Showing posts with label GOD IS LOVE. Show all posts
Showing posts with label GOD IS LOVE. Show all posts

Sunday 28 June 2020

புனிதர்கள் பேதுரு, பவுல்

 – திருத்தூதர்கள் பெருவிழா 29 06 2020*

*முதல் வாசகம்*

_ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்._

*திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11*

அந்நாள்களில்

ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது.

ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, “உடனே எழுந்திடும்” என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன.

வானதூதர் அவரிடம், “இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், “உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்” என்றார்.

பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, “ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

*பதிலுரைப் பாடல்*

*திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 . (பல்லவி: 4b)*

_பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்._

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

*இரண்டாம் வாசகம்*

_இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே._

*திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18*

அன்பிற்குரியவரே,

நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.

நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

*மத் 16: 18*

_அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா._

*நற்செய்தி வாசகம்*

_உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்._

*✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19*

அக்காலத்தில்

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.

அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Saturday 22 February 2020

சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்”*


*“சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்”*

*நிகழ்வு*

ஒருவர் ஒரு பெரிய கடை வைத்து வாணிபம் செய்துவந்தார். அவர் தன்னுடைய கடைக்குப் பின்னால் ஒரு சிறிய அறை கட்டி, அதில் தன்னுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஒரு புனிதமான குருவின் படத்தை மாட்டி வைத்திருந்தார்.

எப்பொழுதெல்லாம் அவருக்குத் சோதனைகள் வந்தனவோ, குறிப்பாக தன்னுடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அதிகமான இலாபம் வைத்துப் பொருள்களை விற்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதோ அப்பொழுதெல்லாம் அவர் தன்னுடைய கடைக்குப் பின்னால் இருந்த அறைக்குச் சென்று, அங்கிருந்த குருவானவரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, “சுவாமி! எனக்கு மிகப்பெரிய ஒரு சோதனை வந்திருக்கின்றது. இந்தச் சோதனையை என்னால் வெற்றிகொள்ளமுடியவில்லை. உங்களுடைய திருமுகத்தை ஒருமுறை பார்த்துவிட்டால் என்னால் சோதனையை வெற்றிக்கொள்ள முடியும். அதனால்தான் உங்களுடைய திருமுகத்தைக் காண இங்கு வந்திருக்கின்றேன்” என்று சொல்லிவிட்டு, கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் நியாயமான இலாபம் வைத்து விற்பார்.

இந்த நிகழ்வில் வருகின்ற கடைக்காரர் தனக்கு வந்த சோதனையை தன்னுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த குருவானவரின் திருமுகத்தைப் பார்ப்பதன் மூலம் வெற்றிகொண்டார். நாம் நம்முடைய வாழ்வில் வரும் சோதனைகளை ஆண்டவரின் திருமுகத்தை ஒருமுறை பார்த்தோமெனில் வெற்றிகொள்ளலாம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம் சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது எப்படி என்று இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

*கடவுள் யாரையும் சோதிப்பதில்லை*

ஒருசிலர் ‘கடவுள் என் வாழ்வில் சோதனைகளுக்கு மேல் சோதனைகளை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். நாமும்கூட இவ்வார்த்தைகளைப் பலமுறை உச்சரித்திருப்போம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய முதல் வாசகத்தில் புனித யாக்கோபு சொல்லக்கூடிய வார்த்தைகள் நமது கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. “சோதனை கடவுளிடமிருந்தே வருகின்றது என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை” என்கின்றார் புனித யாக்கோபு.. இவர் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளை நன்கு உணர்ந்துகொண்டோமென்றால், சோதனைகள் கடவுளிடமிருந்தே வருகின்றன என்று சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்க மாட்டோம்.

