Wednesday 31 July 2019

God will visit you, and bring you up out of this land

 A reading from the Book of Genesis (Genesis 49:29-33; 50: 15-26a)
“God will visit you, and bring you up out of this land.”

In those days: Jacob charged his sons, and said to them, “I am to be gathered to my people; bury me with my fathers in the cave that is in the field of Ephron the Hittite, in the cave that is in the field at Machpelah, to the east of Mamre, in the land of Canaan, which Abraham bought with the field from Ephron the Hittite to possess as a burying place. There they buried Abraham and Sarah his wife; there they buried Isaac and Rebekah his wife; and there I buried Leah — the field and the cave that is in it were purchased from the Hittites.” When Jacob finished charging his sons, he drew up his feet into the bed, and breathed his last, and was gathered to his people. When Joseph’s brothers saw that their father was dead, they said, “It may be that Joseph will hate us and pay us back for all the evil which we did to him.” So they sent a message to Joseph, saying, “Your father gave this command before he died, ‘Say to Joseph, Forgive, I pray you, the transgression of your brothers and their sin, because they did evil to you.’ And now, we beg you, forgive the transgression of the servants of the God of your father.” Joseph wept when they spoke to him. His brothers also came and fell down before him, and said, “Behold, we are your servants.” But Joseph said to them, “Fear not, for am I in the place of God? As for you, you meant evil against me; but God meant it for good, to bring it about that many people should be kept alive, as they are today. So do not fear; I will provide for you and your little ones.” Then he reassured them and comforted them. So Joseph dwelt in Egypt, he and his father’s house; and Joseph lived a hundred and ten years. And Joseph saw Ephraim’s children of the third generation; the children also of Machir the son of Manasseh were born upon Joseph’s knees. And Joseph said to his brothers, “I am about to die; but God will visit you, and bring you up out of this land to the land which he swore to Abraham, to Isaac, and to Jacob.” Then Joseph took an oath of the sons of Israel, saying, “God will visit you, and you shall carry up my bones from here.” So Joseph died, being a hundred and ten years old.
_______________________________________
*RESPONSORIAL PSALM*      Ps  105:1-2.3-4.6-7 (R. see Psalm 69:33)
*R. You who are poor, seek God, and your hearts will revive.*

Give thanks to the Lord; proclaim his name.
Make known his deeds among the peoples.
O sing to him, sing his praise;
tell all his wonderful works! *R.*

Glory in his holy name;
let the hearts that seek the Lord rejoice.
Turn to the Lord and his strength;
constantly seek his face. *R.*

O children of Abraham, his servant,
O descendants of the Jacob he chose,
he, the Lord, is Our God;
his judgements are in all the earth. *R.*
______________________________________
*ALLELUIA*
1 Peter 4:14
Alleluia. If you are reproached for the name of Christ, you are blessed, because the Spirit of God rests upon you. Alleluia.
______________________________________
*GOSPEL*         
A reading from the holy Gospel according to Matthew (Matthew 10:24-33)
“Do not fear those who kill the body.”

At that time: Jesus said to his apostles, “A disciple is not above his teacher, nor a servant above his master; it is enough for the disciple to be like his teacher, and the servant like his master. If they have called the master of the house Beelzebul, how much more will they malign those of his household. So have no fear of them; for nothing is covered that will not be revealed, or hidden that will not be known. What I tell you in the dark, utter in the light; and what you hear whispered, proclaim upon the housetops. And do not fear those who kill the body but cannot kill the soul; rather fear him who can destroy both soul and body in hell. Are not two sparrows sold for a penny? And not one of them will fall to the ground without your Father’s will. But even the hairs of your head are all numbered. Fear not, therefore; you are of more value than many sparrows. So every one who acknowledges me before men, I also will acknowledge before my Father who is in heaven; but whoever denies me before men, I also will deny before my Father who is in heaven.
*Today’s Reflection*

There will always be something to be afraid of in life. What are you afraid of? Courage does not annihilate fear. It goes ahead and does the needful despite fear. Perhaps, because of fear, someone is about to be discouraged from achieving a feat today. It is interesting to know that not all that is faced in life can be changed. But nothing can be changed until it is faced. Jesus did not hide this fact from his disciples. There are forces, no doubt, to cause us to fear in our spiritual warfare, but Christ has conquered. Therefore, feel the fear, go ahead, face life, and do what needs to be done.

