Friday 24 November 2017

Whatsapp message

ஒரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன.

எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்தினான்.

அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் கொல்ல முடிவு செய்து அந்த 🐕🐕🐕🐕🐕 நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.

மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார்.

"பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை... தண்டனையை நிறைவேற்றும் முன்  எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள் அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!"

சற்றே யோசித்த அரசன், 'பத்து நாட்கள்தானே... சரி'யென்று அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.

அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார்.

முதலில் அவற்றுக்கு உணவு கொடுத்து, பிறகு அவற்றுடன் விளையாடி, குளிப்பாட்டி நாய்களுடனேயே சந்தோசமாய் இருக்க ஆரம்பித்தார்.

பத்து நாட்கள் முடிந்தது.

அரசன் சொன்னபடி தனது தண்டனையை நிறைவேற்றத் தயாரானான்.

சேவகர்களை அழைத்து, மந்திரியைத் தூக்கி நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் எறிந்த அரசன், கண்ட காட்சியில் உறைந்து போனான்.

அவன் நம்பிய அந்த கொடூர நாய்கள் எல்லாம் இப்போது அந்த மந்திரியின் முன்னால் வாலை ஆட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தன.

"இது எப்படி சாத்தியம்.?"

அதிர்ந்து நின்ற அரசன் கேட்டதும் புன்னகையுடன் மந்திரி கேட்டார்.

"அரசே... கடந்த பத்து நாட்களும் நான் இந்த நாய்களுடன் தான் இருந்தேன். நான் வெறும் பத்து நாட்கள் செய்த சேவையை மறக்காமல் இந்த நாய்கள் இவ்வளவு அன்பைச் செலுத்தும்போது, பத்து வருடங்கள் உங்களுக்கு செய்த சேவையை மறந்து ஒரு சிறு தவறுக்காக என்னைக் கொல்ல நினைக்கிறீர்களே... இது நியாயமா.?"

மந்திரி கேட்டதும் அரசனுக்குத் தன் தவறு புரிந்தது.

வருத்தத்துடன் தனது சேவகர்களைப் பார்த்துத் திரும்பிய அரசன்,
இந்த முறை மந்திரியை முதலைகள் 🐊🐊🐊🐊🐊 இருக்கும் குளத்தில் எறியச் சொன்னான்.

.

நீதி:

நிர்வாகம் உன்னைத் தூக்கணும்னு முடிவு பண்ணா...
அதுல  மாற்றமே இருக்காது 🤷‍♂

😂😂😆😂😂

கதை உங்களுக்கு புரியுதா???


Tuesday 21 November 2017

Whatsapp message

தெரிந்து மிதித்தாலும்........ தெரியாமல் மிதித்தாலும்....... மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.



நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை................
அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட ........................சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!




'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. ............
உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை...........




நோய் வரும் வரை உண்பவன்............உடல் நலமாகும் வரை....... உண்ணாதிருக்க வேண்டி வரும்!




பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ...............
ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..............!




பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?..
செலவு செய்யுங்க..........!

உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?..
கடன் கேளுங்க..............!





பிச்சை போடுவது கூட சுயநலமே............... புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...






அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...................ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.






வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.. ................
அதற்கு அவமானம் தெரியாது...............
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்.............!!






வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".

வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
 





திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்............................
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.................!!
 





முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்,....................
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.............
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
  





மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே...........................என்ற ஒரு காரணத்திற்காகவே...................... நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன..
  





நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
   





இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட.................... வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!






பகலில் தூக்கம் வந்தால்.................உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்.............!!
இரவு தூக்கம் வரலைனா..................... மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!





துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது.............
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..
  

  

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள.................... அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும்............................ எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது............


நட்புடன்
நான்.


Tuesday 14 November 2017

Whatsapp message

ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.

கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள்,
அழகான நதிகள்,
மரங்கள்,
எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று
அந்த அற்புத உலகம் மயக்கியது.
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு
அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன? அவரிடம் குருவி வழி கேட்டது.