*ஒவ்வொருவரும் தம் சொந்த தீய நாட்டத்தினாலேயே சோதிக்கப்படுகின்றனர்*

சோதனைகள் கடவுளிடமிருந்து வருவதில்லை என்று சொன்ன புனித யாக்கோபு, அந்தச் சோதனைகள் எப்படி வருகின்றன என்ற தெளிவினையும் நமக்குத் தருகின்றார். ஆம். “ஒவ்வொருவரும் தம் சொந்த தீய நாட்டத்தினாலேயே சோதிக்கப்படுகின்றனர்” என்று கூறுவதன் மூலம், சோதனைகள் எப்படி வருகின்றன என்பதற்கான தெளிவினைப் புனித யாக்கோபு தருகின்றார். இந்த இடத்தில் ஒருவர் எப்படியெல்லாம் சோதனைக்கு ஆளாகின்றார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

பொதுவாக சோதனைகள் எல்லாருக்கும் வரும். ஆண்டவர் இயேசுவுக்கே சோதனைகள் வந்தனவே! சோதனைக்கான விதையை ஆசை விதைக்கின்றது என்று சொல்லலாம். ஆசையால் நாம் ஏமாற்றப்படும்பொழுது, கடவுளின் கட்டளைகளை மீறுகின்றோம் அல்லது கீழ்ப்படியாமல் நடந்துகொள்கின்றோம். இதன்மூலம் நாம் சோதனைக்கு உட்பட்டு பாவம் செய்கின்றோம். இங்கு ஆதாமையும் ஏவாளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பாம்பின் பசப்பு மொழியால் ஆதாமின் மனைவியின் உள்ளத்தில் ஓர் ஆசை பிறக்கின்றது. அந்த ஆசை அவருக்கு ஒருவிதமான மயக்கத்தை ஏற்படுத்த, அவர் ஏமாந்துபோகின்றார். பின்னர் கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்கின்றார். ஆகவே, ஏவாளின் உள்ளத்தில் ஏற்பட்ட ஆசையே அவரையும் ஆதமையும் பாவம் செய்யத் தூண்டுகின்றது என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றும் ‘ஆசை அறுமின்’ என்று சொல்கின்றார்கள்.

*பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு*

ஒருவருக்கு வருகின்ற ஆசை அவரைச் சோதனையில் விழவைத்துப் பாவம் செய்யத் தூண்டுகின்றது என்று சிந்தித்துப் பார்த்தோம். இந்தப் பாவத்தினால் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்வோம். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவு.” ஆம், நாம் நமக்கு வரும் சோதனைகளுக்கு உட்படும்போது சாவைத்தான் கூலியாகப் பெறுவோம். அதே நேரத்தில் நாம் நமக்கு வரும் சோதனைகளை மனவுறுதியுடன் தாங்கிக்கொண்டால், பேறுபெற்றோர் ஆவோம் என்பது உறுதி. ஆகையால், நாம் பேறுபெற்றோராக மாற நமக்கு வரும் சோதனைகளை மனவுறுதியோடு தாங்கிக்கொள்வோம்

*சிந்தனை*

‘தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்’ (எபி 2: 18) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நாம் நமக்கு வரும் சோதனைகளை மனவுறுதியுடன் தாங்குவோம். அதநேரத்தில் சோதனைகளை வெற்றிக்கொள்ள இறைவனின் அருளை வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Seven Founders of the Order of the Servites



*Seven Founders of the Order of the Servites*

*FIRST READING*      
“The testing of your faith produces steadfastness that you may be perfect and complete.”
The beginning of the Letter of Saint James (James 1:1-1l)

James, a servant of God and of the Lord Jesus Christ, To the twelve tribes in the Dispersion: Greeting. Count it all joy, my brethren, when you meet various trials, for you know that the testing of your faith produces steadfastness. And let steadfastness have its full effect, that you may be perfect and complete, lacking in nothing. If any of you lacks wisdom, let him ask God, who gives to all men generously and without reproaching, and it will be given him. But let him ask in faith, with no doubting, for he who doubts is like a wave of the sea that is driven and tossed by the wind. For that person must not suppose that a double-minded man, unstable in all his ways, will receive anything from the Lord. Let the lowly brother boast in his exaltation, and the rich in his humiliation, because like the flower of the grass he will pass away. For the sun rises with its scorching heat and withers the grass; its flower falls, and its beauty perishes. So will the rich man fade away in the midst of his pursuits.
_______________________________________
*RESPONSORIAL PSALM*   Psalm119:67.68.71.72.75.76 (R. 77a)
*R/. Show me compassion, Lord,  that I may live.*

