Monday 10 September 2018

நாம ஒன்னு நினைச்சா....?????* *தெய்வம்.ஒன்னு நினைக்குது...!!!!

*நாம ஒன்னு நினைச்சா....?????*
*தெய்வம்.ஒன்னு நினைக்குது...!!!!*
 
கோவில் கூட்டத்தில் வரிசையில்..!!

உண்டியல் அருகே வந்தவுடன்..
ஒரு *பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன்,*
அதைப் பலர் பார்க்கும் படி *பெருமிதமாக,*

ஆனால்....                   *அது சற்று கிழிந்து , வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த நோட்டை.....*

சரி.... விடு....
*கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ....????*

வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...

*வரிசை நகர... நகர.... சில வினாடிகளில் பின்னாளில் இருந்து எனது தோளை தொட்டு ஒருவர்.... 2 000 ஆயிரம் ரூபாய் நோட்டை.. என்னிடம்.. கொடுத்தார்.....*

*அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு,*

*சே.......     எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்..*

பின் *கடவுளை  வணங்கி விட்டு , வெளியே வந்தால்...*

அவரும் அருகே நடக்க...  அவரிடம்..

*சார் நீங்கள் உண்மையிலேயே.... கிரேட் என்றேன்..*

அவர் புரியாமல் *எதுக்கு என்றார்...*

*கடவுளின் உண்டியலில் ரூ 2 000 போடுகிறீர்களே.... எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன் நான்..*

*நானா..???? இல்லங்க.. சார்.. ???*

சார் நீங்க *காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து.... அந்த 2000 ரூபாய் நோட்டு விழுந்தது..,*

*அதைத்தான் நான் எடுத்து உங்களுக்கு  கொடுத்தேன்..*

*அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான்.... உன்னதமான கிரேட் மேன்..  என்றார்....*

*டமார்னு ஒரு சத்தம்.... (வேற என்ன நெஞ்சு தான்)

மற்றவரை ஏமாற்ற நினைத்தால்...
நாம் தான் ஏமாறுவோம்..

அது கடவுளாக இருந்தாலும் சரி...


No comments:

Post a Comment