மனதார மன்னிப்போம்

*தொடக்க நூல் 49: 29-32; 50: 15-26*

*மனதார மன்னிப்போம்*

*நிகழ்வு*

ஒரு சமயம் திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்  வத்திகானில் உள்ள தனது இல்லத்தின் பால்கனியிலிருந்து மக்கட்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவரைக் கொல்வதற்காக மக்களோடு மக்களாக வந்திருந்த கயவன் ஒருவன் தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியால் திருத்தந்தை அவர்களைக் குறிபார்த்துச் சுடத் தொடங்கினான். ஆனால், அவன் வைத்த குறி கொஞ்சம் பிசகிவிட திருத்தந்தை எப்படியோ அதிலிருந்து தப்பித்தார்.

இதைத் தொடர்ந்து திருத்தந்தையைக் காவல் காத்துக்கொண்டிருந்த காவலாளிகள், திருத்தந்தையைச் சுடமுயன்ற அந்தக் கயவனை ஓடிச்சென்று பிடித்தார்கள். பின்னர் அவனைச் சிறையில் அடைத்துக் காவல்காத்து வந்தார்கள். இரண்டு மூன்று நாட்கள் கழித்து திருத்தந்தை அவர்கள் தன்னைக் கொல்ல முயன்றவனைப் பார்க்கச் சென்றார். அவனோ திருத்தந்தையின் காலில் விழுந்து, தன்னை மனதார மன்னிக்குமாறு கேட்டான். திருத்தந்தையும் அவனை மனதார மன்னித்தார்.

பின்னர் அவர் அவனிடம் சிரித்துக்கொண்டே, “நீ நான் இறையாசி வழங்கிய கூட்டத்தில் ஒருவனாக இருந்ததால்தான் உன்னால் என்னைக் குறிபார்த்துச் சுட முடியவில்லை... நான் வழங்கிய இறையாசி உன்னைச் சரியாகக் குறிபார்க்க விடாமல் செய்திருக்கும். அடுத்தமுறை நீ என்னைச் சுட நினைத்தால், தனியாக இருந்துகொண்டு என்னைச் சுட முயற்சி செய். அப்பொழுது உன்னால் என்னைச் சரியாகக் குறிவைத்துச் சுட முடியும்” என்றார். தொடர்ந்து அவர் அவனிடம், “நீ என்னைச் சுடமுயன்ற செய்தி உன் வீட்டில் இருக்கின்ற எல்லார்க்கும் எப்படியும் தெரிந்திருக்கும். அவர்கள் அதை நினைத்து மிகவும் வருந்திக்கொண்டிருப்பார்கள். அதனால் நீ உடனடியாக வீட்டிற்குச் சென்று, ‘திருத்தந்தை என்னை மனதார மன்னித்துவிட்டார்’ எனச் சொல்” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார். அவனும் தன்னுடைய வீட்டிற்குச் சென்று, திருத்தந்தை தன்னிடம் கூறியவற்றை அவர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுடைய வருத்தத்தைப் போக்கினான். 

தன்னைக் கொள்ள முயன்றவனையும் திருத்தந்தை மனதார மன்னித்த இச்செய்தி அந்நாட்களில் பத்திரிகைகளில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. 

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் திருத்தந்தை எப்படி தன்னைக் கொல்லமுயன்றவனை மனதார மன்னித்தாரோ அப்படியே இன்றைய முதல் வாசகத்தில் தன்னைக் கொல்ல முயன்ற தன் சகோதரர்களை யோசேப்பு மனதார மன்னிக்கின்றார். அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். 

*குற்றப்பழியோடு இருந்தவர்களை மனதார மன்னித்த யோசேப்பு*

முதல் வாசகத்தில், யாக்கோபு இறந்ததும் அவருடைய பத்துப் புதல்வர்களும், தாங்கள் யோசேப்புக்கு எதிராகத் தவறு செய்ததற்கு அவன் தங்களைப் பழி வாங்குவான் என்று எண்ணத் தொடங்குகின்றார்கள். அது மட்டுமல்லாமல், யாக்கோபு இறப்பதற்கு முன்னம், தாங்கள் செய்த தவறுகளை எல்லாம் யோசேப்பு மன்னிக்கவேண்டும் என்றும் அவர் அவனிடம் கூறச் சொன்னதாகச் சொல்கின்றார்கள். இதைக் கேட்டு யோசேப்பு கண்ணீர் விட்டு அழுகின்றார்.

