Sunday 29 January 2017

Whatsapp message

✍🏽கடலில் பெய்யும் மழை பயனற்றது,
✍🏽பகலி ல் எரியும் தீபம் பயனற்றது,
✍🏽வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,
✍🏽நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
✍🏽அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
✍🏽வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.
✍🏽 பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.
✍🏽 ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளவர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
✍🏽பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,
✍🏽 சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது,
✍🏽பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.
✍🏽பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
✍🏽வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது.
✍🏽அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
✍🏽சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது.
✍🏽யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,
குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்.
கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.
ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்
✍🏽எல்லாம் காரியங்களிலும் நீங்கள் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.
✍🏽வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.
✍🏽காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
✍🏽அறியாமையை விட கொடிய எதிரி இல்லை.
✍🏽கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லவே இல்லை....🌹
🙌🏾இருபது ரூவா  பிச்சைக்காரனுக்கு போட யோசிக்கிற நாம அதையே ஹோட்டல்ல சர்வருக்கு டிப்ஸா  கொடுக்குறோம்...

⌚ஜிம்முல ஒரு நாள் பூராம் ஒர்க் அவுட் பண்ண சளைக்காத நாம... வீட்ல மனைவிக்கு உதவி செய்ய சலிச்சுக்கிறோம்...

🙏🏻கடவுளை பிரார்த்திக்க ஒரு மூணு நிமிசத்தை ஒதுக்க சங்கடப்படும் நாம மூணு மணி நேரம் உட்கார்ந்து விளங்காத படத்தை பார்த்துட்டு வரோம்...

💧காதலர் தினத்துக்காக ஒரு வருசமா காத்திருக்கிற நாம அன்னையர் தினத்தை மறந்திடறோம்...

👍🏻ரோட்டோரம் உட்கார்ந்திருக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கி தர நினைக்காத நாம அதையே ஓவியமா வரைஞ்சா லட்ச ரூவா கொடுத்துக்கூட வாங்கி வீட்ல மாட்டிக்கிறோம்...


இழப்பு இருந்தால்தான் நாம் வெற்றி பெறுவோம்!!!!!

இழப்பென்பது ஓர் உந்துசக்தி..
வீட்டில் விளையாடியதை இழந்தோம்..
பள்ளிக்கூடம் சென்றோம்...
பள்ளியின் மகிழ்வுகளை இழந்தோம்..
கல்லூரியில் கால் பதித்தோம்..
கல்லூரி சொந்தங்களை இழந்தோம்.... வேலை பார்க்கும் இடமொன்று அமைந்தது..
இழப்பின் பொழுது, தேங்கி நின்று விடுவதில்லை நாம்...
அடுத்த பகுதியை நோக்கி பயணித்துவிடுகிறோம்...
இழப்பு இல்லையேல் வாழ்வதற்க்கு வாய்பே இல்லாமல் போய்விடும்!!
இழப்பை நினைத்து வருந்தாதே..
இழப்பு இருந்தால்தான் நாம் வெற்றி பெறுவோம்!!!!!


விவசாயிகளை மதிப்போம்

விவசாயிகளை மதிப்போம்

சிகரெட் 🚬🚬இல்லாமல் ஒருவரால்
வாழமுடியும்...
ஆனாலும், சிகரெட்🚬🚬 உற்பத்தியாளர்
பணக்காரராக இருக்கிறார்.

மதுவில்லாமல்🍺🍸🍷 ஒருவரால்
வாழமுடியும்...
ஆனாலும், உற்பத்தியாளர் பணக்காரராக
இருக்கிறார்.

மொபைல் 📱📞📲இல்லாமலும் ஒருவர்
வாழமுடியும்...
ஆனாலும், மொபைல்📲📞📱 உற்பத்தியாளர்
பணக்காரராக இருக்கிறார்.



உணவில்லாமல் எவரும்
வாழமுடியாது!...
ஆனாலும்,

🌽🍌🍍🍆உணவு🌾🍎🍏🍊🍋🍈
உற்பத்தியாளர்களான🐏🐄🐐🐓🐖🐂
விவசாயிகள்
ஏழைகளாகவே இருக்கின்றனர்...!

ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...                                       
🍏🍎🍐🍊🍊🍋🍌🍉🍇🍓🍈🍒🍑🍍🍅🍆🌶
     👏👏விவசாயிகளை மதிப்போம்👏👋🏻👏


மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!