“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,

அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி,
“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது. பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது. பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள். குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.
வந்து விட்டோம்.....
வந்தே விட்டோம்......
இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால்,
இதென்ன....
ஏன் என்னால் பறக்க முடியவில்லை.
ஐயோ,
என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே டியவில்லையே என்று கதறியது. மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.
“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
குடும்பத்துடன் வெளியே செல்வது,
பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,
பிடித்த புத்தகம் படிப்பது,
பிடித்த உடை உடுத்துவது,
பிடித்த உணவு உண்பது
என்று
எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.
ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."
"இந்த நிமிடம் மட்டுமே இறைவன் நமக்கருளியது".

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
.


Whatsapp message

😃😃😃😃

It was a practical session in the psychology class.

The professor showed a large cage with a male rat in it.

The rat was in the middle of the cage.

Then, the professor kept a piece of cake on one side and kept a female rat on the other side.

The male rat ran towards the cake and ate it.

Then, the professor changed the cake and replaced it with some bread.

The male rat ran towards the bread.

This experiment went on with the professor changing the food every time.

And, every time, the male rat ran towards the food item and never towards the female rat.

Professor said: This experiment shows that food is the greatest strength and attraction.

Then, one of the students from the back rows said:

"Sir, why don't you change the female rat?This one may be his wife!"

😀😛😜😂😂😂😂

The professor stood straight up his finger pointing towards the student and said "You are a Damn Genius" 😂😂😂


Sunday 12 November 2017

Whatsapp message

தன்னம்பிக்கை கதை

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.

மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.

“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.

உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.

அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.

உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.

“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.

அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.

அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.

அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.

“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”

மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.

இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.

நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.

நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்


Whatsapp message

*பணம் படுத்தற பாடு இருக்கே*
💸💳💰💵💶💴💰💳💸
● நான் உன்னுடன் இருந்தால் நீ *செல்வந்தன்*.
● நான் உன்னை விட்டுப் பிரிந்தால் நீ *ஏழை*.
● என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ *கொடையாளி.*
● என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ *கடனாளி.*
● என்னை செலவு செய்தால் நீ *ஊதாரி.*
● என்னை சேமித்து வைத்தால் நீ *கஞ்சன்.*
● என்மேல் அதிகப் பற்றுடன் வாழ்ந்தால் நீ *பேராசைக்காரன்.*
● என்மேல் பற்றற்று வாழ்ந்தால் நீ *சன்யாசி.*
● உன் தேவைக்கு நீ என்னை படைத்தாய்.
● இன்று உனது தேவை நானாக மட்டும் தான் இருக்கிறேன்.
● *உன் நடத்தையை விட, நான் இருக்கும் இடத்தை வைத்துதான் உன் மதிப்பு நிர்னயிக்கப்படுகிறது.*

இப்படிக்கு.
நான் தான்
*"பணம்"*


Monday 6 November 2017

Whatsapp message

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப்
புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன்
நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது.
நரிக்கு ஏக குஷி…

“நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய
எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு
யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப்
படியாகும்!’ என்று ஊளையிட்டது.

கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப்
படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை
என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது.
தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை.

மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின்
நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது.”ஆஹா… பசியால்
நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்…’ சிறுத்து விட்டோம்
என்று வருந்தியது நரி.

இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ,
கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹூம்,
பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல்
நரிக்குப் பின்பாக விழுந்தது… அதனால், நரிக்குத் தன் நிழலே
தெரிய வில்லை…”ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம்.
நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது… ஒரு வேளை இறந்து
போய் விட்டோமோ?’ என்று பயந்தது.

பிறகு, “சீச்சி… நாம் உயிரோடு தான் இருக்கிறோம். இந்தப் பசிக்கு
ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும்..”‘
என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது.

இந்த நரியின் கற்பனை மாதிரி தான்… சிலர் தங்களை வெகு
பிரமாதமாக எண்ணிக் கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ
தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு
அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி
வாடுகின்றனர்.