Before I was humbled, I strayed,
but now I keep your word. *R.*

You are good, and you do what is good;
teach me your statutes. *R.*

It was good for me to be humbled,
that I might learn your  statutes. *R.*

The law from your mouth means more to me
than large quantities of silver and gold. *R.*

O Lord, I know that your decrees are right;
though I am humbled, you are just. *R.*

Let your merciful love console me
by your promise to your servant.  *R.*
______________________________________
*ALLELUIA*
John 14:6
Alleluia. I am the way, and the truth, and the life, says the Lord; no one comes to the Father but by me. Alleluia.
______________________________________
*Gospel*
“why does this generation seek a sign?”
A reading from the holy Gospel according to Mark (Mark 8:11-13)

At that time: The Pharisees came and began to argue with Jesus, seeking from him a sign from heaven, to test him. And he sighed deeply in his spirit, and said, “Why does this generation seek a sign? Truly, I say to you, no sign shall be given to this generation.” And he left them, and getting into the boat again he departed to the other side.
_______________________________________
******************************************
                *Have a Blessed Day*
******************************************
*Today’s Reflection*
The Pharisees demanded a sign from Jesus. Their demand for a sign was to entrap Jesus and accuse him when the time seemed opportune. Jesus knew this and refused them and sign, partly because they lacked faith in him, and partly because their demand was a ploy to indict him. Is it not strange that people have varied motives for worshipping God? Some worship God for material and temporal benefit; some see the Church as a societal privilege, while some others see it as a pressure group. Very few seek God for who he is, out of love for God and neighbour. Jesus refused to give signs because he noticed that a lot of people followed him merely because of the miracles they saw him work; they expected wonder and entertainment. Today’s followers of Jesus do not differ from those people. Crusade grounds are always filled up, for various reasons, ranging from business deals and search for entertainment, fun and solutions to various problems.

துன்பம் வரும் வேளையில சிரிங்க”



*“துன்பம் வரும் வேளையில சிரிங்க”*

*நிகழ்வு*

ஓர் ஊரில் கிறிஸ்தவ இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அவன் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் இருப்பது போன்றும் குட்டிச் சாத்தான் அவனைத் தங்களுடைய கைகளில் இருந்த கொடிய ஆயுதங்களைக் கொண்டு தாக்குவது போன்று இருந்தது.

என்னதான் குட்டிச் சாத்தான்கள் அவனைக் கொடிய ஆயுதங்களைக் கொண்டு தாக்க முற்பட்டபோதும், அது அவனுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அப்பொழுது அவன் இயேசு சொன்ன இவ்வார்த்தைகளை நினைவில் கொண்டான். “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்.” இவ்வார்த்தைகளை அவன் நினைவில் கொண்டதும், ஆறுதல் அடைந்தான்.

ஆம், இயேசு இவ்வுலகை வெற்றிகொண்டுவிட்டபடியால் நாம் எந்தவொரு சோதனையையும் துன்பத்தையும் கண்டு அஞ்சத் தேவையில்லை. மாறாக அவற்றை மகிழ்வோடு எதிர்கொள்வோம் என்ற உண்மையை எடுத்துச்சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம், நம்முடைய வாழ்வில் சோதனை வருகின்றபொழுது, அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