யோசேப்பு தன் சகோதரர்கள் செய்த குற்றத்தை ஏற்கனவே மன்னித்திருந்தார் (தொநூ 45: 5). அப்படியிருந்தும் அவர்கள் அதை நம்பமால், தன் சகோதரன் தங்களை முழுமையாக மன்னிக்கவில்லை என்ற குற்றவுணர்வோடே இருக்கின்றார்கள். அதனால்தான் அவர்கள் தங்களுடைய தந்தையின் இறப்பிற்குப் பின் யோசேப்பு தங்களைப் பழிவாங்குவார் என்று நினைக்கின்றார்கள். இந்நிலையில்தான் யோசேப்பு அவர்களை மனதார மன்னித்து, அவர்களை அவர்களுடைய குற்றவுணர்விலிருந்து வெளியே வரச் செய்கின்றார்.

*தீமையில் நன்மை இருப்பதாக எடுத்துச் சொன்ன யோசேப்பு*

யோசேப்பை அவர்களுடைய சகோதரர்கள் பத்துப் பேரும் சேர்ந்து கொல்ல முயன்றார்கள். ஆனால், அவர்களுள் ஒருவன், அவனைக் கொல்லவேண்டும்... விற்றுவிடுவோம் என்று சொல்ல, அதுபோன்றே செய்தார்கள். இது ஒருபுறத்தில் மிகப்பெரிய குற்றமாக இருந்தாலும், இதன்மூலம் கடவுள் யோசேப்பை எகிப்து நாட்டின் ஆளுநராக உயர்த்தி, பஞ்சக் காலத்தில் அவர்கட்கு உணவிடுமாறு செய்கின்றார். இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் யோசேப்பு தன் சகோதரர்களிடம், “நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால், கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும்பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்” என்று கூறுகின்றார். 

ஆகையால், நம்முடைய வாழ்க்கையில் நடக்கின்ற சில எதிர்பாராத சம்பவங்களை நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்காமல், அதைத் இறைத்திருவுளமென ஏற்று, அவருடைய திருவுளத்திற்குப் பணிந்து நடக்கக் கற்றுக்கொள்வோம். 

*சிந்தனை*

‘ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்கவேண்டும்’ (கொலோ 3:13) என்பார் பவுல். ஆகையால், யோசேப்பு தன் சகோதரர்களை மன்னித்து போல, ஆண்டவர் நம்மை மன்னித்தது போல், நாமும் ஒருவர் மற்றவரை மன்னிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.     

 
*"GOD IS LOVE"* 

தூய ஹென்றி வாழ்க்கை வரலாறு

_“சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள் “ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்” என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள். அவர் தமது நிலத்தை விற்று அந்த பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார். (திப 4)_

*வாழ்க்கை வரலாறு*

இன்று நாம் நினைவுகூரும் ஹென்றி, 972 ஆம் ஆண்டு, மே திங்கள் 6 ஆம் நாள், (ஜெர்மனி) பவேரியில் இருந்த அரச குடும்பத்தில் பிறந்தார். இவர் தன்னுடைய கல்வியை ஆயர் வோல்ப்காங் என்பவரிடத்தில் கற்று, அறிவில் சிறந்து விளங்கி வந்தார். 

இப்படி இவருடைய வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும்போது, இவருடைய தந்தை இறந்துபோனார். அதனால் இவர் ஜெர்மனியின் அரசராகப் பொறுபேற்றார். இவர் அரசராகப் பொறுப்பேற்றபோது இவருக்கு வயது 30 தான். வயதில் மிகச் சிறியவராக ஆனபோதும்கூட, இவர் மக்களை சிறப்பான முறையில் வளர்த்தெடுத்தார். இதனால் இவருக்கு மக்களுக்கு மத்தியில் மிகுந்த செல்வாக்கு உண்டானது.