சிங்கத்திடம் இருந்து #ஒன்றையும், கொக்கிடம் இருந்து #இரண்டையும், கழுதையிடம் இருந்து #மூன்றையும், கோழியிடம் இருந்து #நான்கையும், காக்கையிடம் இருந்து #ஐந்தையும், நாயிடம் இருந்து #ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

எவன் ஒருவன் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

💫சாணக்கியர்💫


Whatsapp message

மனைவிக்கு உள்ள சிறப்புகள்

💚மனைவி என்றால்
அன்பின்இன்னொரு சொல் என்றும் கொள்ளலாம்💚

💚பணிக்கு செல்லும்
மனைவிகள் எல்லாம்
குடும்பம் சுமக்கும்
அன்பு தேவதைகள்💚

💚ஆணுக்கு ஒரு பக்க
மத்தளம் என்றால்
பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க
மத்தளம்💚

💚பெண் என்கிற
கிரீடம் அழகு தான்
என்றாலும் அவளை வெளியில்
உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்💚

💚கணவர்கள் கொஞ்சம்
கை கொடுங்கள்.
உங்களுக்காக வாழ்ந்துகொண்டு
இருக்கும் அந்த அன்பு பறவையை
அரவணைத்து வைத்து
கொள்ளுங்கள்💚

💚அன்பாகப் பேசுங்கள்
சமையல் பணியை நேரம் கிடைக்கும் போதெல்லாம்
பகிர்ந்து கொள்ளுங்கள்💚

💚மனைவிக்கு கை வலியோ, உடல் வலியோ, மனசு வலியோ புரிந்து  கொள்ளுங்கள்💚

💚உங்கள் மகளை
கவனிப்பது போல் உங்கள் மனைவியையும் 
கவனித்து கொள்ளுங்கள்💚

💚உடல் மனசு இரண்டையும்
மென்மை படுத்துங்கள்💚

💚சமையலை பாராட்டுங்கள்
அவள் சமையல் அறையில்
பட்டிருக்கும் வெப்பம் தொட்ட தழும்பைப் பாருங்கள். அவை உங்களுக்காக
அவள் பட்ட அன்பின் சின்னம்.💚


💚அவள் செய்வது சமையல்
அல்ல. அன்பின் அழகு.
தினசரி நன்றி சொல்லுங்கள்.
குறுந்தகவல்களை மனைவிக்கும்
அனுப்பலாமே💚

💚அவள் குடும்பத்திற்காக
எரியும் இன்னொரு
மெழுகுவர்த்தி.
வாழ்க்கை முழுதும் கூட வரும்
அன்பு தேவதை💚

💚கடவுள் நம்முடன்
இருக்கமுடியாது என்பதற்காக
கடவுள் கொடுத்த வரம்
அன்னையும் மனைவியும்💚

💚அவள் கண்களில் கண்ணீர்
வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். பெண் கண்ணீர் விட்டால் அங்கே செல்வம் தங்காது.
புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையை நீங்களும் அழகாய் வாழலாம்
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶


வாழும் காலம் கொஞ்சமே...* *மனிதா நீ மாறிவிடு ,உன் மறு உலகத்திற்காக...*

*மரணம் ;*
வா  மனிதா . .
நீ  கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது.."

*மனிதன் ;*
"இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது?" 

*மரணம் ;*
"மன்னித்துவிடு மனிதா . .
உன்னைக் கொண்டு
செல்வதற்கான நேரம் இது.."

*மனிதன் ;*
நான் 
இரவு , பகலாக  உழைத்து  சேர்த்த   எனது  பொருளாதாரம் . .

*மரணம் ;*
"நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு ..

*மனிதன் ;*
"என்னுடைய திறமைகள். .

*மரணம் ;*
"அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்மந்தப்பட்டது..

*மனிதன் ;*
"அப்படி என்றால்
என் மனைவி,மக்கள்  மற்றும்   உற்றார்  உறவினர் . .

*மரணம் ;*
அவர்கள்   உன்   இதயத்துடன்  சம்பந்தப்பட்டவர்கள் . .

*மனிதன் ;*
எனது  உடல்?