*சோதனையின்பொழுது மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்*

பொதுவாக நம்முடைய வாழ்வில் சோதனைகள் வருகின்றபொழுது ஒன்று, கடவுளைப் பழித்துக் கொண்டிருப்போம். இல்லையென்றால், ‘எல்லாம் நம்முடைய விதி’ என்று சொல்லி அழுது புலம்பிக் கொண்டிருப்போம்; ஆனால், புனித யாக்கோபு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில், அதன் ஆசிரியர், “பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைக் கொண்டிருங்கள்” என்று கூறுகின்றார். உண்மையில், பல வகையான சோதனைகளுக்கு நாம் உள்ளாகும்போது, நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? மிகவும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு கேள்வியாக இருக்கின்றது. புனித யாக்கோபு சொல்வதுபோல் சோதனை வேளையில் நாம் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்யவேண்டும் என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

*மனவுறுதியோடு இருக்கவேண்டும்*

நம்முடைய வாழ்வில் சோதனைகள் வருகின்றபோது அல்லது நம்பிக்கை சோதிக்கப்படும்பொழுது அச்சோதனையில் வீழ்ந்து விடாமல் அப்படியே இருந்தால், மனவுறுதி உண்டாகும். அந்த மனவுறுதியே நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணமாக அமைந்துவிடும் என்கின்றார் புனித யாக்கோபு. இக்கருத்தினை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு புனித பேதுரு தன்னுடைய முதல் திருமுகத்தில் சொல்கின்ற வார்த்தைகளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. “இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள்” (1 பேது 1:6) என்பார் புனித பேதுரு. பல்வேறு சோதனைகளால் நாம் துயருற நேரிடலாம். அது இயற்கை. ஆனால், அப்படியே சோதனைகளைச் சந்திக்கின்றபொழுது ஒருபோதும் மனம்தளர்ந்து போய்விடக்கூடாது. ஒருவேளை நாம் மனம்தளர்ந்து போய்விட்டால் நாம் சோதனையில் விழுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. மாறாக, நாம் மனவுறுதியோடு இருந்தால், சோதனைகளை எளிதாக வெற்றிகொள்ளலாம். ஆகவே, நாம் நம்முடைய வாழ்க்கையில் மனவுறுதியோடு இருப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.

*ஞானத்தைக் கேட்போம்*

இன்றைய முதல் வாசகத்தில் புனித யாக்கோபு இன்னொரு முக்கியமான செய்தியைச் சொல்கின்றார். அது என்னவெனில், குறைவான ஞானமுடையோர் ஞானத்தை இறைவனிடம் கேட்கவேண்டும் என்பதாகும். பலர் சோதனையை எதிர்கொள்ள முடியாதவர்களாக, அதில் வீழ்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்டோர் மனவுறுதியோடு இருக்கவேண்டும் என்று மேலே நாம் சிந்தித்துப் பார்த்தோம். இந்த மனவுறுதி நமக்கு வேண்டும் என்றால், அதற்கு ஞானமானது தேவைப்படுகின்றது. அதனால்தான் புனித யாக்கோபு, குறைவான ஞானமுடையோர் ஞானத்தை இறைவனிடம் கேட்கவேண்டும் என்றும் அப்படிக் கேட்கின்றபோது முழு நம்பிக்கையோடு கேட்கவேண்டும் என்றும் கூறுகின்றார்.

ஆதலால் நாம் நம்முடைய வாழ்வில் சோதனைகள் வருகின்றபொழுது அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வோம். நாம் நமக்கு வருகின்ற சோதனைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றபோது மனம் உறுதியடைகின்றது. அதனாலேயே நம்முடைய வாழ்வில் இறைவனுடைய அருள் நிறைவாகத் தங்குகின்றது.

*சிந்தனை*

‘இறுதிவரை மனவுறுதியோடு இருப்பவரே மீட்புப் பெறுவர்’ (மத் 24:13) என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்முடைய வாழ்வில் எத்தனை சோதனைகளும் துன்பங்களும் வந்தாலும், இறுதிவரை மனவுறுதியோடு இருந்து ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது’



*‘இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது’*

*நிகழ்வு*

ஹாட்ரியன் என்றொரு மன்னன் இருந்தான். அவனுக்குக் கடவுள் நம்பிக்கையே கிடையாது. ஒருநாள் அவன் யூத இரபியான யோசுவாவிடம் சென்று, “நீங்கள் கடவுளிடம் பேசுவதாகச் சொல்கிறீர்கள்; ஆனால் அவர் எங்கே இருக்கின்றார் என்று சொல்லமாட்டேன் என்கிறீர்கள். ஒருவேளை அவர் இருக்கின்றார் என்றால், எனக்குக் காட்டுங்கள்” என்றார். அதற்கு இரபி யோசுவா, “அதெல்லாம் முடியாது” என்று பதிலுரைத்தார்.