1014 ஆம் ஆண்டு இவர் உரோமைக்குச் சென்றபோது, அப்போது திருத்தந்தையாக இருந்த எட்டாம் ஆசிர்வாதப்பர், இவருடைய எடுத்துக்காட்டான வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, இவரை உரோமைக்கும் அரசராக நியமித்தார். அந்நாட்களில் உரோமையின் மீது பலர் படையெடுத்து வந்தார்கள். அவர்கள் அனைவரையும்  இவர் தன்னுடைய வலிமையால் வெற்றிகொண்டார். இன்னொரு சமயம் இவருடைய சகோதரரே இவருக்கு எதிராகப் போர்தொடுத்தார். அவரையும் இவர் தன்னுடைய வலிமை மிக்க கரத்தால் வெற்றி கொண்டார்.

இவர் நிறைய நிலங்களை ஆலயம் கட்டுவதற்கும் துறவு மடங்களை நிறுவுவதற்கும் தானமாகத் தந்தார். அதோடு கூட, ஏரளமான ஆலயங்களையும் துறவுமடங்களையும் கட்டித் தந்தார். இப்படி திருச்சபையின் வளர்ச்சியில் தன்னை முழுமையாய் அர்ப்பணித்துக் கொண்ட இவர், குனகுந்த் என்ற பெண்மணியை மணந்தார். மணவாழ்க்கையைக் கூட, ஒரு துறவு வாழ்க்கையைப் போல் தான் வாழ்ந்து வந்தார். 

ஹென்றி ஏழை எளியவர்களிடத்தில் மிகுந்த அன்பு காட்டினார். அவர்களுடைய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து மக்கள் போற்றும் அரசராக விளங்கினார். இப்படி ஆன்மீகப் பணியையும் மக்கள் பணியையும் இணைந்தே செய்து வந்த ஹென்றி 1024 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் நாள், உடல்நலமுற்று இறந்து போனார். இவருக்கு 1146 ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் யூஜின் என்பவரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

*கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்*  

தூய ஹென்றியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். 

*1. திருச்சபையின் வளர்ச்சிப் பணிகளில் பொதுநிலையினரின் பங்கு*
  
தூய ஹென்றியின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது ஒரு பொதுநிலையினராக இருந்து, திருச்சபையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள்தான் நம்முடைய நினைவுக்கு வந்து போகிறது. ஹென்றி நினைத்திருந்தால் எப்படியும் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அவர் திருச்சபையோடு இணைந்தே பயணித்தார். திருச்சபையோடு இணைந்தே பணியாற்றினார். 

தூய ஹென்றியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று திருச்சபையின் வளர்ச்சிக்காக நான் என்னை முழுமையாய் அர்ப்பணிக்கின்றேனா? தாய் திருச்சபை முன்னெடுக்கின்ற காரியங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்குகின்றேனா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு வேண்டும். இதில் ஒன்று குறைந்தாலும் பயணம் சரியாக இருக்காது. திருச்சபையும் அப்படித்தான். இறையடியார்களால் மட்டும் இந்தத் திருச்சபை முழுமையாக இயங்கிவிடாது. இது முழுமையாக இயங்குவதற்கு பொதுநிலையினர் தங்களுடைய பங்களிப்பினைத் தரவேண்டும். இன்றைக்கு ஒருசில பொதுநிலையினர் நாம் எதற்கு திருச்சபையின் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவேண்டும்? அதில் பங்கெடுக்க வேண்டும்? என்று என்று விலகிச் செல்லக்கூடிய போக்கு நிலவிக்கொண்டிருக்கின்றது. இது ஒரு தவறான போக்கும்கூட. திருச்சபை வளர்வதற்கு இறைமக்களும் சரி, இறையடியார்களும் சரி ஒருவர் மற்றவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும், ஒத்துழைப்பினை நல்கவேண்டும். அப்போது தான் தாயாம் திருச்சபை நல்லவிதமாய் இயங்கும்.

தூய ஹென்றி, தான் அரசர் என்றெல்லாம் பாராமல் திருச்சபையின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். திருப்பணியில் தன்னை முழுமையாய் அர்ப்பணித்துக் கொண்டார்.

ஆகவே, தூய ஹென்றியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று திருச்சபையின் வளர்ச்சியில் நம்மை முழுமையாய் அர்ப்பணிப்போம், எப்போதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- *மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*
 
*"GOD IS LOVE"*