*மரணம் ;*
"அது இந்த  மண்ணுக்கு
  சொந்தமானது

*மனிதன் ;*
கண்களில்   நீர் வழிய
"என்னுடையது என்று
எதுவும் இல்லையா?"

*மரணம்* ;
நீ வாழ்ந்த 
ஒவ்வொரு நொடி மட்டுமே
உன்னுடையது..
நீ  செய்த  தர்மம் , பிறருக்கு  நன்மை 
செய்தது  , பிறர்  துண்பத்தில்   பங்கு 
கொண்டது  ,பிறருக்கு  தீங்கு  செய்யாமல்  இருந்தது ,   போன்ற 
போன்ற  நல்ல  செயல்கள் ,
மற்றும்  நீ  செய்த  பாவ  கருமங்கள்..
இவை  மட்டுமே  உன்னுடையது . .

மற்ற   எதையும்   இறுதிக் காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது..

*வாழும்  காலம்  கொஞ்சமே...*
*மனிதா  நீ  மாறிவிடு ,உன்  மறு  உலகத்திற்காக...*


Saturday 28 January 2017

How to know GOD

A young man working in the army was constantly humiliated because he was black and he believed in God. One day the Captain decided to humiliate him more before the troops, he called the young man and said; 'Young man, take the key and park the Jeep aside' the young man replied; 'Sir, I don't know how to drive so I can't park the Jeep! The Captain said; 'Then ask for assistance from your God, show us that He Exists!

The young man cried, took the key and went to the vehicle praying to God all the way.... As a result, he parked the car PERFECTLY well as the Captain wanted. The young man came out of the car thanking his God and to his surprise he saw all the troops crying, they all said together; 'We want to serve your God'! The young soldier was astonished, he wanted to know what was going on. Captain was crying too and he opened the hood of the Jeep showing the young man that the car had no engine

The young soldier said; See? This is the God I serve, the God who gives life to what does not exist. You may think there are things that are still impossible but THE GOD OF POSSIBILITIES WILL BE YOUR


Thursday 26 January 2017

Nougat update starts hitting Motorola Moto Z Play


26 JANUARY 2017
As scheduled, Motorola has started pushing out the Nougat update to the Moto Z Play smartphone. Arriving as firmware version NPN25.137-15-2 and currently hitting units in Europe, the update brings Android OS version 7.0.
As is usually the case with OTA roll outs, it may take some time for the update to hit your device. Meanwhile, if you feel impatient, you can manually check for the update by heading to your handset's Settings menu.
For Moto Z Play owners in the US, the update will start rolling out in March.
Via

Galaxy S7 and S7 edge get Nougat in India, Samsung Pay teased


26 JANUARY 2017
Samsung has just launched the Android 7.0 Nougat updates the Galaxy S7 and S7 edge in India. The company has begun a global rollout recently and India is the next market to get the latest and greatest from Google.
The OTA firmware for both devices is quite hefty at about 1.3GB and includes the latest Android, as well as improvements to TouchWiz, Always-On-Display, and security .
There is one more surprise for the Samsung fans in India - Samsung Pay app comes as part of the Nougat update. There is an official teaser included, which says "The future of payments is coming soon!". This could only mean Samsung is getting ready to expand the Samsung Pay service to India soon.
So, if you live in India and own a Galaxy S7 smartphone - the Nougat update should be waiting for you. And in the upcoming weeks or months you will be able to use Samsung Pay.

Saturday 21 January 2017

Whatsapp message

ஒரு பெண்மணிக்கு மும்பையில் வேலை கிடைத்தது பெண்மணியும் தனியாக சென்று வேலையில் சேர்ந்தாள். அவளுக்கு தங்குவகற்கு வசதியான வீடும் கொடுத்தார்கள். அவள் இந்த விபரத்தை தன் கணவணுக்கு தெரிவிப்பதற்காக மொபைல் மூலம் SMS feed செய்து அனுப்பினாள். SMS தவறுதலாக கணவணுக்கு பதில் வேறொறு நபருக்கு சென்று விட்டது.  அந்த மணிதர் அப்பொழுது தான் தண் இறந்து போன மணைவிக்கு இறுதி மரியாதைகளை செய்து விட்டு வந்தார். அவர் அந்த SMS ஐ படித்து விட்டு  மயங்கி விழுந்தார். அவரை அருகிலுள்ளHOSPITALல் ADMIT செய்தனர். அந்த SMSல் கீழே உள்ளபடி எழுதி இருந்து.
...................... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . நான் இங்கு நல்ல படியாக வந்து சேர்ந்தேன். தங்குவதற்கு வசதியான இடமும் கிடைத்துள்ளது. நீங்கள் எண்ணை பற்றி கவலை பட வேண்டாம். முடிந்தால் இரண்டொரு நாட்களில் உங்களையும் அழைத்து கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் மணைவி


Whatsapp message

😀ஜோக்.. 😜ஜோக்..