“கடவுளைக் காணமுடியாதா...? அப்படியானால், காணமுடியாத கடவுளை நான் எப்படி நம்புவது...?” என்றான் ஹட்ரியான். இரபி யோசுவா ஒரு வினாடி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் மன்னனை அறையைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டு சென்று, சூரியனைப் பார்க்கச் சொன்னார். அதுவோ நண்பகல் வேளை. சூரியனைப் பார்க்க முயன்ற ஹாட்ரியனால் அதைப் பார்க்கவில்லை. அதனால் அவன் இரபி யோசுவாவிடம், “என்னால் பார்க்கமுடியவில்லை” என்றான். அப்பொழுது இரபி யோசுவா அவனிடம், “படைப்புப் பொருளையே பார்க்கமுடியாத உன்னால், படைத்தவனை எப்படிப் பார்க்க முடியும்?” என்றார். ஹட்ரியன் எதுவும் பேசமுடியாமல் வாயடைத்து நின்றான்.

கடவுளைக் காணவேண்டும் என்று கேட்ட ஹட்ரியன் என்ற மன்னனுக்கு இரபி யோசுவா தக்க பதில் தந்தது போன்று, இன்றைய நற்செய்தியில் அடையாளம் வேண்டும் என்று பரிசேயர்களுக்கு இயேசு தக்க பதில் தருகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்தப் பார்ப்போம்.

*ஏன் அடையாளம் கேட்டார்கள்?*

இயேசுவின் செல்வாக்கு நாளொன்று மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தது. இதைக் கேள்விப்பட்ட ‘பொறாமை மிகுந்த’ பரிசேயர்கள் அவரை வீழ்த்தவேண்டும் என்ற எண்ணத்தோடு இயேசுவிடம் வந்து, வானிலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டவேண்டும் என்று கேட்கின்றார்கள். இயேசு அவர்களுக்கு என்ன மறுமொழி கூறினார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பு, எந்த அடிப்படையில் பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் ஒன்றைக் காட்டுமாறு கேட்டார்கள் எனத் தெரிந்துகொள்வது நல்லது.

இணைச்சட்ட நூல் 13: 1-3, 18: 18-22 இல் இவ்வாறு வாசிக்கின்றோம். ‘உங்களிடையே ஓர் இறைவாக்கினனோ அல்லது கனவு காண்பவனோ தோன்றி, அடையாளம் காட்டுகின்றேன் என்று சொன்னால், உடனே அவனை நம்பிவிடவேண்டாம். ஏனெனில் அவன் உங்களை வேற்றுதெய்வங்களை வழிபடத் தூண்டுவான்.’

மேல்கண்ட இறைவார்த்தையின் அடிப்படையில் பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்டிருக்கலாம்; ஆனால், சாதாரண மக்கள் இயேசுவை இறைவாக்கினராக, தாவீதின் மகனாக, மெசியாவாக ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அப்படியிருக்கையில் பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்டதுதான் மிகவும் வியப்பாக இருக்கின்றது. ஒருவேளை இயேசுவால் அடையாளம் தரமுடியாத பட்சத்தில் அவர் இறைவாக்கினர் கிடையாது என்ற செய்தியை மக்களிடம் பரப்பலாம் என்ற எண்ணத்தில் பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்டிருக்கலாம் என்று சொல்லலாம்.

