Sunday 13 February 2022

குறள் : 376 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம.

குறள் : 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

மு.வ உரை :
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.

கலைஞர் உரை :
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.

சாலமன் பாப்பையா உரை :
எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.

Kural 376
Pariyinum Aakaavaam Paalalla Uyththuch
Choriyinum Pokaa Thama

Explanation :
Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that  which fate has made his  cannot be lost  although one should even take it and throw it away


உலக மக்கள் அனைவருக்கும்  ஈரடியில் உலக தத்துவத்தை எடுத்துரைக்கும் இது போன்ற திருக்குறளை உங்கள் நண்பர்களுக்கும் பகிர இங்கே கிளிக் செய்யுங்கள்.
https://goo.gl/qoVvX5

No comments:

Post a Comment