😀ஜோக்.. 😜ஜோக்..

1) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?
"நாய்கிட்டதான் கேக்கணும் "
"அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!"😋😋

2) "எறும்பு நினைச்சா யார் காதையும் கடிக்கலாம்"
"யார் நினைச்சாலும் "எறும்பு காதைக் கடிக்க முடியுமா?😀😄

3) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.
"அப்புறம்"
அப்புறம் என்ன........
காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!😊😊

4) "சார், என்ன இது ?"
"கொஸ்டீன் பேப்பர்"
"சார், இது என்ன?"
"ஆன்சர் பேப்பர்"
"என்ன ஒரு அக்கிரமம் சார்,
கொஸ்டீசன் பேப்பர்லே கொஸ்டீன் இருக்கு,
ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!😃😄

5) "எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?"
"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"😪😰

6)""என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"
"கொஸ்டீன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!"😊🙃

7) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க"
"அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே .... எப்படி கிழிப்பே ?"😅😂

8) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"
"ஏன் கேக்கறே"
"திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"😄😄


Thursday 19 January 2017

Jallikattu ban: ‘Expect action soon’, says CM


Amid widespread protests by students and activists against the ban on jallikattu, Chief Minister O. Panneerselvam on Thursday said the State and the Central governments would soon take steps to ensure that it is conducted.
Talking to reporters after meeting Prime Minister Narendra Modi in New Delhi, Mr. Panneerselvam said Mr. Modi patiently listened to the demands raised by him. “He [Prime Minister] said the Supreme Court’s judgment on Centre’s notification was being awaited and the Centre would be supportive of the action that would be taken by the State government on the issue,” Mr. Panneerselvam said.
“I would like to say that along with the Centre, we [Tamil Nadu government] would immediately take steps to ensure jallikattu is conducted. You will soon see the action of the State government,” he added.

Drought relief

Besides jallikattu, the Chief Minister also reiterated the State government’s request for sanctioning funds to the tune of Rs. 39,565 crore towards drought relief for all 32 districts of the State.
Replying to a query on reports of police action on activists and students, Mr. Panneerselvam said there were no such incidents.

Wednesday 18 January 2017

Whatsapp message

விமான பைலட் யாரென்று தெரியாவிட்டாலும் கூட நீ *கவலையின்றி பயணிக்கிறாய்,*

அவ்வாறே கப்பலின் மாலுமி இன்னாரென்று அறியாதிருந்தும்.
*நீ அச்சமின்றி பயணிக்கிறாய்.*

அப்படியே இரயிலையும் பேருந்தையும் முன்பின் தெரியாத ஒருவர் இயக்கினாலும் நீ *நிம்மதியாய் #உறங்குகிறாய்.*

*ஏனோ உன்னைப் படைத்தவன்*
*உன்னோடிருந்தும்,*
எல்லாவற்றுக்காகவும் கவலைப்பட்டு கலங்குகிறாய்?


Whatsapp message

*முக நூலில் மனதை நெகிழ்ச்சியுற செய்த கவிதை வரிகள்...*
*# ஆசிரியர்கள் நிலைமை #*

கரும்பலகையில்
கைபதித்து...
சுண்ணாம்புத்தூளை
தினம்
சுவாசித்து...

கற்றுக்கொடுத்து
கற்றுக்கொடுத்து
காற்றை இழந்த
ஆசிரியர்
இதயத்தில்
இன்னும்
இருக்கிறது வலி...

மாணவன்
மண்ணாகிப்போவானோ
என்றெண்ணி
கண்டித்த ஆசிரியரை
தண்டித்த சமூகம்...

வழி காட்டிய
மனிதனுக்கு
வலி ஊட்டிய
சமூகம்...