*இயேசு தந்த அடையாளம்*

வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும் என்று பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்டபொழுது, இயேசு பெருமூச்சு விட்டு, இத்தீய தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்று உறுதியாகச் சொல்கின்றார். மத்தேயு நற்செய்தியில், பரிசேயர்கள் அடையாளம் கேட்டபொழுது, இயேசு யோனாவை அடையாளமாகத் தருவார் (மத் 16:4); ஆனால், மாற்கு நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எந்த அடையாளமும் தரப்பட மாட்டாது என்று உறுதியாகக் கூறுகின்றார். இதற்கு முக்கியமான காரணம், இந்த நிகழ்விற்கு முன்பு இயேசு எத்தனையோ வல்ல செயல்களையும் அருமடையாளங்களையும் செய்திருப்பார். அவற்றைக் கண்டு, சாதாரண மக்கள் இயேசுவின் நம்பிக்கை கொண்டார்கள். இந்தப் பரிசேயர்கள்தான் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாமல், அவரைச் சோதித்துப் பார்க்கின்றார்கள். இதனாலேயே இயேசு அவர்களிடம் அடையாளம் எதுவும் தரப்படமாட்டது என்று கூறுகின்றார்.
இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும்

பரிசேயர்களுக்கு இயேசு அளித்த பதில் நமக்கொரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும்... அவரை நம்பவேண்டும் என்பதாகும். பரிசேயர்களுக்கு இயேசுவின் நம்பிக்கை இல்லை. அதனால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆனால் நாம் அப்படியிருக்கக்கூடாது. ஏனெனில், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறுவதுபோல், ‘நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆகமுடியாது’ (எபி 11:6). ஆகையால், நாம் இயேசுவை நம்புவோம். அவரைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோம்.

*சிந்தனை*

‘இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுவோரோடு கடவுள் இணைந்திருக்கின்றார்; அவரோடு கடவுளும் இணைந்திருக்கின்றார்’ (1 யோவா 4: 15) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவே இறைமகன் என ஏற்றுக்கொண்டு அவரோடு இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


தூய ஒனேசிம்

தூய ஒனேசிம்

மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, “கடவுளுக்கு நீர் அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே” என்று பதிலுரைத்தான். பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார். (லூக் 23: 43)

*வாழ்க்கை வரலாறு*

ஒனேசிம், பிரிகியாவைச் சேர்ந்தவர். இவர் கொலோசை நகரில் இருந்த பெரும் செல்வந்தராகிய பிலமோனிடம் அடிமையாய் வேலை பார்த்து வந்தார். ஒருசில காரணங்களால் ஒனேசிம் பிலமோனிடமிருந்து தப்பியோடி உரோமைச் சிறையில் இருந்த பவுலிடம் தஞ்சம் புகுந்தார். அங்கே சிலகாலம் அவரோடு தங்கி, அவருக்கு உதவிகள் புரிந்து வந்தார். இதற்கிடையில் பவுல், ஒனேசிம் தன்னோடு இருப்பது நல்லதல்ல, அவர் அவருடைய தலைவராகிய பிலமோனோடு இருப்பதே நல்லது என்று உணர்ந்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், “ஒனேசிமை மன்னித்து, அவரை அடிமையாக அல்ல, அன்புச் சகோதரராக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் ஒனேசிமை பிலமோனிடம் அனுப்பி வைக்க, அவர் அவருடைய குற்றங்களை மன்னித்து தனது சகோதரராக ஏற்றுக்கொண்டார்.

