட்டிவிட்டால்தான் அவை நல்ல பலனைக் கொடுக்கும். இல்லையென்றால் அவை பெயருக்கு வளர்ந்திருக்குமே ஒழியே, சரியாகப் பூக்கள் பூக்காது” என்றார். 

இப்பொழுது அவர், அந்த மூன்று விவசாயிகள் சொன்னதையும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கத் தொடங்கினார். ‘கோதுமை மணிகள் நல்ல பலனைத் தர, அவை நன்றாகக் கொத்தப்பட்ட நிலத்தினுள்ளே போடப்படுகின்றன... நிலம் நல்ல பலனைத் தர, ஆழமாக உழப்படுகின்றது. மல்லிகைச் செடிகள் நன்றாகப் பூப்பூக்க அவ்வப்போது கத்தரிக்கப்படுகின்றன. அப்படியானால் நானும் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற இதுபோன்ற துன்பங்களால் புடமிடப்படவேண்டியது அவசியம்தானோ!’ இத்தகைய தெளிவினை அவர் பெற்றுக்கொண்ட பிறகு தனக்கு ஏற்பட்ட துன்பங்கட்காக இறைவனுக்கு நன்றி செலுத்தத் தொடங்கினார். பின்னர் கடுமையாக உழைத்து தன்னுடைய தொழிலில் முன்பைவிடப் பெரிய நிலையை அடைந்தார். 

ஒருவருடைய வாழ்க்கையில் வரும் துன்பங்கள் அவரைப் புடமிடுகின்றன. அத்தகைய துன்பங்களை அவர் மனவுறுதியோடு தாங்கிக்கொண்டு உழைத்தால் வெற்றி பெறலாம் என்பதை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துக் கூறுகின்றன. இந்திய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் –எபிரேயர்கள் - பாரவோன் மன்னனால் துன்புறுத்தப்படுகின்றார்கள். அவர்கள் பட்ட துன்பம் அவர்களை மிகவும் வலிமைவாய்ந்த ஓர் இனமாக மாற்றுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

*இஸ்ரயேல் மக்கள் பாராவோனின் ஆட்சியில் துன்பப்படக் காரணமென்ன?*    

கானான் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதால், எகிப்திற்குச் செல்லும் யாக்கோபின் குடும்பம் அங்கு, ஆண்டவர் சொன்னது போன்று (தொநூ 12) பலுகிப் பெருகுகின்றது. இதைத் தொடர்ந்து எகிப்து நாட்டை ஆண்ட பாரவோன் மன்னன் யாக்கோபின் சந்ததியினரைக் கொடுமைப்படுத்தத் தொடங்குகின்றான். அவன் ஏன் அவர்களைக் கொடுமைப்படுத்தவேண்டும் என்றால், அவனுக்கு அவர்களைக் குறித்து முழுவதுமாகத் தெரியாமல் இருந்தது. அடுத்ததாக, எபிரேயர்கள் எகிப்தியர்களைவிட செழித்தோங்கி வளர்ந்திருந்தார்கள். இதைவிட மிக முக்கியமான காரணம், எபிரேயர்கள் அதாவது யாக்கோபின் சந்ததியினர் நாட்டின் எல்லைப் பகுதிகளில் குடியிருந்தார்கள். அவர்கள் எதிரி நாட்டினரோடு கைகோர்த்தால் தன்னுடைய நாட்டிற்கு அது வினையாகிவிடும்  என்று நினைத்து பாரவோன் அவர்களைக் கொடுமைப்படுத்துகின்றான். 

*துன்பங்களின் வழியாக தன் மக்களைப் புடமிட்ட இறைவன்*

பாரவோனின் ஆட்சியில் கட்டிட வேலைகளிலும் விவசாயம் சார்ந்த வேலைகளிலும் எபிரேயர்கள் ஈடுபடுத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்கள். இத்துன்பங்களின் வழியாக கடவுளை அவர்களை உறுதிப்படுத்தி, அவர்களை இன்னும் வலிமை வாய்ந்த இனமாக உருவாக்கினார். அது மட்டுமல்லாமல் அவர்கள் வழியாக பேரரசராம் ஆண்டவர் இயேசுவைத் தோன்றச் செய்கின்றார்.

சில சமயங்களில் நாம் நினைக்கலாம், ‘இந்தத் துன்பமெல்லாம் நமக்கு எதற்கு?’ என்று. இறைவன் துன்பங்களின் வழியாக நம்மை வலிமையுறச் செய்கின்றார். அதற்காகவே, அவர் துன்பங்களை நம்முடைய வாழ்வில் அனுமதிக்கின்றார். இந்த உண்மையை உணர்ந்தொமெனில் நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களைக் கண்டு நாம் அஞ்ச மாட்டோம். 

*சிந்தனை*

‘கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால், அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்’ (யோவா 12: 24) என்பார் இயேசு. ஆகவே, நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களைத் துணிவோடு தாங்கிக்கொண்டு, தொடர்ந்து இலக்கை நோக்கி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் 

No comments:

Post a Comment