ஆசிரியர்கள்
ஏணிப்படிகள்
என்பதால்தான்
என்னவோ
எல்லோரும்
ஏறி மிதிப்பார்கள் போலும்...

மரியாதைக்குரிய
ஆசிரியரை
அவமரியாதைக்கு
ஆளாக்கும்
ஆணவ சமூகம்...

காக்க வேண்டிய
கடவுளை
தாக்க வேண்டிய
அவசியம்
எப்படி வந்தது?

கத்தி கத்தி
கற்பித்த குற்றத்திற்கு
கத்திக்குத்துதான்
பரிசா?

மாணவனை
மகனாகப் பார்க்கும்
ஆசிரியரை
எதிர்வினையாக்கி
எதிர்த்துப்பேசும்
சமூகம்.

சிற்பி
கல்லை
காயப்படுத்துவதாய்
கருதி
சிற்பியை காயப்படுத்தினால்
சிலை எப்படி
கிடைக்கும்.

மாணவனை
செதுக்க நினைக்கும்
ஆசிரியரை
தண்டித்தால்
நல்ல
சமூதாயம்
எப்படி கிடைக்கும்?

காலையில்
பள்ளிக்கு ஆசிரியராய்
சென்று
மாலையில்
வீட்டிற்கு
அப்பாவாய்
அம்மாவாய்...
திரும்புவதே
சவாலானதே!

பள்ளியில்
மாணவனை
திட்டிவிட்டு
படுக்கையில்
உறங்காமல்
கிடப்பவனே
இன்றைய ஆசிரியன்...

ஒருபுறம்
தேர்ச்சிக்கான நெருக்கடி
மறுபுறம்
ஒத்துழைக்க மறுக்கும்
மாணவனின் தேள்கடி...
நடுவில்
காயம்பட்ட ஆசிரியன்...

ஆனால்...

*ஆசிரிய நண்பரே !!!*

*ஆண்டிற்கு*
*ஒரு தினம்*
*அது*
*ஆசிரியர் தினம்...*

*_அன்று_* மட்டும்
வாழ்த்துக்கள்
வந்து வந்து
குவியும்...

*_இன்று_*  மட்டுமே
போற்றப்படுவோம்
*_இனி எப்போதும்_*
தூற்றப்படுவோம்...

*_இன்று_*
அறப்பணி
அர்ப்பணி
என்பார்கள்...
*_நாளை_*   நம்மை
பலியிட
அர்ப்பணிப்பார்கள்...

*இன்று*
*சமூக சிற்பி*
என்பார்...
*நாளை*
*சமூக எதிரி* என்பார்...

*இருந்தாலும்*
*இறந்தாலும்*
*ஆசிரியராய் இருப்போம்...*

*_கற்பித்தலை_*
*_கடமை யோடு_*
*_செய்யும்..._*

*கல்விக்கடவுளாய்*
*எப்போதும்...*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻📙📗📒📙📗📒📙📗📒


Whatsapp message

*கன்னியாகுமரி* எனறால் என்ன நினைத்தீர்கள்...???

உலகத்திற்கு *முதல் உயிரையும்*
*பண்பாட்டையும்* வழங்கிய ஊர்!

*அடங்க மறுத்த* ஊர்!

*அடக்கி ஆண்ட சீமை*

அன்னியனை *அடித்து விரட்டிய* ஊர்!

*வீரம்* விளைந்த ஊர்!

வெள்ளையனை *விரட்டி அடித்த* ஊர்!

*அன்பால்* உருவான ஊர்!

அண்ணன் தங்கை பாசத்தில் *சிவந்த* ஊர்!

*பாசத்தை* பங்கு வைத்த ஊர்!

பகைவனையும் *பாசத்துடன்* பார்க்கும் ஊர்!

*ஆட்டுகறிக்கு* அடித்து
கொண்டும், *கோழிக்கறிக்கு* கூடிக்கொள்ளும் ஊர்!

*மாணவர் இயக்கம்*
விதைத்த ஊர்!

*எமனே* வந்தாலும், எதிர்த்து நிற்கும் ஊர்!

தமிழகத்தில் *படித்த மக்கள் அதிகம்* நிறைந்த ஊர்!

எங்கள் ஊர் *பாலாப்பழம்* தித்திக்கும்!

*மஞ்சள் சட்டை மாஸ் காட்டும்*

தாய் மாமன் *சீர்* தகதகக்கும்!