சில நாட்களுக்குப் பின் ஒனேசிம், பிலமோனிடமிருந்து விடுதலை அடைந்து மீண்டுமாக பவுலோடு இணைந்து பணியாற்றினார். அதன்பிறகு திமொத்தேயுவுக்குப் பின், எபேசு நகரின் ஆயராக உயர்ந்தார். அங்கு அவர் ஆண்டவரின் நற்செய்தியை மிகுந்த வல்லமையோடு எடுத்துரைத்தார். இயல்பிலே சிறந்த பேச்சாளராய் விளங்கிய இவர், மறையுரைகளை வல்லமையோடு ஆற்றினார். இந்த நேரத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான வேத கலாபனை நடைபெற்றது. இதில் இவர் 18 ஆண்டுகள் சித்ரவதையை அனுபவித்தார். அத்தகைய தருணங்களில் எல்லாம் இவர் ஆண்டவர் இயேசுவின் மீது உறுதியான நம்பிக்கையோடு இருந்தார். கி.பி. 95 ஆம் ஆண்டு, வதைப்போர் இவருடைய கால்களையும் தொடையையும் முறித்து இவரைக் கொன்று போட்டார்கள். இவ்வாறு ஒனேசிம் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்து மறைசாட்சியானார்.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய ஒனேசிமின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*1. மனமாற்றம்*

ஒனேசிமின் வாழ்க்கை வரலாற்றை ஒருகணம் நாம் வாசித்துப் பார்க்கும்போது, அவர் தான் செய்த தவற்றிற்காக தன்னுடைய தலைவரிடமிருந்து தப்பியோடி, பின்னர் தன்னுடைய தவற்றை உணர்ந்து தலைவரிடம் சென்று, மன்னிப்புக் கேட்டு, அவரிடமே பணியாற்றுகின்றார். ஓனேசிமின் இந்த மனமாற்றம் பின்னாளில் அவரை ஒரு பெரிய புனிதராக மாற்றுகின்றது. பாவம் அல்லது தவறு செய்யும் எவரும் தன்னுடைய தவற்றை உணர்ந்து மனமாறவேண்டும். அப்படி மனம்மாறுகின்றபோது அவருடைய வாழ்க்கை எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு போதிக்கின்ற முதல் போதனையே மனமாற்றம்தான். “காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது (மாற் 1:15). ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் போதனையைக் கேட்டு மனம்மாறுவதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

இந்த இடத்தில், நம்முடைய இந்திய நாட்டில் மிகப் பெரிய ஞானியை வாழ்ந்து மறைந்த சாது வாஸ்வானி அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருளுள்ளதாக இருக்கும். ஒரு சமயம் சாது வாஸ்வானி நடத்தி வந்த மீரா பள்ளிக்கூடத்திற்குள் திருடன் ஒருவன் புகுந்து அங்கிருந்த பொருள்களைத் திருடிக்கொண்டு ஓட முயன்றான். ஆனால், துரதிஸ்டவசமாக அவன் அங்கிருந்த காவலரிடம் மாட்டிக்கொள்ள, அவர் திருடனை நீதிமன்றத்தில் நிறுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி அந்தத் திருடனுக்கு கடுந்தண்டனை கொடுத்தார். இதற்கிடையில் செய்தி அறிந்த சாது வாஸ்வானி நீதிபதியிடம் சென்று, “ஐயா! அவன் திருடன் அல்ல, என் சகோதரன்தான். அவன் என்னுடைய பள்ளிக்கூடத்திலிருந்து எதையும் திருடவில்லை, அவனை விட்டுவிடுங்கள்” என்றார். மிகப் பெரிய ஞானி இவர். நிச்சயமாக இவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து, நீதிபதி அவனை விடுதலை செய்தார். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த திருடன் சாது வாஸ்வானியிடம் வந்து, “நான் செய்தது மிகப்பெரிய தவறு. அப்படியிருந்தும் என்னை மன்னித்து ஏற்றுக்கொண்டீர்களே, இனிமேலும் நான் திருடமாட்டேன், மனமாறி நல்ல மனிதனாக வாழ்வேன்” என்று சூளுரைத்து அதன்படி வாழ முயன்றான்.

மிகப்பெரிய திருடனை சாது வாஸ்வானி மன்னித்த உடன், மனம்மாறி புதிய மனிதனாக வாழ முற்பட்டான். இறைவனும் நம் பாவங்களை மன்னித்துவிட்டார். ஆகவே, நாம் மனம்மாறி புதிய மனிதனாக வாழ்வதுதான் சிறப்பானது.

