Monday 17 May 2021

நேரமோ இப்போது ஏராளமாக உள்ளது ஆனால் கனவுகளை மெய்ப்பிக்க வழியில்லை.

*இதுதான் விதியோ*
*விதியின் சதியோ?*
---------------------------------------------

*★காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முககவசம் அணிவது கட்டாயம்.*

*★சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக முடியாது.*

*★மக்களின் கைகள் கழுவிக்கழுவி சுத்தமாக உள்ளன ஆனால் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது.*

*★நண்பர்களுக்கு நிறைய நேரமிருக்கிறது ஆனால் ஒன்று சேர முடியாது.*

*★சுவையாக சமைக்கத்தெரியும் ஆனால் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது.*

*★ஞாயிறுகள் எதிர்பார்க்க வைத்தன திங்கள்கிழமைகள் சுமையாக இருந்தன ஆனால் இப்போது நாட்கள் நகர மறுக்கின்றன.*

*★பணம் வைத்திருப்பவர் அதை செலவழிக்க வழியில்லாமல் இருக்கிறார்.*

*★பணமில்லாதவரோ அதை சம்பாதிக்க வழியில்லாமல் இருக்கிறார்.*

*★நேரமோ இப்போது ஏராளமாக உள்ளது ஆனால் கனவுகளை மெய்ப்பிக்க வழியில்லை.*

*★குற்றவாளி நம்மைச்சுற்றி இருக்கிறான் ஆனால் கண்ணுக்கு தெரியாமல்.*

கடைசியாக ஒன்று.. 

*★நம்முடன் வாழ்ந்து  இம்மண்ணைவிட்டு மறைபவரை கூட வழியனுப்ப முடியவில்லை.*
🙏🙏🙏

யாரோ அழகாக எழுதியது.
நட்புடன் பகிர்ந்து கொள்கிறேன்🙏🏾

No comments:

Post a Comment