எல்லாவகையான *வாழைப்பழங்களும்* விளையும் பூமி!

மருத்துவ குணம் கொண்ட *மட்டிப்பழம்* விளையும் புண்ணிய பூமி!

*நேந்திரம் பழம் சிப்ஸ்* க்கு நாகர்கோவில்.

மும்பையில் *மெட்ராஸ்காரன்* எனறால் பயப்படுவான்,
அந்த மெட்ராஸ்லயே *நாகர்கோயில்காரன்* எனறால் பின்னங்கால் பிடறியில் அடிக்க தெறிச்சு ஓடுவான்.

தாகத்துக்கு *கல்லக்குளி*

அருவிக்கு *திற்ப்பறப்பு*

அணைக்கு
*பெருஞ்சாணி*

தமிழுக்கு
*சித்தர் மலை*

*கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள்* நிறைந்த மாவட்டம்.

*மாத்தூர் தொட்டிபாலம்*

பட்டுக்கு *இளம்பிள்ளை*

ரப்பருக்கு
*குலசேகரம்*

செங்கல்லுக்கு *சித்திரக்கொடு*

வம்புக்கு *வேர்க்கிளம்பி*

தென்றலுக்கு *களியக்காவிளை*

பிரியாணிக்கு *பல்வேறு ஹோட்டல்*

அழகுக்கு *வேம்படித்தாளம், குமரி கடற்க்கரை*

பார்த்து ரசிக்க *பத்மனாதபுரம் கோட்டை, காளிகேசம், கீறிப்பாறை*

வணிகத்திற்க்கு *கோட்டார்*

அடாவடிக்கு *மணலிக்கறை"*

கெத்துக்கு *நாகர்கோவில்*

பறவைக்கு *புறா*

அழகிற்கு *அழகிய மண்டபம்*

சிங்காரத்துக்கு
*தக்கலை*

திமிருக்கு *நாங்கள்*

அன்பா பேசுனா *கேன்டீன் டீ*

வம்பா பேசுனா *அருவா தான்டீ*

இதுதாங்க எங்கள் *கன்னியாகுமரி ஜில்லா..!*

*இங்கே நாங்க தான் பில்லா*


Sunday 15 January 2017

Whatsapp message

#தடை அதை உடை. புது சரித்திரம் படை...
#ஜல்லிக்கட்டு

1922 வாக்கில் இந்திய ரூபாய் மதிப்ப 1அமெரிக்க டாலர்=1 இந்திய ரூபாய்.

இதற்க்கு பசு மாடு வளர்ப்பு மிகப்பெரும் காரணம் என்றால் நம்ப முடியுமா, நம்பித்தான் ஆகவேண்டும்.

2 பசு மாடு வளர்ப்பு மாதம் ரூ35000 கிடைக்கும் என்ற பதிவு பார்த்திருப்பீர்கள்.

அது மட்டுமா பசுவின் பாலில் இருந்து தயிர், நெய்,வெண்ணெய் போன்ற உணவு பொருட்களும்,
பசுவின் சாணம் எருவாட்டியாக அடுப்பெரிக்க உதவியதும்,
அந்த சாம்பல் கொண்டு பல் துலக்கியதும்,
திருநீர் செய்யபயன்படுத்தப்பட்டதும்,
சாணம், தயிர், கோமேயம் இன்னபிற பொருட்களை கொண்டு பஞகவ்யம் எனும் உரம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்ப்ட்டது.

மேலும் கோமேயம் பூச்சி,புழு விரட்டியாக கூட உபயாகப்பட்டுள்ளது.

சரி இது அனைத்திற்க்கும் இந்திய ரூபாய் மதிப்பிற்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றால்...

காலையில் பல்விளக்க பேஸ்ட்,அடுப்பெரிக்க அரபு நாட்டு பெட்ரோலிய பொருள்கள்,
கிருமி நாசினி டெட்டால்,
விவசாய உணவு உற்பத்திக்கு உரங்கள்,
உழவு செய்ய டிராக்டர்கள்,
அதற்காக பெட்ரோலிய பொருட்கள்,
விவசாய பண்ணை தொழிலுக்கு தேவையான பலவற்றை இறக்குமதி செய்யப்பட்டதன் விளைவு ருபாய் மதிப்பு குறைந்து கொண்டே வர ஆரம்பித்தது

மேற்சொன்னபடி பசு வளர்ப்பில் கிடைத்த பொருட்கள் உபயோகிக்கப்பட்டதால் அன்று ரூபாய் மதிப்பு குறையாமல் இருந்து இருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் உழவு மாடு உபயோகம் ஒரு மாபெரும் வரப்பிரசாதம்,நிலம் உழுதிட,
விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல,
மக்கள் வாகனப் பயன்பாட்டிற்க்கு என பலவகையில் உபயோகிக்கப்பட்டு உள்ளது.