ஆகவே, தூய ஒனேசிமின் விழாவை கொண்டாடும் நாம் மனம்மாறி புதிய மனிதர்களாக வாழ்வோம்.


Saturday 2 November 2019

The One Who Heals Lepers Is Amongst Us.

*✞ GOD'S WORD ✞*

*Theme of the Sunday:*
The One Who Heals Lepers Is Amongst Us. Why are we proud when we do something good? Why do we feel superior to others? We forget that we are lepers who have been healed by the word of Jesus. The gospel tells us that the first to understand this truth were those Jews considered heretics. The first reading shows us Naaman, a leper and foreigner. He is healed both in body and in spirit by his encounter with the man sent by God. The second reading gives us the example of Paul, who was aware that he had been a ‘leper’. Christ saved him and enabled him to bear everything for the sake of the gospel.
_______________________________________
*FIRST READING*       
A reading from the second Book of Kings (2 Kings 5: 14-17)
Naaman returned to the man of God and acknowledged the Lord.

In those days: Naaman the Syrian went down and dipped himself seven times in the Jordan, according to the word of Elisha the man of God; and his flesh was restored like the flesh of a little child, and he was cleansed [from his leprosy]. Then he returned to the man of God, he and all his company, and he came and stood before him; and he said, “Behold, I know that there is no God in all the earth but in Israel; so accept now a present from your servant.” But he said, “As the Lord lives, whom I serve, I will receive none.” And he urged him to take it, but he refused. Then Naaman said, “If not, I beg you, let there be given to your servant two mules’ burden of earth; for henceforth your servant will not offer burnt offering or sacrifice to any god but the Lord.”
_______________________________________
*RESPONSORIAL PSALM*  Psalm 98:1.2-3ab.3cd-4 (R. cf. 2)
*R/. The Lord has shown his deliverance to the nations.*

O sing a new song to the Lord,
for he has worked wonders.
His right hand and his holy arm
have brought salvation. *R/.*

The Lord has made known his salvation,
has shown his deliverance to the nations.
He has remembered his merciful love
and his truth for the house of Israel. *R/.*

All the ends of the earth have seen
the salvation of our God. Shout to the Lord,
all the earth; break forth into joyous song,
and sing out your praise. *R/.*
______________________________________
*SECOND READING*  
A reading from the second Letter of’ Saint Paul to Timothy (2 Timothy 2:8-13)
“If we endure, we shall also reign with Christ.”

Beloved: Remember Jesus Christ, risen from the dead, descended from David, as preached in my Gospel, the Gospel for which I am suffering and wearing chains like a criminal. But the word of God is not chained. Therefore I endure everything for the sake of tire elect, that they also may obtain the salvation which in Christ Jesus goes with eternal glory. The saying is sure: If we have died with him, we shall also live with him; if we endure, we shall also reign with him; if we deny him, he also will deny us; if we are faithless, he remains faithful — for he cannot deny himself.
_______________________________________
*ALLELUIA*
1 Thessalonians 5:18
Alleluia. Give thanks in all circumstances; for this is the will of God in Christ Jesus for you. Alleluia.
_______________________________________
*GOSPEL*         
A reading from the holy Gospel according to Luke (Luke 17:11-19)
“Was no one found to return and give praise to God except this foreigner?”

On the way to Jerusalem Jesus was passing along between Samaria and Galilee. And as he entered a village, he was met by ten lepers, who stood at a distance and lifted up their voices and said, “Jesus, Master, have mercy on us.” When he saw them he said to them, “Go and show yourselves to the priests.” And as they went they were cleansed. Then one of them, when he saw that he was healed, turned back, praising God with a loud voice; and he fell on his face at Jesus’ feet, giving him thanks. Now he was a Samaritan. Then said Jesus, “Were not ten cleansed? Where are the nine? Was no one found to return and give praise to God except this foreigner?” And he said to him, “Rise and go your way; your faith has made you well.”
_______________________________________
******************************************
                *Have a Blessed Day*
*****************************************