காலை நரிபோல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம்; மாலை
நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம். இயல்பாக இருப்போம்,
ஒரு குழந்தையின் மனதுடன் வாழ்வோம், வாழ்வைக் கொண்டாடுவோம்.


Whatsapp message

படித்ததில் பிடித்தது நீங்களும் படித்துப் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.

ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான்.

அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான்.

அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி,

''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்!

''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான்.

அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார்.

சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான்.

இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள்.... முதலாளியிடம்,

"அய்யா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே...." என்றான்.

அதற்கு அந்த முதலாளி,

''அந்த சிறுவனுக்கு, 'பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்' என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை.

நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் 'பணம்தான் உயர்ந்தது' என்ற மாற்றம் வந்து விடும்... அதை தடுத்து விட்டேன்.

மேலும், 'தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர முடியும்' என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன்.

என்றோ ஒரு நாள்... அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில், 'இந்த உலகம் நல்லவர்களால் ஆனது!' என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும்.

ஆகையால், அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டும்'' என்றார்!
"அன்பு" என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறது...
..


Whatsapp message

ரொம்ப யோசிக்காம உடனே பதில் சொல்லுங்க..
...
...
...
...
கேள்வி :1
நீங்கள் ஒரு பைக் ரேசில் இருக்கீங்க..
ரொம்ப கஷ்டப்பட்டு 2வது இடத்தில இருக்கிறவரை முந்துறீங்க...
இப்போ உங்க இடம் என்ன?
...
...
...
....
முதல் இடம்ன்னு சொன்னீங்கன்னா..
நீங்க தப்புங்க..
2வது ஆள முந்தினா நாம 2 வது இடத்துக்குத்தான் வருவோம்...
...
...
....
...
ஓகே..
தெளிவாய்ட்டீங்களா.
...
...
...
இப்போ அதே ரேசுல நீங்க கடைசியா வருகிறவரை முந்துறீங்கன்னு வச்சுக்கலாம் ..
இப்போ உங்க  இடம் என்ன..
டக்குன்னு சொல்லுங்க..
...
...

...
...

....

கடைசில இருந்து 2வது இடம்னு சொன்னா...
நீங்க சரியா யோசிக்கலைன்னு அர்த்தம்..
கடைசியா வருபவரை எப்புடீங்க ஓவர்டேக் பண்ணுவீங்க..
....
போங்க.. இல்லாத மூளைய குழப்பிக்காம சந்தோசமா போய் தூங்குங்க..


ரொம்ப யோசிக்காம உடனே பதில் சொல்லுங்க..
...
...
...
...
கேள்வி :1
நீங்கள் ஒரு பைக் ரேசில் இருக்கீங்க..
ரொம்ப கஷ்டப்பட்டு 2வது இடத்தில இருக்கிறவரை முந்துறீங்க...
இப்போ உங்க இடம் என்ன?
...
...
...
....
முதல் இடம்ன்னு சொன்னீங்கன்னா..
நீங்க தப்புங்க..
2வது ஆள முந்தினா நாம 2 வது இடத்துக்குத்தான் வருவோம்...
...
...
....
...
ஓகே..
தெளிவாய்ட்டீங்களா.
...
...
...
இப்போ அதே ரேசுல நீங்க கடைசியா வருகிறவரை முந்துறீங்கன்னு வச்சுக்கலாம் ..
இப்போ உங்க  இடம் என்ன..
டக்குன்னு சொல்லுங்க..
...
...

...
...

....

கடைசில இருந்து 2வது இடம்னு சொன்னா...
நீங்க சரியா யோசிக்கலைன்னு அர்த்தம்..
கடைசியா வருபவரை எப்புடீங்க ஓவர்டேக் பண்ணுவீங்க..
....
போங்க.. இல்லாத மூளைய குழப்பிக்காம சந்தோசமா போய் தூங்குங்க..


Whatsapp message

உலகில் நாம் விரும்பும் அத்தனையும் இருமுறைதான் அழகாய் தெரியும் ஒன்று அதை நாம் அடைவதற்க்கு முன்பு இரண்டு.அதை நாம் இழந்ததுக்கு பின்பு.