இவை அனைத்தும் ரூபாய் மதிப்பு குறையாதிருக்க மறைமுக காரணங்களாக இருந்து இருக்கும்.

இப்போது ஜல்லிக்கட்டு தடையின் மாபெரும் உள்நோக்கத்தை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சற்று சிந்தித்துக் கொண்டே
பசுவதை எதிர்ப்புக்கும் ஆதரவு குரல் கொடுக்க சிந்திக்கலாம்.
நாட்டு மாடு வகைகள்:
1.அத்தக்கருப்பன்
2. அழுக்குமறையன்
3.அணறிகாலன்
4. ஆளைவெறிச்சான்
5. ஆனைச்சொறியன்
6. கட்டைக்காளை
7. கருமறையான்
8. கட்டைக்காரி
9. கட்டுக்கொம்பன்
10. கட்டைவால் கூளை
11. கருமறைக்காளை
12. கண்ணன் மயிலை
13. கத்திக்கொம்பன்
14. கள்ளக்காடன்
15. கள்ளக்காளை
16. கட்டைக்கொம்பன்
17. கருங்கூழை
18. கழற்வாய்வெறியன்
19. கழற்சிக்கண்ணன்
20. கருப்பன்
21. காரிக்காளை
22. காற்சிலம்பன்
23. காராம்பசு
24. குட்டைசெவியன்
25. குண்டுக்கண்ணன்
26. குட்டைநரம்பன்
27. குத்துக்குளம்பன்
28. குட்டை செவியன்
29. குள்ளச்சிவப்பன்
30. கூழைவாலன்
31. கூடுகொம்பன்
32. கூழைசிவலை
33. கொட்டைப்பாக்கன்
34. கொண்டைத்தலையன்
35. ஏரிச்சுழியன்
36. ஏறுவாலன்
37. நாரைக்கழுத்தன்
38. நெட்டைக்கொம்பன்
39. நெட்டைக்காலன்
40. படப்பு பிடுங்கி
41. படலைக் கொம்பன்
42. பட்டிக்காளை
43. பனங்காய் மயிலை
44. பசுங்கழுத்தான்
45. பால்வெள்ளை
46. பொட்டைக்கண்ணன்
47. பொங்குவாயன்
48. போருக்காளை
49. மட்டைக் கொலம்பன்
50. மஞ்சள் வாலன்
51. மறைச்சிவலை
52. மஞ்சலி வாலன்
53. மஞ்ச மயிலை
54. மயிலை
55. மேகவண்ணன்
56. முறிகொம்பன்
57. முட்டிக்காலன்
58. முரிகாளை
59. சங்குவண்ணன்
60. செம்மறைக்காளை
61. செவலை எருது
62. செம்ம(ப)றையன்
63. செந்தாழைவயிரன்
64. சொறியன்
65. தளப்பன்
66. தல்லயன் காளை
67. தறிகொம்பன்
68. துடைசேர்கூழை
69. தூங்கச்செழியன்
70. வட்டப்புல்லை
71. வட்டச்செவியன்
72. வளைக்கொம்பன்
73. வள்ளிக் கொம்பன்
74. வர்ணக்காளை
75. வட்டக்கரியன்
76. வெள்ளைக்காளை
77. வெள்ளைக்குடும்பன்
78. வெள்ளைக்கண்ணன்
79. வெள்ளைப்போரான்
80. மயிலைக்காளை
81. வெள்ளை
82. கழுத்திகாபிள்ளை
83. கருக்காமயிலை
84. பணங்காரி
85. சந்தனப்பிள்ளை
86. சர்ச்சி
87. சிந்துமாடு
88. செம்பூத்துக்காரி
89. செவலமாடு
90. நாட்டுமாடு
91. எருமைமாடு
92. காரிமாடு